Saturday, February 29, 2020

ரஜனிகாந்த்! ஜனவரியில் அப்படி! பிப்ரவரியில் இப்படி!

தமிழக மக்கள் ஒற்றுமை மேடை என்கிற போர்வையில் இடதுசாரிகளும் ஒருசில இஸ்லாமிய அமைப்புக்களும் சேர்ந்து ஆரம்பித்திருக்கிற ஒரு அமைப்பு சென்னையில் நடத்திய CAA எதிர்ப்பு அரசியல் மாநாடு நடத்தியதில் விசிகவின் திருமாவளவனும், மதிமுகவின் வைகோவும் கலந்து கொள்ளவில்லை. திமுக சின்னத்தில் நின்று ஜெயித்த எம்பி ரவிக்குமாரும், மதிமுக பேச்சாளர் மல்லை சத்யாவும் கலந்து கொண்டதாகத் தெரிகிறது. திமுகவின் இசுடாலின் கலந்து கொண்டதால் கூட்டம் திரட்டப்பட்டதாகவும் தெரிகிறது. ஹிந்து என்.ராம் ஸ்பெஷல் பேச்சாளர்! ரஜனிகாந்தைப் பற்றி என்.ராம் பேசியதைத் தொடர்ந்து சிலவிஷயங்கள் பின்னணியில் அரங்கேறி இருப்பதாகவும் தகவல்கள் வருகின்றன.


கழுதை கெட்டால் குட்டிச்சுவர் என்றும்  கூட சொல்வதில்லையா? அதுபோல இந்து தமிழ்திசை தளத்தில் பாஜகவை கழற்றி விடுகிறாரா ரஜனி என்ற தலைப்போடு இன்று ரவீந்திரன் துரைசாமி பேட்டி! இங்கு எதையும் நான் ஊகமாகவோ பூடகமாகவோ சொல்ல முற்படவில்லை என்பதை மனதில் வைத்துக் கொள்ளுங்கள்! 


இதற்கெல்லாம் தமிழருவி மணியன் போன்ற ஒருத்தர் தான் விளக்கம், பொழிப்புரை சொல்ல முடியும். ஆனால் முந்தைய பேட்டிகளில் ஏற்பட்ட சந்தேகத்தை பாலன்ஸ் செய்வதற்கு ரஜனிகாந்த் முயற்சிப்பதாகச் சொல்வதும் கூடத் தேவையே இல்லாத ஆணிதான்!


பொருட்படுத்தக் கூடிய அளவுக்கு இங்கே தமிழகத்தில் பிஜேபி களத்திலேயே இல்லை. ஆனால் திமுக அதிமுக அணிகளில் இருக்கும் கட்சிகளுக்கு ரஜனிகாந்த் ஒரு ஆப்ஷன் கொடுத்து, மூன்றாவது அணியை உருவாக்க நினைக்கிறார் என்பதை ரவீந்திரன் துரைசாமி கொஞ்ச காலமாகவே சொல்லிவருகிறார்.

குருட்டுப்பூனை விட்டத்தில் பாய்ந்தால் என்னவாகும் என்பது மாதிரியான ஆராய்ச்சி இங்கே டிவி சேனல் விவாதங்களில் பரபரப்பான விவாதமாக நடந்து கொண்டிருப்பதைப் பார்க்கையில் செமகாமெடியாக இருக்கிறது. ரஜினிகாந்தை விமரிசித்துக் கோவையில் ஒரு அதிமுக கூட்டத்தில் பேசிய இயக்குனர் ஆர். சுந்தர ராஜனுக்கு என்னவோ ஆகிவிட்டது என்று ஏகப்பட்ட வதந்தீ!


2020 ஜனவரி, பிப்ரவரி மாதங்களில் இப்படியாக! மார்ச் மாதம் எப்படியோ?

மீண்டும் சந்திப்போம்.    
    

4 comments:

  1. குருட்டுப் பூனை விட்டம் வரைக்கும் போனதே...

    இதில் குறுக்கே தாவுவது எப்படி!..

    !?...

    ReplyDelete
    Replies
    1. வாருங்கள் துரை செல்வராஜூ சார்!

      விட்டம் வரை போனதா என்ன? சரி, அப்புறம் என்ன ஆகும்?

      Delete
  2. 50 வயது தொடங்கும் நினைப்பதில் பாதி தான் பேச வேண்டும். 60 வயதில் கால் வாசி தான் பேச வேண்டும். 70 ல் 10 சதவிகிதம் தான் பேச வேண்டும். சுந்தர்ராஜன் நல்ல உதாரணம்.

    ReplyDelete
    Replies
    1. வாருங்கள் ஜோதிஜி!

      சுந்தரராஜன் பேசியதை நான் கேட்கவில்லை. ஆனால் ரஜனி ஆதரவாளர்கள், அந்தநாளைய கருணாநிதி, MGR ஆதரவாளர்கள் தரத்தில்தான் இருக்கிறார்கள் என்பதைப் புரிந்துகொண்டேன்.

      Delete

இப்போது பார்த்துக் கொண்டிருப்பது

#கொங்குநாடு முன்களப்பிணியாளர் செந்தில் கதறுகிறார்!

செய்தி எந்த அளவுக்கு நிஜம் என்று தெரியாத போதிலும் தினமலர் இன்று கொளுத்திப்போட்டது, News 18 சேனலில் இருந்து வெளியேற்றப்பட்ட செந்தில் முதல் நி...

