Saturday, February 22, 2020

இன்று படித்ததில் முக்கியமான சில செய்திகள்! #Covid-19

Covid-19 என்று நாமகரணம் செய்யப்பட்டிருக்கும் கரோனா வைரஸ் பாதிப்பால் 185 பில்லியன் டாலர்/ 1.38 லட்சம் கோடி யுவான் அளவுக்குச் சீனப்பொருளாதாரம் ஜனவரி பிப்ரவரி மாதங்களில் இழப்பைச் சந்திக்கும் என்று ஜூ மின் என்கிற முன்னாள் IMF துணை மேனேஜிங் டைரக்டரும் தற்போது பெய்ஜிங் சின்குவா பல்கலைக் கழகத்தில் National Financial Research Institute இன் தலைவராக இருப்பவர் இன்று சொன்ன விவரம்.


சுற்றுலாத்துறையில் சுமார் 900 பில்லியன் யுவான் அளவுக்கு சரிவும், உணவு, பானங்களில் நுகர்வோர் குறைந்ததால் 420 பில்லியன் யுவான் அளவுக்கு சரிவும் இருக்கும் என்று மதிப்பிடப் பட்டிருப்பதாக அவர் தெரிவித்திருக்கிறார். ஆன்லைன் கல்வி மற்றும் பொழுதுபோக்குத்துறை  கொஞ்சம் ஈடுகட்டும் என்றாலும், மொத்த இழப்பு 1.38 லட்சம் கோடி யுவான் அளவில் இருக்கும். முதல் காலாண்டில் வளர்ச்சி விகிதம்  3% முதல் 4% வரை குறையலாம். இதை ஈடுகட்ட பத்துமடங்கு வேகத்துடன் செயல்பட வேண்டியிருக்கும் என்கிறார். முழுச்செய்தியும் இங்கே

