Sunday, November 24, 2019

மகாராஷ்டிரா: பிஜேபி சிவசேனா NCP! பின்னே துக்ளக் 50!

இன்றைக்கு அச்சு ஊடகங்களுடைய பரிதாபமான நிலைமை பல்வேறு வடிவங்களில் வெளிப்பட்டிருப்பது அவர்களுடைய ஏலாமையை வெளிச்சம் போட்டுக் காட்டுகிறமாதிரி நேற்றைக்கு மஹாராஷ்டிராவில் பிஜேபி காட்டிய அதிரடி, ரொம்பவுமே வலிக்கச் செய்து விட்டதோ! மாதிரிக்கு ஒரு ஊடக ஊளை!


தங்களைப்பற்றிய மிதமிஞ்சிய மிதப்பில் இருந்த ஊடகங்கள், இப்போதும் கூடத்  தாங்கள் முட்டாள்களாக ஆக்கப்பட்டதை ஒப்புக்கொள்கிற மனநிலையில் இல்லை! என்னவோ பிரதமர் நரேந்திர மோடி ஜனங்களை முட்டாள்களாக ஆக்கிவிட்ட மாதிரி ஒரு பில்டப் கொடுத்திருப்பது வேடிக்கை! அது மட்டுமா? ஊடகங்கள் தங்களுடைய பாடி, பேஸ்மெண்ட் இரண்டுமே படு வீக் என்பதைக் காட்டிக் கொண்ட தருணமாகவும் இருக்கிறது.

    
DNA தளத்துக்காக மஞ்சுள் வரைந்திருக்கிற இந்தக் கார்டூன் கள யதார்த்தத்துக்கு மிக நெருக்கமாக! இதைப் புரிந்துகொள்ளாமல் அகமது படேல் மாதிரி காங்கிரசைக் கெடுக்கவென்றே பிறந்தவர்கள் வீரமாகப் பேசுவதாக நினைத்துக் கொண்டு அரசியல் ரீதியாகவும் சட்ட ரீதியாகவும் மகாராஷ்டிரா விஷயத்தை கையாளுவோம் என்று உளறியிருப்பது இன்னொரு காங்கிரஸ் கொடுங் காமெடி!


இது ட்வீட்டரில் நீலப் பானெர்ஜி வரைந்திருக்கிற கார்டூன்! மஞ்சுள், நீலப், இருவருமே சிவசேனா அகலக் கால் வைத்து சறுக்கி, வீழ்ந்தே  விட்டது என்று அபிப்பிராயம் சொல்வதைக் கவனித்தீர்களா? சரத் பவார் நிலைமை மட்டும் ரொம்பத்தெளிவாக இருக்கிறதாமா?   

முற்பகல் இன்னா செய்யின்
:
1978
1977 தேர்தலில் ஏற்பட்ட தோல்வியை அடுத்து இந்திரா காங்கிரஸ் இரண்டாக உடைந்தது.உடைந்த ஒரு பிரிவிற்கு தேவராஜ் அர்ஸ் தலைவர் .காங்கிரஸ் (எஸ்) S for socialist என்றழைக்கப்பட்ட அதில் ஏ.கே. அந்தோணி (கேரளம்) டி.கே. பரூவா (அஸ்ஸாம்) பி.ஆர். முன்ஷி (வங்கம்) ஆகியோர் இருந்தனர்.மகராஷ்டிரத்திலிருந்து அதில் அங்கம் வகித்தவர் சரத் பவார். (1981ல் அவர் அந்தக் கட்சியின் தலைமைப் பொறுப்பேற்ற போதுதான் அது காங் (எஸ்) என்ற பெயரைப் பெற்றது . அதுவரை அது காங்(அர்ஸ்)
1978 நடந்த தேர்தலில் தனிப் பெரும் கட்சியாக ஜனதா கட்சி 99 இடங்களைப் பெற்றது. இந்திரா காiங்கிரஸ் 69. காங் எஸ் 62. யாருக்கும் பெரும்பானமை இல்லாததால் ஆட்சி அமைப்பதில் சிக்கல் ஏற்பட்டது இரண்டு காங்கிரசும் சேர்ந்து மற்ற உதிரிகளின் ஆதரவில் ஆட்சி அமைத்தனர். வசந்த் தாதா பாடீல் முதல்வராக ஆனார்.
மார்ச்சில் முதல்வரானார். ஜூலைக்குள் பதவிச் சண்டை மூண்டது. ஜூலையில் ஜனதாக் கட்சித் தலைவர் சந்திரசேகருடன் ஒப்பந்தம் செய்து கொண்டு 38 எம்.எல்.ஏக்களுடன் வெளியேறி, வேறு சில உதிரிக்கட்சிகளையும் சேர்த்துக் கொண்டு முற்போக்கு ஜனநாயகக் கூட்டணி என்ற ஓர் கூட்டணியை அமைத்து, பாடீலின் ஆட்சியைக் கவிழ்த்து, பவார் முதலமைச்சராக ஆனார் அப்போது அவருக்கு வயது 38
1980ல் இந்திரா மீண்டும் பிரதமரானார். அதைத் தொடர்ந்து சரத்பவாரின் ஆட்சி கலைக்கப்பட்டது
பிறர்க்கின்னா முற்பகல் செய்யின் தமக்கின்னா
பிற்பகல் தாமே வரும் (திருக்குறள் 319)   

