Monday, November 18, 2019

கேள்வி பிறந்தது அன்று! நல்ல பதிலும் கிடைத்தது இன்று!

கவியரசர் கண்ணதாசனின் இந்தத் திரைப்படப் பாடல் வரிகள் நினைவில் இழையோடஇது தொடர்பாக முந்தி எழுதிய பதிவொன்றைப் பற்றிச் சிந்தித்துக் கொண்டிருந்தேன்.


கேள்வி என்னவாக வேண்டுமானாலும் இருந்து விட்டுப் போகட்டும்,

"இங்கேயேஇப்போதே கூட விடை கிடைத்து விடலாம்அது நாம் எவ்வளவு நம்பிக்கையோடும்ஆர்வத்தோடும் தேடுகிறோம் என்பதைப் பொறுத்தது மட்டுமே."

இறைவனது அருள்நாம் அறியாமலேயேநம்மை ஒரு பேரருள் திட்டத்தின் படி நடத்திக் கொண்டே இருக்கிறதுநம்முடைய சம்மதம்அல்லது மறுப்பு எதுவானாலும் சரிசூத்திரதாரியாக இருந்து நம்மை வழிநடத்திச் செல்லும் நாயகன் ஒருவன்நமக்கு உள்ளேயும்வெளியேயும் இருந்து நடத்திக் கொண்டே இருக்கிறான்.

[I+pray+to+thee+guide+copy.jpg]

"எங்கேயடா இருக்கிறான் உன் ஹரி?" என்று உறுமுகிறான் இரணியன்.

"
எங்கே இல்லை ஹரிஅவன் தூணிலும் இருப்பான்துரும்பிலும் இருப்பான்இல்லைஇல்லை என்று நீங்கள் மறுத்துச் சொல்லிக் கொண்டே இருக்கிறீர்களேஅந்தச் சொல்லிலும் இருப்பான்என்கிறது குழந்தை பிரகலாதன்.

கதை சொல்லிகள்சுவாரசியத்திற்காக இப்படிச் சொல்கிறார்கள்பிரகலாதன்தூணில் இருக்கிறான் என்று சொல்லிவிட்டானேஎந்தத் தூண் என்று கூடச் சொல்லத் தெரியவில்லையேஅதனால் அங்கிருந்த எல்லாத் தூண்களிலும் எம்பெருமான் நிறைந்திருந்தானாம்அதில் ஒரு தூணை இரணியன் எட்டி உதைக்கதூண் பிளந்து அங்கே சிங்கப் பிரானாய் எழுந்து அவனை முடித்தான்அங்கே எம்பிரான் எல்லாத் தூண்களிலும் எழுந்தருளினான் என்றதுகதை கேட்பவர்களுக்கு சுவாரசியமாக இருக்க வேண்டும் என்பதற்காக மட்டுமேஎல்லாத் தூண்களிலும்துரும்பிலும்அவனை இல்லைஇல்லைஎன்று மறுத்துச் சொன்ன நாத்திக வார்த்தைகளிலும் அவன் அப்போது மட்டுமல்லஎப்போதுமே இருக்கிறான்.

கதை சொல்லிஅதற்குள் ஒரு கருத்தையும் வைத்துச் சிந்திக்க வைக்கலாம் என்று தான் நம்முடைய முன்னவர்கள்நிறையச் சொல்லிப் போய் ருக்கிறார்கள்கதையை உல்டா அடிக்கக் கற்றுக் கொண்ட அளவுக்குஉள்ளே இருக்கும் கருத்தைத்தெரிந்து கொள்ள சோம்பல் கொள்ளும் ஒரு தலைமுறை பின்னால் உருவாகும் என்று அவர்கள் எதிர்பார்த்திருக்க மாட்டார்கள்!!

கேள்வி பிறந்தது அன்றுநல்ல பதிலும் கிடைத்தது இன்று!

நீங்கள் ஒரு குறிப்பிட்ட சூழலில்இருக்கிறீர்கள்சில சம்பவங்கள் நிகழ்கின்றனபெரும்பாலும் நீங்கள் ஆசைப்பட்டதற்கு நேர்மாறாகஅல்லது இப்படி நடந்தால் நன்றாக இருக்கும் என்று நீங்கள் நினைப்பதற்கு மாறாகத் தான் நடக்கும்.அப்படி நடக்கும்போது நினைத்தபடி நடக்கவில்லையே என்று ரொம்ப ஃபீல் பண்ணி"இது மட்டும் இப்படி நடந்திருந்தால் எவ்வளவு நன்றாக இருந்திருக்கும்இது மட்டும் அல்லது அது மட்டும் இப்படி இருந்திருந்தால்......." என்று வருத்தப் படுவோமாஇல்லையா?