முகநூலில் இன்றைக்கு படித்ததில் இது முக்கியமாக

கொரானா வைரஸ் சீனாவைச் சீரழித்திருக்கிறது. அசைக்கமுடியாதது என்று உலக நாடுகளால் நம்பப்பட்ட சீனக் கம்யூனிஸ்ட் கட்சி கதிகலங்கிப் போயிருக்கிறது என்பது மட்டும் உண்மை. மிக வலிமையானவர் எனக் கருதப்பட்ட ஜின்பிங்கிற்கு சீனக் கம்யூனிஸ்ட் கட்சிக்குள்ளேயே எதிர்ப்புகள் அதிகமாகியிருக்கின்றன. சாதாரண சீனன் சீனக் கம்யூனிஸ்ட் கட்சியே தனது துன்பத்திற்கெல்லாம் காரணம் என உணரத் தலைப்பட்டிருக்கிறான். சீனாவிற்குள் பெரும் அதிருப்தியும், அச்சமும் இன்றைக்கு நிகழ ஆரம்பித்திருக்கிறது.
இதே நிலைமை இன்னும் ஒரு மாத காலத்திற்கு நீடித்தால் அனேகமாக ஜின்பிங் ஆட்சியிலிருந்து விரட்டியடிக்கப்படலாம். அல்லது கொல்லப்படலாம். அல்லது ஜின்பிங் இரும்புக்கரம் கரம் கொண்டு தனது எதிர்ப்பாளர்களை படுகொலை செய்யலாம் எனப் பலவித சாத்தியங்கள் தென்பட ஆரம்பித்திருக்கின்றன. எல்லா கம்யூனிஸ நாடுகளைப் போல சீனாவிலும் தனிமனித சுதந்திரம் என்பது இல்லை.
இந்தியாவில் எவனும் எதைப்பற்றியும் பேசலாம். எழுதலாம். அல்லது தேச விரோதமாக கூட்டம் கூட்டிக் கூக்குரலிடாம். ஆனால் சீனாவில் எவனும் அதைப்போலச் செய்து விட்டு அடுத்த நாள் உயிரோடு இருப்பது சந்தேகம்தான். சீனாவில் ஃபேஸ்புக்கும் இல்லை, வாட்ஸப்பும் இல்லை, சுதந்திரமான பத்திரிகைகள், தொலைக்காட்சி ஊடகங்கள் என எதுவும் இல்லை. எனவே வெளியில் கசியும் தகவல்கள் அனைத்தும் வெறும் வதந்திகளாக, அச்சமூட்டுபவைகளாக இருக்கின்றன என்பதில் சந்தேகமில்லை.
இந்தியா போன்ற திறந்த, சாதாரண மக்களுக்கு எல்லா உரிமைகளும் உள்ள நாட்டில் வதந்திகள் உடனடியாக தோலுறிக்கப்பட்டு உண்மைகள் சிலமணி நேரத்திலேயே வெளியே வந்துவிடும் வாய்ப்பு இருக்கிறது. ஆனால் சீனாவில் வதந்தி வதந்தியாக அதையும் தாண்டி அச்சமூட்டும் வதந்தியாக மாறி சீனர்களை வாட்டி வதைத்துக் கொண்டிருக்கிறது.
கொரானா வைரஸ் பாதித்தவர்களை சீனா சுட்டுக் கொல்கிறது என்று பரவும் வதந்தியால் சீன நகரங்கள் பெரும் சிறைக்கூடங்களைப் போல மாறிவிட்டன. சீனர்கள் வீடுகளின் கதவுகளை வெல்டிங் செய்து அடைத்து கொண்டு உள்ளேயே வாழ்கிறார்கள். நகரங்களில் ஆள் நடமாட்டமில்லாமால் சாலைகள் வெறிச்சோடிவிட்டன. எங்கும் பெரும் அச்சமும் பதட்டமும் நிலவுகிறது என்பதே உண்மை.
சீன அரசாங்கம் கொரானா வைரஸ் பரவலை பெருமளவு கட்டுப்படுத்திவிட்டதாகக் கூறுவது உண்மையாகக் கூட இருக்கலாம் என்றாலும் உலகம் அதனை நம்பத் தயாராக இல்லை. உலக நாடுகள் விமானப் போக்குவரத்தை முற்றிலும் நிறுத்தி வைத்திருக்கின்றன. சீன உள்நாட்டுப் பொருளாதாரம் ஆட்டம் காண ஆரம்பித்திருக்கிறது.
இன்றுவரை சீனா உலகின் மலிவான ஃபேக்டரியாக இருந்து வந்திருக்கிறது. அங்கிருந்து உலகின் மூலை முடுக்கிற்கு ஏற்றுமதி செய்யப்பட்ட பொருட்கள் அளவில்லாதவை. இன்றைக்கு அத்தனையும் முடங்கிக் கிடக்கிறது. சீனர்கள் தொழிற்சாலைகளுக்குத் திரும்ப அஞ்சி வீட்டுக்குள் முடங்கிக் கிடக்கிறார்கள். தொழிற்சாலைகள் இயஙகவில்லை. துறைமுகங்கள் வெறிச்சோடிக் காணப்படுகின்றன. கம்யூனிஸ சீனர்களை கர்மா கடித்து வைத்துவிட்டது.
இன்னொருபுறம் இதனால் உலகப் பொருளாதாரத்திற்கு ஏற்படப் போகிற பாதிப்புகள் அச்சமூட்டுபவை. சீனாவிலிருந்து வரும் பொருட்களை நம்பி உலகின் பல நாடுகளின் தொழிற்சாலைகள் இருக்கின்றன. இன்றைக்கு அது அத்தனையும் நின்று போயிருக்கிறது. இதனால் ஏற்படும் பாதிப்பு மிக, மிகப் பெரியதாக இருக்கும் என்றே எண்ணுகிறேன். இன்னும் இரண்டு மாதங்களில் இதன் தாக்கம் தெரியும். இந்தியாவும் சந்தேகமில்லாமல் பாதிப்பிற்கு உள்ளாகும் என்றாலும் அமெரிக்கா போன்ற நாடுகளுக்கு உண்டாகும் பாதிப்பை விடவும் மிகக் குறைவாகவே இருக்கும் என்பதில் சந்தேககமில்லை.
இன்னும் ஓரிரு வாரங்களுக்குள் அமெரிக்க பங்குச் சந்தை கீழிறங்கும் என்பது என்னுடைய கணிப்பு. அது தவறாக இருப்பதாக. இந்தியப் பங்குச் சந்தைக்கும் பாதிப்பு உண்டாகலாம்.
இன்னொருபுறம் இது இந்தியாவிற்கு ஒரு மாபெரும் வாய்ப்பு. அதனை இந்தியா எப்படி எதிர்கொள்ளப் போகிறது என்பதினை பொறுத்திருந்து பார்க்க வேண்டும். 

இதில் சிவப்பெழுத்தில் காட்டப்பட்டிருக்கும் பகுதிகள் சரியானதல்ல என்றே எனக்குப் படுகிறது. கொஞ்சம் அதீதமானவை என்றே நினைக்கிறேன். ஆனால் பிப்ரவரி மாதத்துக்கு மேலும் கரோனா வைரஸ் பாதிப்பை சீனா கட்டுப்படுத்தத் தவறினால் அதன் பொருளாதாரம் ஏப்ரல் - ஜூன் இரண்டாவது காலாண்டிலும் சரிவைத் தொடர்ந்து சந்திக்கும் என்பதில் சந்தேகமில்லை. கடைசிப்பாராவில், இது இந்தியாவுக்கு மாபெரும் வாய்ப்பு என்று எதைவைத்து சொல்கிறார்? இந்தியத் தொழில் அதிபர்கள் எவரும் இதை ஒரு சவாலாக ஏற்று செயலில் இறங்கி விடுவார்கள் என்பதற்கான எந்த அறிகுறியாவது இந்த இரண்டு மாதங்களில் தெரிந்ததா? 