முப்பது நாட்களில் அதிகம் பார்த்தது இதைத்தானாம்

இப்படியும் வகைப்படுத்தலாம் Labels

அரசியல் (327) அனுபவம் (253) நையாண்டி (113) 2019 தேர்தல் களம் (91) செய்திகளின் அரசியல் (88) எண்ணங்கள் (49) புத்தகங்கள் (46) மனித வளம் (30) செய்திகள் (28) எது எழுத்து (23) ரங்கராஜ் பாண்டே (23) சிறுகதை (21) தொடரும் விவாதம் (18) அரசியல் களம் (16) கமல் காசர் (15) விமரிசனம் (15) தேர்தல் சீர்திருத்தங்கள் (14) புத்தக விமரிசனம் (14) ஏன் திமுக கூட்டணி வேண்டாம் (13) Change Management (12) ஊடகப் பொய்கள் (12) திராவிட மாயை (12) பதிவர் வட்டம் (12) அக்கம் பக்கம் என்ன சேதி (11) ஊடகங்கள் (11) கூட்டணிப் பாவங்கள் (10) எண்டமூரி வீரேந்திரநாத் (9) காமெடி டைம் (9) புனைவு (9) ஸ்ரீ அரவிந்த அன்னை (9) ஆங்கிலப் புதினங்கள் (8) இடதுசாரிகள் (8) பானாசீனா (8) (சு)வாசிக்கப்போறேங்க (7) எங்கே போகிறோம் (7) ஏய்ப்பதில் கலைஞன் (7) கண்டு கொள்வோம் கழகங்களை (7) சுய முன்னேற்றம் (7) மீள்பதிவு (7) அன்னை எனும் அற்புதப் பேரொளி (6) ஏன் திமுக வேண்டாம் (6) சமூக நீதி (6) சாண்டில்யன் (6) திராவிடப் புரட்டு (6) தேர்தல் முடிவுகள் (6) படித்ததில் பிடித்தது (6) புத்தகம் (6) ராகுல் காண்டி (6) வாசிப்பு அனுபவம் (6) ஸ்ரீரங்கம் வி மோகனரங்கன் (6) இர்விங் வாலஸ் (5) உதிரிகளான இடதுகள் (5) காங்கிரஸ் (5) தரிசன நாள் (5) நா.பார்த்தசாரதி (5) மாற்றங்களுக்குத் தயாராவது (5) மோடி மீது பயம் (5) Tianxia (4) அஞ்சலி (4) ஏன் காங்கிரசும் வேண்டாம் (4) ஒளி பொருந்திய பாதை (4) கவிதை நேரம் (4) சீனா (4) சீனா எழுபது (4) ஜெயகாந்தன் (4) தி.ஜானகிராமன் (4) பேராசையின் எல்லை எது (4) மாற்று அரசியல் (4) ஸ்ரீ அரவிந்தர் (4) உதிரிக் கட்சிகள் (3) காஷ்மீர் பிரச்சினை (3) குறுக்குவழி (3) சண்டே போஸ்ட் (3) சம நீதி (3) சரித்திரக் கதைகள் (3) ஜாக்டோ ஜியோ (3) ஞானாலயா (3) தலைப்புச் செய்தி (3) பதிப்பகங்கள் (3) பாரதியார் (3) பொதுத்துறை (3) ராமச்சந்திர குகா (3) லயோலா (3) வாசிப்பும் யோசிப்பதும் (3) CONகிரஸ் (2) Defeat Congress (2) February 21 (2) The Sunlit Path (2) YSR (2) Yatra (2) அம்பலம் (2) கோமாளிகள் கையில் அரசியல் (2) சமுதாய வீதி (2) சிறுபான்மை அரசியல் (2) சுத்தானந்த பாரதியார் (2) செய்திக்கலவை (2) ஜெகசிற்பியன் (2) ஜெயமோகன் (2) தமிழ் வெப் சீரீஸ் (2) தலைமைப் பண்பு (2) தாலிபான் (2) திரைப்படங்கள் (2) நேரு (2) பழக்கங்களின் அடிமை (2) பிரியங்கா வாத்ரா (2) மம்மூட்டி (2) யாத்ரா (2) ராஜமுத்திரை (2) வரலாறும் படிப்பினையும் (2) வி.திவாகர் (2) CPIM (1) Darshan day message (1) EVM சர்ச்சை (1) The R Document (1) Three C's (1) accidental PM. (1) ma foi (1) ஆர்தர் ஹெய்லி (1) இன்ஸ்டன்ட் போராளிகள் (1) கணக்கன் கட்டுரைகள் (1) கந்துவட்டி ஏகாதிபத்தியம் (1) காந்தியா காண்டியா (1) காரடையான் நோன்பு (1) கிறித்தவம் (1) கொத்தமங்கலம் சுப்பு (1) சகலகலா வல்லி (1) சீனி விசுவநாதன் (1) சொன்னது சரிதானா (1) ஜமீன் (1) ஜெயிப்பதற்கு ஒரு எட்டு (1) ஜெயிப்பது நிஜம் (1) திருக்குவளைச் சோளர்கள் (1) ந.பிச்சமூர்த்தி (1) நித்திலவல்லி. நா.பார்த்தசாரதி (1) படித்தான் பரிந்துரை (1) பிரிவினைக் கும்பல்கள் (1) புதுமைப் பித்தன் (1) புத்தக்ங்கள் (1) புள்ளிராசா வங்கி (1) பொய்கள் (1) மான நஷ்டம் (1) மாற்றங்களை எதிர்கொள்வது (1) மு.வரதராசன் (1) ராபர்ட் லட்லம் (1) ஹிந்து காஷ்மீர் (1)