Friday, February 14, 2020

ஒரு புத்தகம்! கொஞ்சம் வரலாறு! மனதில் பட்டவை!

வரலாறு என்பது வெறும் கடிதங்கள் முதலான ஆவணங்களோ அல்லது நாமாகக் கற்பிதம் செய்து கொள்ளும் பிம்பங்களோ அல்ல. வரலாறு என்பது எழுதுகிறவரின் பார்வையில் இருந்து எழுதப்படுவது, அப்படி எழுதுகிறவரின் பார்வைக்கோளாறு, எழுதிய  வரலாற்றிலும் வெளிப்படும் என்பதை மறுபடியும் சொல்ல வேண்டிய விஷயமாக, சமீபத்தில் வெளியான ஒரு புத்தகம், முன்னர் எழுதப்பட்ட கற்பிதங்கள் மீதான சர்ச்சையை கிளப்பியிருக்கிறது. ஜவஹர்லால் நேரு என்கிற புனிதபிம்பம் தொடர்ச்சியாக சமீப நாட்களாக  அடிவாங்குவது ஏன் என்பதும் நேருவின் புனிதபிம்பத்தைக் காப்பாற்றுவதற்கு சிலர் ஓடி வருவது ஏன் என்பதுமாக பின்னணியில் இருக்கும் இரண்டுபக்க அரசியலையும், இந்த சர்ச்சையில் இருந்து, இன்றைய தலைமுறையினர்  புரிந்து கொள்ள முடியும். ஆனால் ஜவஹர்லால் நேரு, மகாத்மா காந்தி, வல்லபாய் படேல் போன்றவர்களை   இந்த தேசத்தின் ஆகப்பெரும் ஆளுமைகளாக இளையதலைமுறையினர் தெரிந்து கொள்ள விரும்புகிறார்களா என்பதே புரியாத நிலையில், இப்படிப்பட்ட பழங்கதைகளில் சர்ச்சை என்பது எப்படிப் பார்க்கப்படும்?


இந்தப் புத்தகத்தின் விலை ரூ.799/- அமேசானில் ரூ.583/- என்பதான அச்சுப்புத்தகத்தின் விலை ஒரு தனிநபராக மலைக்க வைக்கிற விஷயம். நம்மூர் நூலகங்களில் இதெல்லாம் எப்போதுமே கிடைக்காது என்பதும் லெண்டிங் லைப்ரரிகளுமே கூட வாசகர் விருப்பத்தை அறிந்து  புத்தகங்களை வாங்குவதில்லை என்ற யதார்த்தம், பேசாமல் கிண்டில் unlimited வாசிப்புக்கு மாறிவிடலாம் என்று என்னை யோசிக்க வைக்கிறது. ஒரு ரிட்டையர்ட் ஆசாமி வேறெப்படி யோசிப்பது? 


The Print தளத்தில் சேகர் குப்தா ஒரு 28 நிமிட வீடியோவில் இந்தப் புத்தக வெளியீட்டை ஒட்டி  வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கருடைய ட்வீட்டர் செய்தியைத் தொடர்ந்து கிளம்பியிருக்கிற சர்ச்சையை, இப்படியும் அப்படியுமாக, பச்சையாகச் சொல்வதானால்,  கொஞ்சம் மழுப்பலாகவே சொல்கிறார், காரணம்  நேரு, படேல், போஸ் இவர்களுக்கிடையில் இருந்த உறவு அப்படிப்பட்டது. வல்லபாய் படேலை காந்தி வேறுகாரணத்துக்காக நம்பவில்லை என்பதும் நேருவுக்கும் படேலுக்கும் பலவிஷயங்களில் கருத்து வேறுபாடு வந்தபோது காந்தி மீதிருந்த அபிமானத்தால் வல்லபாய் படேல் அமைதியாக அமைச்சரவையில் இருந்து விலகி ஒதுங்கிக் கொண்டார் என்ற விவரம் பொதுவெளியில் ஆதாரத்தோடு கிடைப்பதுதான்.  