சீனர்கள் தடுமாறிக் கொண்டிருக்கிறார்கள் என்பது வரை சரி! சரிகிறார்கள், வீழ்ந்துவிட்டார்கள் என்பது அதீத கற்பனை.

    
இப்போதைக்கு கரோனா வைரஸ் பாதிப்பைக் கட்டுக்குள் வைத்திருக்கும் ஒரே நாடு சிங்கப்பூர் தான் போல!  ஜனங்களை கலவரப்படுத்தாமல், அதேநேரம் உறுதியான மருத்துவ நடவடிக்கைகளை மேற்கொண்டு, நிலைமையைக் கட்டுக்குள் வைத்திருக்கிறார்கள்.

அதே மாதிரி ஒரு பொறுப்புணர்வும் கட்டுப்பாடும் இந்தப் பிரச்சினையைப் பற்றி எழுதுவதிலும் கூட இருக்கவேண்டும் என்பதுமட்டும் எனக்கு நன்றாகப் புரிகிறது!
     
 மீண்டும் சந்திப்போம்.  

7 comments:

  1. முக்கியமான அழகான கட்டுரையிது.

    மேக் இன் இந்தியா முழக்கம் தொடங்கி எத்தனை வருடங்கள் ஆகியுள்ளது. நம் நிலைமை என்ன?

    ReplyDelete
    Replies
    1. வாருங்கள் ஜோதி ஜி!

      சுதேசி இயக்கத்திலிருந்து ஆரம்பிக்கலாமா? சோஷலிசச் சிற்பி நேரு காலத்திலிருந்து ....?

      Delete
    2. சரி ஆரம்பிங்க. தெரிந்து கொள்ள விரும்புகிறேன்.

      Delete
    3. Make in India அவ்வளவு சீப்பான கோஷமாகிப்போய்விட்டது இல்லையா? இது அரசின் குற்றமா? தொழில்துறையின் குற்றமா? இதற்கான பதிலிலேயே எல்லாமும் அடங்கிவிடுகிறது.

      Delete
  2. சிங்கப்பூர் அரசு சரியான பாதையில் சமாளிக்கிறது.   இந்தியாவை நினைத்துக் கவலையாகத்தான் இருக்கிறியாது.  ஒவ்வொன்றிலும் ஊழல், பொறுப்பின்மை, ஒவ்வொன்றுக்கும் அதிகார வர்க்கத்திடம் கெஞ்சி, லஞ்சம் கொடுத்து செய்ய வேண்டிய நிலைமை, ஈகோ பிரச்னைகள்...  எதிர்க்கட்சிகளின் பிரச்னைகள்..

    ReplyDelete
    Replies
    1. //இருக்கிறியாது. //

      *இருக்கிறது.

      Delete
    2. அப்படி ஒரேயடியாகச் சலித்துக் கொள்ளவேண்டியதுகூட அவசியமில்லையே ஸ்ரீராம்! ஒவ்வொரு சிக்கலும் தீர்வுகளுடன்தான் வருகிறது என்பதில் எனக்கு நம்பிக்கை இருக்கிறது.

      Delete

இப்போது பார்த்துக் கொண்டிருப்பது

#கொங்குநாடு முன்களப்பிணியாளர் செந்தில் கதறுகிறார்!

செய்தி எந்த அளவுக்கு நிஜம் என்று தெரியாத போதிலும் தினமலர் இன்று கொளுத்திப்போட்டது, News 18 சேனலில் இருந்து வெளியேற்றப்பட்ட செந்தில் முதல் நி...