மாலன் இன்னொரு விஷயத்தையும் சேர்த்தே சொல்லி இருக்கலாம்! ஒரு வெளிநாட்டவர் தலைமையை ஏற்க மறுத்து (சோனியாG என்றறிக) P A  சங்மாவுடன் சேர்ந்து  NCP தேசியவாத காங்கிரஸ் கட்சி என்று  பிரதமர் நாற்காலி மீது கண்வைத்து ஆரம்பித்த சரத் பவார், அந்தக்கனவு நிறைவேறாது என்று புரிந்தவுடன் அதே சோனியா காங்கிரசுடன் மறுபடி இழைய ஆரம்பித்தது, மஹாராஷ்டிராவில் கூட்டுறவு சர்க்கரை ஆலைகள் முதல் தாவூத் இப்ராஹிமுடன் ஒட்டி உறவாடித் தப்பிக்க விட்டது, இப்படி ஏராளமான ஊழல் விவகாரங்களில், சில விஷயங்களில் சிவசேனாவின் பால் தாக்கரேவுக்கும் தீனிபோட்டது என்று பலவிதமான பெருமைக்கும் உரியவரை, ஒரே ஒரு திருக்குறளோடு முடித்திருக்க வேண்டாம்! ஒரே வரியில் சொல்ல வேண்டுமானால் 2G ஸ்பெக்ட்ரம் உள்ளிட்டவைகளில் கருணாநிதி சரத் பவாரைக் கொஞ்சம் மிஞ்சிவிட்டார் அல்லது சமன் செய்துவிட்டார் என்று எளிதாகப் புரிந்து கொள்ள ஒரு ஒப்பீடு செய்யலாம்! 


அஜித் பவாரும் லேசுப்பட்டவர் அல்ல.  இவரோடு பிஜேபி கூட்டு வைப்பதா என்று புலம்புவதில் பயனேதும் இல்லை, நடந்துகொண்டிருப்பது பக்கா அரசியல்! உச்ச நீதிமன்றம் வந்து தலைகீழாக மாற்றிவிடும் என்று கற்பனை செய்வதே கூட ஒருவித நகைமுரண்.


திருச்சியில் துக்ளக் 50 நிகழ்ச்சியின் நேரலை. தமிழருவி மணியன் பிஜேபியைக் கண்டித்துப் பேசிக்கொண்டிருக்கிறார். பார்த்துக் கொண்டே பதிவை நிறைவு செய்கிறேன். 

மீண்டும் சந்திப்போம்.                             

No comments:

Post a Comment

இப்போது பார்த்துக் கொண்டிருப்பது

#கொங்குநாடு முன்களப்பிணியாளர் செந்தில் கதறுகிறார்!

செய்தி எந்த அளவுக்கு நிஜம் என்று தெரியாத போதிலும் தினமலர் இன்று கொளுத்திப்போட்டது, News 18 சேனலில் இருந்து வெளியேற்றப்பட்ட செந்தில் முதல் நி...