சர்தார் வல்லபாய் படேல் மட்டுமல்ல, நேருவோடு கருத்து வேறுபாடுகொண்ட ராஜாஜி முதற்கொண்டு நிறைய ஆளுமைகள் காங்கிரசிலிருந்து வெளியேறியதும் காங்கிரஸ் கட்சி கொஞ்சம் கொஞ்சமாக நேரு இந்திரா என்று ஆரம்பித்து இன்றைக்கு சோனியா & வாரிசுகளுடைய குடும்பக் கம்பனியாகக் குறுகிப்போய்க் கிட ப்பதில், மகாத்மா காந்திக்கு ஏதோ போனால் போகிறதென்று கொஞ்சம் இடம். உண்மையைச் சொல்லப்போனால் நேரு, இந்திரா இருவருமே கூட போஸ்டர்களில்  மட்டுமே  என்றாகிப் போனதில், நேருவின் பிம்பம் வேறு மாதிரித்தான் என்று வெளிப்படுகிற ஒவ்வொரு தருணத்திலும், சோனியா & கோவின்  அஸ்திவாரத்தையே அசைத்துப் பார்க்கிற மாதிரி ஆகிவிடுவதால் மட்டுமே இத்தனை பதட்டம்! 

இந்த ஒருகாரணமே, இளைய தலைமுறையினர் இந்த சர்ச்சையைக் கூர்ந்து கவனிப்பதற்குப் போதுமானது, கவனிக்கவேண்டும் என்பது என்னுடைய கருத்து.

மீண்டும் சந்திப்போம்.

No comments:

Post a Comment

இப்போது பார்த்துக் கொண்டிருப்பது

#கொங்குநாடு முன்களப்பிணியாளர் செந்தில் கதறுகிறார்!

செய்தி எந்த அளவுக்கு நிஜம் என்று தெரியாத போதிலும் தினமலர் இன்று கொளுத்திப்போட்டது, News 18 சேனலில் இருந்து வெளியேற்றப்பட்ட செந்தில் முதல் நி...

