Thursday, October 3, 2019

சின்னச் சின்னதாய் சில சங்கதிகள்!

அக்கம் பக்கம்! என்ன சேதி! தளத்துக்காக சீனா எழுபது! சிலகுறிப்புக்கள்! என்று எழுத ஆரம்பித்தபோது ரொம்பவும் விரிவாக எழுத வேண்டாமே என்று தயங்கிக் கொண்டேதான் எழுத ஆரம்பித்தேன். காரணம் வரலாறு என்றாலேயே நமக்கு அவ்வளவு கசக்குமே, யார் வந்து படிப்பார்கள் என்ற தயக்கம் தான்! ஆனால் அதுதொடர்பாக நிறையவிஷயங்களைத் தேடிப் படிக்க வேண்டிவந்ததும், வாசிக்கிற வழக்கம் பழைய நாட்கள் போலவே கொஞ்சம் கூடிக் கொண்டே வந்ததில் அந்தத் தயக்கம் நிறையவே உடைக்கப்பட்டது! வாசிப்பு அனுபவத்தின் சுகம் அப்படி என்று மீண்டும் உணர்ந்த தருணம்!


அதற்காக இந்தப்பாட்டில் வருகிற மாதிரி, அக்கம் பக்கம் யாருமில்லா பூலோகம் வேண்டும் என்றெல்லாம் சோலோவாகத் திரிகிற ஐடியா எல்லாம் எனக்கிருந்ததில்லை!


கிராமசபைக் கூட்டங்களை கமல் காசராவது நடத்தி வருகிறாரே, அதுவே நல்லவிஷயம்தானே என்கிறீர்களா? கமல் காசருக்கு, அவர் பேசுவதை ஜனங்கள் கேட்பது மட்டும்தான் பிடிக்கும்! அவரிடம் யாரும் கேள்விகள் கேட்டுவிடக் கூடாது  வாதம் செய்யக்கூடாது!  கிராம சபை கூட்டத்தில் ஏற்பட்ட சலசலப்பால் மக்கள் நீதி மய்ய தலைவர் கமல் பாதியில் வெளியேறினார்.காந்தி ஜெயந்தியை முன்னிட்டு ஊராட்சிகளில் நேற்று கிராம சபை கூட்டங்கள் நடந்தன. திருவள்ளூர் மாவட்டம் பழவேற்காடு லைட்அவுஸ் குப்பம் ஊராட்சியில் நடந்த கூட்டத்தில் கமல் பங்கேற்றார். கூட்டத்தில், துறைமுக விரிவாக்கப் பணியால் 50 ஆயிரம் மீனவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதாக சிலர் முறையிட்டனர். அப்போது அ.தி.மு.க., முன்னாள் ஒன்றிய கவுன்சிலர் சுமித்ரா குமார் பல்வேறு கருத்துக்களை கூறினார். இதில் கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. நீண்ட நேரமாகியும் சலசலப்பு ஓயாததால் கூட்டத்தில் இருந்து கமல் வெளியேறினார்.என்று விஷயத்தைப் போட்டுடைக்கிறது தினமலர்.  

  
ரேபரேலி சதர் தொகுதி காங்கிரஸ்  MLA மீண்டும் ஒரு பரபரப்புச் செய்தியாகி இருக்கிறார். கட்சி புறக்கணிக்கச் சொல்லியும் கூட உபி சட்டமன்றத் சிறப்புக் கூட்டத்தில் கலந்து கொண்டதுமல்லாமல் தொகுதியில் ப்ரியங்கா வாத்ரா நடத்திய பாதயாத்திரையில் கலந்து கொள்ளவில்லை என்பது பழைய செய்தி. இவருக்கு Y பிரிவு பாதுகாப்பை உபி அரசு வழங்கி உத்தரவு பிறப்பித்திருப்பது மீண்டும் ஒரு பரபரப்புச் செய்தியாக!  பரபரப்புச் செய்திகளுக்காக நாமெல்லாம் எவ்வளவு காய்ந்து போய்க் கிடக்கிறோம் என்று ஊடகங்கள் உருவாக்கும் பரபரப்பு தான் இது!

      
திமுகவிடம் கம்யூனிஸ்ட் கட்சிகள் வாங்கிய 25 கோடி ரூபாய் விவகாரத்தில் வலது கம்யூனிஸ்ட் கட்சி முத்தரசன் ஆமாய்யா காசு வாங்கினோம் அதுக்கு இப்ப இன்னாங்கிறே என்று தட்டி விட்டுப் போய்விட்டார். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மட்டும் அதற்கு சப்பைக்கட்டுக் கட்டப்படாத பாடுபட்டுக் கொண்டிருக்கிறது. மாரிதாஸ் வேறு இந்த 17 நிமிட வீடியோவில் கேள்விமேல் கேள்வி கேட்டுப் படுத்துகிறார்! CPIM பாவம்ல! விட்ருங்கய்யா!😃😄😅  

நியாயமான கவலைதான் தோழர்களே! 



சதீஷ் ஆசார்யா கார்டூனில் என்ன சொல்ல வருகிறார் என்பது அவர் ஒருவருக்காவது புரிந்திருந்தால் சரி என்பதற்கு மேல் வேறு கமென்ட் எழுத வேண்டுமா என்ன? !!

மீண்டும் சந்திப்போம்.         

No comments:

Post a Comment

இப்போது பார்த்துக் கொண்டிருப்பது

#கொங்குநாடு முன்களப்பிணியாளர் செந்தில் கதறுகிறார்!

செய்தி எந்த அளவுக்கு நிஜம் என்று தெரியாத போதிலும் தினமலர் இன்று கொளுத்திப்போட்டது, News 18 சேனலில் இருந்து வெளியேற்றப்பட்ட செந்தில் முதல் நி...