நாட்கள்,வருடங்கள் ஓடும்நிகழ்வுகளில் மறைத்து வைத்திருந்ததுமலர்ந்து வெளிப்பட ஆரம்பிக்கும்அனுபவம் உங்களைக் கொஞ்சம் முன்னேறச் செய்திருக்கும்,  இன்னும் அதிகமான விழிப்புணர்வுடன் இருப்பீர்கள்புரிந்து கொள்வதென்பது எளிதாக இருக்கும்திரும்பிப் பார்க்கிற போதுகவனித்துப் பார்த்தீர்களேயானால்முதலில் ஆச்சரியமாக இருக்கும்அப்புறம் சிரிப்புக் கூட வரும்ஆரம்பத்தில்,எவையெல்லாம் மிக மோசமான அனுவவம் என்றும்சாதகமற்றதாகவும் தோன்றியதோஅவைகளே பின்னால் திரும்பிப் பார்க்கையில்உண்மையில் நீங்கள் முன்னேறுவதற்குத் தேவைப் பட்டதாகவும்சிறந்ததாகவும் தெரிய வரும்போது சிரிப்பு வராமல் என்ன செய்யும்?

"உண்மையிலேயேஇறைவனது கருணை எல்லையற்றது" என்பதையறிந்து நன்றிசொல்லவும் தயங்க மாட்டீர்கள்!

கண்ணை நம்பாதேஉன்னை ஏமாற்றும்!
அறிந்ததென நினைப்பதையும் நம்பாதேஅதுவும் ஏமாற்றும்!

இப்படி வாழ்க்கையில் பல முறை நடந்து அதைத் திரும்பிப்பார்க்கவும் செய்கிற தருணங்களில் தான்மனிதன் கண்மூடித்தனமாகவே இருந்த போதிலும்,  அறிவோடு செய்வது கூடக் கண்ணைக் கட்டுகிற மாதிரி இருக்கும் போதிலும் கூடஇறைவனது கருணை தொடர்ந்து செயல்பட்டுக் கொண்டே இருக்கிறது.

"ஒவ்வொரு உண்மையும்அது வெளிப்படுவதற்கான தருணத்தை எதிர்நோக்கியிருக்கிறது"

எது எந்த நேரத்தில் எப்படி நடக்க வேண்டுமோஅது உலகத்தில் அந்தந்தச் சூழலுக்கேற்றபடி நடந்துகொண்டுதான் இருக்கிறதுஇதைத் தான்"ஒவ்வொரு உண்மையும்அது வெளிப்படுவதற்கான தருணத்தை எதிர்நோக்கி ருக்கிறதுஎன்று சொல்கிறோம்உண்மை எப்போதும் இருந்துகொண்டுதான் இருக்கிறதுஅதை நாம்கண்டு கொள்வதற்கு எடுத்துக் கொள்ளும் நேரத்தைத் தான் உண்மை வெளிப்படுவதற்கான நேரம் என்று சொல்கிறோம்.

ஏனென்றால்நம்முடைய பார்வை மிகக் குறுகியதாய் இருந்ததுநம்முடைய ஆசைகள்விருப்பு-வெறுப்புக்கள் பார்வையை மறைத்து விடும் போதுஉண்மையைஉள்ளது உள்ளபடிக்கே பகுத்து அறிய முடியாது.

ஆப்பிள் பழுத்துக் காலங்காலமாகக் கீழே உதிர்ந்து கொண்டு தான் இருந்தனஏன் அப்படி கீழேயே விழ வேண்டும்இந்தப் பக்கமாகவோஅந்தப் பக்கமாகவோஇல்லை மேல்நோக்கியோ போகவில்லை என்பதில் எவரும் அக்கறை எடுத்துக் கொள்ளவில்லைஐசக் நியூடன் வந்து அதைக் கவனித்துச் சொல்கிற வரை 

ஆப்பிள் கீழே விழுவதற்கு புவியீர்ப்பு விசை தான் காரணம் என்கிற உண்மை வெளிப்படவும்ஒரு கால நேரம் வரவேண்டியிருந்தது.

ஒரு அதிசய நிலைக்குள் நுழைகிறோம் !