முப்பது நாட்களில் அதிகம் பார்த்தது இதைத்தானாம்

இப்படியும் வகைப்படுத்தலாம் Labels

அரசியல் (327) அனுபவம் (253) நையாண்டி (113) 2019 தேர்தல் களம் (91) செய்திகளின் அரசியல் (88) எண்ணங்கள் (49) புத்தகங்கள் (46) மனித வளம் (30) செய்திகள் (28) எது எழுத்து (23) ரங்கராஜ் பாண்டே (23) சிறுகதை (21) தொடரும் விவாதம் (18) அரசியல் களம் (16) கமல் காசர் (15) விமரிசனம் (15) தேர்தல் சீர்திருத்தங்கள் (14) புத்தக விமரிசனம் (14) ஏன் திமுக கூட்டணி வேண்டாம் (13) Change Management (12) ஊடகப் பொய்கள் (12) திராவிட மாயை (12) பதிவர் வட்டம் (12) அக்கம் பக்கம் என்ன சேதி (11) ஊடகங்கள் (11) கூட்டணிப் பாவங்கள் (10) எண்டமூரி வீரேந்திரநாத் (9) காமெடி டைம் (9) புனைவு (9) ஸ்ரீ அரவிந்த அன்னை (9) ஆங்கிலப் புதினங்கள் (8) இடதுசாரிகள் (8) பானாசீனா (8) (சு)வாசிக்கப்போறேங்க (7) எங்கே போகிறோம் (7) ஏய்ப்பதில் கலைஞன் (7) கண்டு கொள்வோம் கழகங்களை (7) சுய முன்னேற்றம் (7) மீள்பதிவு (7) அன்னை எனும் அற்புதப் பேரொளி (6) ஏன் திமுக வேண்டாம் (6) சமூக நீதி (6) சாண்டில்யன் (6) திராவிடப் புரட்டு (6) தேர்தல் முடிவுகள் (6) படித்ததில் பிடித்தது (6) புத்தகம் (6) ராகுல் காண்டி (6) வாசிப்பு அனுபவம் (6) ஸ்ரீரங்கம் வி மோகனரங்கன் (6) இர்விங் வாலஸ் (5) உதிரிகளான இடதுகள் (5) காங்கிரஸ் (5) தரிசன நாள் (5) நா.பார்த்தசாரதி (5) மாற்றங்களுக்குத் தயாராவது (5) மோடி மீது பயம் (5) Tianxia (4) அஞ்சலி (4) ஏன் காங்கிரசும் வேண்டாம் (4) ஒளி பொருந்திய பாதை (4) கவிதை நேரம் (4) சீனா (4) சீனா எழுபது (4) ஜெயகாந்தன் (4) தி.ஜானகிராமன் (4) பேராசையின் எல்லை எது (4) மாற்று அரசியல் (4) ஸ்ரீ அரவிந்தர் (4) உதிரிக் கட்சிகள் (3) காஷ்மீர் பிரச்சினை (3) குறுக்குவழி (3) சண்டே போஸ்ட் (3) சம நீதி (3) சரித்திரக் கதைகள் (3) ஜாக்டோ ஜியோ (3) ஞானாலயா (3) தலைப்புச் செய்தி (3) பதிப்பகங்கள் (3) பாரதியார் (3) பொதுத்துறை (3) ராமச்சந்திர குகா (3) லயோலா (3) வாசிப்பும் யோசிப்பதும் (3) CONகிரஸ் (2) Defeat Congress (2) February 21 (2) The Sunlit Path (2) YSR (2) Yatra (2) அம்பலம் (2) கோமாளிகள் கையில் அரசியல் (2) சமுதாய வீதி (2) சிறுபான்மை அரசியல் (2) சுத்தானந்த பாரதியார் (2) செய்திக்கலவை (2) ஜெகசிற்பியன் (2) ஜெயமோகன் (2) தமிழ் வெப் சீரீஸ் (2) தலைமைப் பண்பு (2) தாலிபான் (2) திரைப்படங்கள் (2) நேரு (2) பழக்கங்களின் அடிமை (2) பிரியங்கா வாத்ரா (2) மம்மூட்டி (2) யாத்ரா (2) ராஜமுத்திரை (2) வரலாறும் படிப்பினையும் (2) வி.திவாகர் (2) CPIM (1) Darshan day message (1) EVM சர்ச்சை (1) The R Document (1) Three C's (1) accidental PM. (1) ma foi (1) ஆர்தர் ஹெய்லி (1) இன்ஸ்டன்ட் போராளிகள் (1) கணக்கன் கட்டுரைகள் (1) கந்துவட்டி ஏகாதிபத்தியம் (1) காந்தியா காண்டியா (1) காரடையான் நோன்பு (1) கிறித்தவம் (1) கொத்தமங்கலம் சுப்பு (1) சகலகலா வல்லி (1) சீனி விசுவநாதன் (1) சொன்னது சரிதானா (1) ஜமீன் (1) ஜெயிப்பதற்கு ஒரு எட்டு (1) ஜெயிப்பது நிஜம் (1) திருக்குவளைச் சோளர்கள் (1) ந.பிச்சமூர்த்தி (1) நித்திலவல்லி. நா.பார்த்தசாரதி (1) படித்தான் பரிந்துரை (1) பிரிவினைக் கும்பல்கள் (1) புதுமைப் பித்தன் (1) புத்தக்ங்கள் (1) புள்ளிராசா வங்கி (1) பொய்கள் (1) மான நஷ்டம் (1) மாற்றங்களை எதிர்கொள்வது (1) மு.வரதராசன் (1) ராபர்ட் லட்லம் (1) ஹிந்து காஷ்மீர் (1)