முப்பது நாட்களில் அதிகம் பார்த்தது இதைத்தானாம்

இப்படியும் வகைப்படுத்தலாம் Labels

அரசியல் (327) அனுபவம் (253) நையாண்டி (113) 2019 தேர்தல் களம் (91) செய்திகளின் அரசியல் (88) எண்ணங்கள் (49) புத்தகங்கள் (46) மனித வளம் (30) செய்திகள் (28) எது எழுத்து (23) ரங்கராஜ் பாண்டே (23) சிறுகதை (21) தொடரும் விவாதம் (18) அரசியல் களம் (16) கமல் காசர் (15) விமரிசனம் (15) தேர்தல் சீர்திருத்தங்கள் (14) புத்தக விமரிசனம் (14) ஏன் திமுக கூட்டணி வேண்டாம் (13) Change Management (12) ஊடகப் பொய்கள் (12) திராவிட மாயை (12) பதிவர் வட்டம் (12) அக்கம் பக்கம் என்ன சேதி (11) ஊடகங்கள் (11) கூட்டணிப் பாவங்கள் (10) எண்டமூரி வீரேந்திரநாத் (9) காமெடி டைம் (9) புனைவு (9) ஸ்ரீ அரவிந்த அன்னை (9) ஆங்கிலப் புதினங்கள் (8) இடதுசாரிகள் (8) பானாசீனா (8) (சு)வாசிக்கப்போறேங்க (7) எங்கே போகிறோம் (7) ஏய்ப்பதில் கலைஞன் (7) கண்டு கொள்வோம் கழகங்களை (7) சுய முன்னேற்றம் (7) மீள்பதிவு (7) அன்னை எனும் அற்புதப் பேரொளி (6) ஏன் திமுக வேண்டாம் (6) சமூக நீதி (6) சாண்டில்யன் (6) திராவிடப் புரட்டு (6) தேர்தல் முடிவுகள் (6) படித்ததில் பிடித்தது (6) புத்தகம் (6) ராகுல் காண்டி (6) வாசிப்பு அனுபவம் (6) ஸ்ரீரங்கம் வி மோகனரங்கன் (6) இர்விங் வாலஸ் (5) உதிரிகளான இடதுகள் (5) காங்கிரஸ் (5) தரிசன நாள் (5) நா.பார்த்தசாரதி (5) மாற்றங்களுக்குத் தயாராவது (5) மோடி மீது பயம் (5) Tianxia (4) அஞ்சலி (4) ஏன் காங்கிரசும் வேண்டாம் (4) ஒளி பொருந்திய பாதை (4) கவிதை நேரம் (4) சீனா (4) சீனா எழுபது (4) ஜெயகாந்தன் (4) தி.ஜானகிராமன் (4) பேராசையின் எல்லை எது (4) மாற்று அரசியல் (4) ஸ்ரீ அரவிந்தர் (4) உதிரிக் கட்சிகள் (3) காஷ்மீர் பிரச்சினை (3) குறுக்குவழி (3) சண்டே போஸ்ட் (3) சம நீதி (3) சரித்திரக் கதைகள் (3) ஜாக்டோ ஜியோ (3) ஞானாலயா (3) தலைப்புச் செய்தி (3) பதிப்பகங்கள் (3) பாரதியார் (3) பொதுத்துறை (3) ராமச்சந்திர குகா (3) லயோலா (3) வாசிப்பும் யோசிப்பதும் (3) CONகிரஸ் (2) Defeat Congress (2) February 21 (2) The Sunlit Path (2) YSR (2) Yatra (2) அம்பலம் (2) கோமாளிகள் கையில் அரசியல் (2) சமுதாய வீதி (2) சிறுபான்மை அரசியல் (2) சுத்தானந்த பாரதியார் (2) செய்திக்கலவை (2) ஜெகசிற்பியன் (2) ஜெயமோகன் (2) தமிழ் வெப் சீரீஸ் (2) தலைமைப் பண்பு (2) தாலிபான் (2) திரைப்படங்கள் (2) நேரு (2) பழக்கங்களின் அடிமை (2) பிரியங்கா வாத்ரா (2) மம்மூட்டி (2) யாத்ரா (2) ராஜமுத்திரை (2) வரலாறும் படிப்பினையும் (2) வி.திவாகர் (2) CPIM (1) Darshan day message (1) EVM சர்ச்சை (1) The R Document (1) Three C's (1) accidental PM. (1) ma foi (1) ஆர்தர் ஹெய்லி (1) இன்ஸ்டன்ட் போராளிகள் (1) கணக்கன் கட்டுரைகள் (1) கந்துவட்டி ஏகாதிபத்தியம் (1) காந்தியா காண்டியா (1) காரடையான் நோன்பு (1) கிறித்தவம் (1) கொத்தமங்கலம் சுப்பு (1) சகலகலா வல்லி (1) சீனி விசுவநாதன் (1) சொன்னது சரிதானா (1) ஜமீன் (1) ஜெயிப்பதற்கு ஒரு எட்டு (1) ஜெயிப்பது நிஜம் (1) திருக்குவளைச் சோளர்கள் (1) ந.பிச்சமூர்த்தி (1) நித்திலவல்லி. நா.பார்த்தசாரதி (1) படித்தான் பரிந்துரை (1) பிரிவினைக் கும்பல்கள் (1) புதுமைப் பித்தன் (1) புத்தக்ங்கள் (1) புள்ளிராசா வங்கி (1) பொய்கள் (1) மான நஷ்டம் (1) மாற்றங்களை எதிர்கொள்வது (1) மு.வரதராசன் (1) ராபர்ட் லட்லம் (1) ஹிந்து காஷ்மீர் (1)