இப்படிக் கவனிக்கத் தொடங்கும்போதேவிவரிக்க ஒண்ணாத ஒரு அதிசய நிலைக்குள் நுழைகிறோம்வெளியே தெரிகிற தோற்றங்களுக்குப் பின்னால்இறைவனது கருணையை அறிந்துகொள்ளத் தலைப்படும்போதுமுடிவு இல்லாததாய்எல்லா வல்லமையும் படைத்ததாய்எல்லாம் அறிந்ததாய்அனைத்தையும் திட்டமிட்டுஒழுங்குபடுத்திநம்மை வழி நடத்துவதாய் உணர்கிறோம்!

நாம் விரும்பினாலும் சரிவிரும்பாவிட்டாலும் சரிநமக்குத் தெரிந்து இருந்தாலும்இல்லையென்றாலும்ஒரு உன்னதமான லட்சியத்தை நோக்கிஇறைவனது கருணை நம்மை வழிநடத்திக் கொண்டே இருக்கிறது. இறை அருள் திறத்தையும்இறைவனோடு சேர்வதையும் அறியும் திறமே அதுஇறைவனை அடைவதென்பதே அது!

அதற்கடுத்த நிலையில்ஒவ்வொரு செயலிலும் அசைவிலும் இறைவனது கருணையை உணர்வதாய்அற்புதமான வலிமையுடன்அதே நேரம் முழுமையானதும்அமைதியானதுமான எதனாலும் அசைக்க முடியாத நம்பிக்கையுடன் கூடிய ஒரு ஆனந்த மயமான வாழ்க்கையைத் தொடருகிறோம்.

எந்த அளவுக்கு முழுமையான ஏற்புத் திறனுடன்முழுமையான ஈடுபாட்டுடன் ஒருவர் இருக்கிறாரோஅந்த அளவுக்கு தெய்வீகச் செயலுக்கு எதிரான பூமியின் எதிர்ப்புத் தன்மை மறைந்து விடுகிறதுஇதுவே தெய்வ சித்தத்தோடு நாம் ஏற்படுத்திக் கொள்ள முடிகிற கூட்டு.

அப்படிப்பட்ட நிலையில்இறைவன் என்ன செய்யக் கருதியிருக்கிறான் என்பதை அறிய முடியும்அப்படிப்பட்ட விழிப்புணர்வில்அவனது சித்தத்தோடு இசைந்து செயல்படவும் முடியும்!

-ஸ்ரீ அரவிந்த அன்னையின் அமுத மொழிகள்அன்னை நூற்றாண்டு விழாத் திரட்டுதொகுதி பக்கம் 257-258 இலிருந்து -அடிப்படையாகக் கொண்டு எழுதியதுஆங்கில மூலத்தைப் படிக்க இங்கே



“The Divine does not want a partial and passing victory. His victory must be total and everlasting - that is why we have to endure and wait for the proper time to come. However, with faith and confidence, even the endurance becomes easy.”

The Mother 
  • White Roses, 6th Edition, 1999, page 141
ஸ்ரீ அரவிந்த அன்னையின் மகாசமாதி  தினத்தை ஒட்டி, இது ஒரு மீள்பதிவு 

No comments:

Post a Comment

இப்போது பார்த்துக் கொண்டிருப்பது

#கொங்குநாடு முன்களப்பிணியாளர் செந்தில் கதறுகிறார்!

செய்தி எந்த அளவுக்கு நிஜம் என்று தெரியாத போதிலும் தினமலர் இன்று கொளுத்திப்போட்டது, News 18 சேனலில் இருந்து வெளியேற்றப்பட்ட செந்தில் முதல் நி...