முப்பது நாட்களில் அதிகம் பார்த்தது இதைத்தானாம்

இப்படியும் வகைப்படுத்தலாம் Labels

அரசியல் (327) அனுபவம் (253) நையாண்டி (113) 2019 தேர்தல் களம் (91) செய்திகளின் அரசியல் (88) எண்ணங்கள் (49) புத்தகங்கள் (46) மனித வளம் (30) செய்திகள் (28) எது எழுத்து (23) ரங்கராஜ் பாண்டே (23) சிறுகதை (21) தொடரும் விவாதம் (18) அரசியல் களம் (16) கமல் காசர் (15) விமரிசனம் (15) தேர்தல் சீர்திருத்தங்கள் (14) புத்தக விமரிசனம் (14) ஏன் திமுக கூட்டணி வேண்டாம் (13) Change Management (12) ஊடகப் பொய்கள் (12) திராவிட மாயை (12) பதிவர் வட்டம் (12) அக்கம் பக்கம் என்ன சேதி (11) ஊடகங்கள் (11) கூட்டணிப் பாவங்கள் (10) எண்டமூரி வீரேந்திரநாத் (9) காமெடி டைம் (9) புனைவு (9) ஸ்ரீ அரவிந்த அன்னை (9) ஆங்கிலப் புதினங்கள் (8) இடதுசாரிகள் (8) பானாசீனா (8) (சு)வாசிக்கப்போறேங்க (7) எங்கே போகிறோம் (7) ஏய்ப்பதில் கலைஞன் (7) கண்டு கொள்வோம் கழகங்களை (7) சுய முன்னேற்றம் (7) மீள்பதிவு (7) அன்னை எனும் அற்புதப் பேரொளி (6) ஏன் திமுக வேண்டாம் (6) சமூக நீதி (6) சாண்டில்யன் (6) திராவிடப் புரட்டு (6) தேர்தல் முடிவுகள் (6) படித்ததில் பிடித்தது (6) புத்தகம் (6) ராகுல் காண்டி (6) வாசிப்பு அனுபவம் (6) ஸ்ரீரங்கம் வி மோகனரங்கன் (6) இர்விங் வாலஸ் (5) உதிரிகளான இடதுகள் (5) காங்கிரஸ் (5) தரிசன நாள் (5) நா.பார்த்தசாரதி (5) மாற்றங்களுக்குத் தயாராவது (5) மோடி மீது பயம் (5) Tianxia (4) அஞ்சலி (4) ஏன் காங்கிரசும் வேண்டாம் (4) ஒளி பொருந்திய பாதை (4) கவிதை நேரம் (4) சீனா (4) சீனா எழுபது (4) ஜெயகாந்தன் (4) தி.ஜானகிராமன் (4) பேராசையின் எல்லை எது (4) மாற்று அரசியல் (4) ஸ்ரீ அரவிந்தர் (4) உதிரிக் கட்சிகள் (3) காஷ்மீர் பிரச்சினை (3) குறுக்குவழி (3) சண்டே போஸ்ட் (3) சம நீதி (3) சரித்திரக் கதைகள் (3) ஜாக்டோ ஜியோ (3) ஞானாலயா (3) தலைப்புச் செய்தி (3) பதிப்பகங்கள் (3) பாரதியார் (3) பொதுத்துறை (3) ராமச்சந்திர குகா (3) லயோலா (3) வாசிப்பும் யோசிப்பதும் (3) CONகிரஸ் (2) Defeat Congress (2) February 21 (2) The Sunlit Path (2) YSR (2) Yatra (2) அம்பலம் (2) கோமாளிகள் கையில் அரசியல் (2) சமுதாய வீதி (2) சிறுபான்மை அரசியல் (2) சுத்தானந்த பாரதியார் (2) செய்திக்கலவை (2) ஜெகசிற்பியன் (2) ஜெயமோகன் (2) தமிழ் வெப் சீரீஸ் (2) தலைமைப் பண்பு (2) தாலிபான் (2) திரைப்படங்கள் (2) நேரு (2) பழக்கங்களின் அடிமை (2) பிரியங்கா வாத்ரா (2) மம்மூட்டி (2) யாத்ரா (2) ராஜமுத்திரை (2) வரலாறும் படிப்பினையும் (2) வி.திவாகர் (2) CPIM (1) Darshan day message (1) EVM சர்ச்சை (1) The R Document (1) Three C's (1) accidental PM. (1) ma foi (1) ஆர்தர் ஹெய்லி (1) இன்ஸ்டன்ட் போராளிகள் (1) கணக்கன் கட்டுரைகள் (1) கந்துவட்டி ஏகாதிபத்தியம் (1) காந்தியா காண்டியா (1) காரடையான் நோன்பு (1) கிறித்தவம் (1) கொத்தமங்கலம் சுப்பு (1) சகலகலா வல்லி (1) சீனி விசுவநாதன் (1) சொன்னது சரிதானா (1) ஜமீன் (1) ஜெயிப்பதற்கு ஒரு எட்டு (1) ஜெயிப்பது நிஜம் (1) திருக்குவளைச் சோளர்கள் (1) ந.பிச்சமூர்த்தி (1) நித்திலவல்லி. நா.பார்த்தசாரதி (1) படித்தான் பரிந்துரை (1) பிரிவினைக் கும்பல்கள் (1) புதுமைப் பித்தன் (1) புத்தக்ங்கள் (1) புள்ளிராசா வங்கி (1) பொய்கள் (1) மான நஷ்டம் (1) மாற்றங்களை எதிர்கொள்வது (1) மு.வரதராசன் (1) ராபர்ட் லட்லம் (1) ஹிந்து காஷ்மீர் (1)