முப்பது நாட்களில் அதிகம் பார்த்தது இதைத்தானாம்

இப்படியும் வகைப்படுத்தலாம் Labels

அரசியல் (327) அனுபவம் (253) நையாண்டி (113) 2019 தேர்தல் களம் (91) செய்திகளின் அரசியல் (88) எண்ணங்கள் (49) புத்தகங்கள் (46) மனித வளம் (30) செய்திகள் (28) எது எழுத்து (23) ரங்கராஜ் பாண்டே (23) சிறுகதை (21) தொடரும் விவாதம் (18) அரசியல் களம் (16) கமல் காசர் (15) விமரிசனம் (15) தேர்தல் சீர்திருத்தங்கள் (14) புத்தக விமரிசனம் (14) ஏன் திமுக கூட்டணி வேண்டாம் (13) Change Management (12) ஊடகப் பொய்கள் (12) திராவிட மாயை (12) பதிவர் வட்டம் (12) அக்கம் பக்கம் என்ன சேதி (11) ஊடகங்கள் (11) கூட்டணிப் பாவங்கள் (10) எண்டமூரி வீரேந்திரநாத் (9) காமெடி டைம் (9) புனைவு (9) ஸ்ரீ அரவிந்த அன்னை (9) ஆங்கிலப் புதினங்கள் (8) இடதுசாரிகள் (8) பானாசீனா (8) (சு)வாசிக்கப்போறேங்க (7) எங்கே போகிறோம் (7) ஏய்ப்பதில் கலைஞன் (7) கண்டு கொள்வோம் கழகங்களை (7) சுய முன்னேற்றம் (7) மீள்பதிவு (7) அன்னை எனும் அற்புதப் பேரொளி (6) ஏன் திமுக வேண்டாம் (6) சமூக நீதி (6) சாண்டில்யன் (6) திராவிடப் புரட்டு (6) தேர்தல் முடிவுகள் (6) படித்ததில் பிடித்தது (6) புத்தகம் (6) ராகுல் காண்டி (6) வாசிப்பு அனுபவம் (6) ஸ்ரீரங்கம் வி மோகனரங்கன் (6) இர்விங் வாலஸ் (5) உதிரிகளான இடதுகள் (5) காங்கிரஸ் (5) தரிசன நாள் (5) நா.பார்த்தசாரதி (5) மாற்றங்களுக்குத் தயாராவது (5) மோடி மீது பயம் (5) Tianxia (4) அஞ்சலி (4) ஏன் காங்கிரசும் வேண்டாம் (4) ஒளி பொருந்திய பாதை (4) கவிதை நேரம் (4) சீனா (4) சீனா எழுபது (4) ஜெயகாந்தன் (4) தி.ஜானகிராமன் (4) பேராசையின் எல்லை எது (4) மாற்று அரசியல் (4) ஸ்ரீ அரவிந்தர் (4) உதிரிக் கட்சிகள் (3) காஷ்மீர் பிரச்சினை (3) குறுக்குவழி (3) சண்டே போஸ்ட் (3) சம நீதி (3) சரித்திரக் கதைகள் (3) ஜாக்டோ ஜியோ (3) ஞானாலயா (3) தலைப்புச் செய்தி (3) பதிப்பகங்கள் (3) பாரதியார் (3) பொதுத்துறை (3) ராமச்சந்திர குகா (3) லயோலா (3) வாசிப்பும் யோசிப்பதும் (3) CONகிரஸ் (2) Defeat Congress (2) February 21 (2) The Sunlit Path (2) YSR (2) Yatra (2) அம்பலம் (2) கோமாளிகள் கையில் அரசியல் (2) சமுதாய வீதி (2) சிறுபான்மை அரசியல் (2) சுத்தானந்த பாரதியார் (2) செய்திக்கலவை (2) ஜெகசிற்பியன் (2) ஜெயமோகன் (2) தமிழ் வெப் சீரீஸ் (2) தலைமைப் பண்பு (2) தாலிபான் (2) திரைப்படங்கள் (2) நேரு (2) பழக்கங்களின் அடிமை (2) பிரியங்கா வாத்ரா (2) மம்மூட்டி (2) யாத்ரா (2) ராஜமுத்திரை (2) வரலாறும் படிப்பினையும் (2) வி.திவாகர் (2) CPIM (1) Darshan day message (1) EVM சர்ச்சை (1) The R Document (1) Three C's (1) accidental PM. (1) ma foi (1) ஆர்தர் ஹெய்லி (1) இன்ஸ்டன்ட் போராளிகள் (1) கணக்கன் கட்டுரைகள் (1) கந்துவட்டி ஏகாதிபத்தியம் (1) காந்தியா காண்டியா (1) காரடையான் நோன்பு (1) கிறித்தவம் (1) கொத்தமங்கலம் சுப்பு (1) சகலகலா வல்லி (1) சீனி விசுவநாதன் (1) சொன்னது சரிதானா (1) ஜமீன் (1) ஜெயிப்பதற்கு ஒரு எட்டு (1) ஜெயிப்பது நிஜம் (1) திருக்குவளைச் சோளர்கள் (1) ந.பிச்சமூர்த்தி (1) நித்திலவல்லி. நா.பார்த்தசாரதி (1) படித்தான் பரிந்துரை (1) பிரிவினைக் கும்பல்கள் (1) புதுமைப் பித்தன் (1) புத்தக்ங்கள் (1) புள்ளிராசா வங்கி (1) பொய்கள் (1) மான நஷ்டம் (1) மாற்றங்களை எதிர்கொள்வது (1) மு.வரதராசன் (1) ராபர்ட் லட்லம் (1) ஹிந்து காஷ்மீர் (1)