முப்பது நாட்களில் அதிகம் பார்த்தது இதைத்தானாம்

இப்படியும் வகைப்படுத்தலாம் Labels

அரசியல் (327) அனுபவம் (253) நையாண்டி (113) 2019 தேர்தல் களம் (91) செய்திகளின் அரசியல் (88) எண்ணங்கள் (49) புத்தகங்கள் (46) மனித வளம் (30) செய்திகள் (28) எது எழுத்து (23) ரங்கராஜ் பாண்டே (23) சிறுகதை (21) தொடரும் விவாதம் (18) அரசியல் களம் (16) கமல் காசர் (15) விமரிசனம் (15) தேர்தல் சீர்திருத்தங்கள் (14) புத்தக விமரிசனம் (14) ஏன் திமுக கூட்டணி வேண்டாம் (13) Change Management (12) ஊடகப் பொய்கள் (12) திராவிட மாயை (12) பதிவர் வட்டம் (12) அக்கம் பக்கம் என்ன சேதி (11) ஊடகங்கள் (11) கூட்டணிப் பாவங்கள் (10) எண்டமூரி வீரேந்திரநாத் (9) காமெடி டைம் (9) புனைவு (9) ஸ்ரீ அரவிந்த அன்னை (9) ஆங்கிலப் புதினங்கள் (8) இடதுசாரிகள் (8) பானாசீனா (8) (சு)வாசிக்கப்போறேங்க (7) எங்கே போகிறோம் (7) ஏய்ப்பதில் கலைஞன் (7) கண்டு கொள்வோம் கழகங்களை (7) சுய முன்னேற்றம் (7) மீள்பதிவு (7) அன்னை எனும் அற்புதப் பேரொளி (6) ஏன் திமுக வேண்டாம் (6) சமூக நீதி (6) சாண்டில்யன் (6) திராவிடப் புரட்டு (6) தேர்தல் முடிவுகள் (6) படித்ததில் பிடித்தது (6) புத்தகம் (6) ராகுல் காண்டி (6) வாசிப்பு அனுபவம் (6) ஸ்ரீரங்கம் வி மோகனரங்கன் (6) இர்விங் வாலஸ் (5) உதிரிகளான இடதுகள் (5) காங்கிரஸ் (5) தரிசன நாள் (5) நா.பார்த்தசாரதி (5) மாற்றங்களுக்குத் தயாராவது (5) மோடி மீது பயம் (5) Tianxia (4) அஞ்சலி (4) ஏன் காங்கிரசும் வேண்டாம் (4) ஒளி பொருந்திய பாதை (4) கவிதை நேரம் (4) சீனா (4) சீனா எழுபது (4) ஜெயகாந்தன் (4) தி.ஜானகிராமன் (4) பேராசையின் எல்லை எது (4) மாற்று அரசியல் (4) ஸ்ரீ அரவிந்தர் (4) உதிரிக் கட்சிகள் (3) காஷ்மீர் பிரச்சினை (3) குறுக்குவழி (3) சண்டே போஸ்ட் (3) சம நீதி (3) சரித்திரக் கதைகள் (3) ஜாக்டோ ஜியோ (3) ஞானாலயா (3) தலைப்புச் செய்தி (3) பதிப்பகங்கள் (3) பாரதியார் (3) பொதுத்துறை (3) ராமச்சந்திர குகா (3) லயோலா (3) வாசிப்பும் யோசிப்பதும் (3) CONகிரஸ் (2) Defeat Congress (2) February 21 (2) The Sunlit Path (2) YSR (2) Yatra (2) அம்பலம் (2) கோமாளிகள் கையில் அரசியல் (2) சமுதாய வீதி (2) சிறுபான்மை அரசியல் (2) சுத்தானந்த பாரதியார் (2) செய்திக்கலவை (2) ஜெகசிற்பியன் (2) ஜெயமோகன் (2) தமிழ் வெப் சீரீஸ் (2) தலைமைப் பண்பு (2) தாலிபான் (2) திரைப்படங்கள் (2) நேரு (2) பழக்கங்களின் அடிமை (2) பிரியங்கா வாத்ரா (2) மம்மூட்டி (2) யாத்ரா (2) ராஜமுத்திரை (2) வரலாறும் படிப்பினையும் (2) வி.திவாகர் (2) CPIM (1) Darshan day message (1) EVM சர்ச்சை (1) The R Document (1) Three C's (1) accidental PM. (1) ma foi (1) ஆர்தர் ஹெய்லி (1) இன்ஸ்டன்ட் போராளிகள் (1) கணக்கன் கட்டுரைகள் (1) கந்துவட்டி ஏகாதிபத்தியம் (1) காந்தியா காண்டியா (1) காரடையான் நோன்பு (1) கிறித்தவம் (1) கொத்தமங்கலம் சுப்பு (1) சகலகலா வல்லி (1) சீனி விசுவநாதன் (1) சொன்னது சரிதானா (1) ஜமீன் (1) ஜெயிப்பதற்கு ஒரு எட்டு (1) ஜெயிப்பது நிஜம் (1) திருக்குவளைச் சோளர்கள் (1) ந.பிச்சமூர்த்தி (1) நித்திலவல்லி. நா.பார்த்தசாரதி (1) படித்தான் பரிந்துரை (1) பிரிவினைக் கும்பல்கள் (1) புதுமைப் பித்தன் (1) புத்தக்ங்கள் (1) புள்ளிராசா வங்கி (1) பொய்கள் (1) மான நஷ்டம் (1) மாற்றங்களை எதிர்கொள்வது (1) மு.வரதராசன் (1) ராபர்ட் லட்லம் (1) ஹிந்து காஷ்மீர் (1)