Wednesday, August 7, 2019

அக்கம் பக்கம்! என்ன சேதி! தளத்தில் இன்று

ஒரு புத்தகம்! அப்புறம் உல்டாவாக ஒரு பேட்டி!  என்னவென்று விரிவாகப் படிக்க 



B. R. Mahadevan
காஷ்மீர் யாருக்கு சொந்தம்?
நேற்று வரை பலருக்கும் விடை தெரிந்த அதே நேரம் சிலரால் ஏற்கப்படாத இந்தக் கேள்விக்கு இன்று தெளிவான அரசியல் தீர்வு கிடைத்துவிட்டிருக்கிறது.
படேல், அம்பேத்கர் ஆகியோரின் எதிர்ப்பையும் மீறி மட்டுமல்ல இந்தியாவின் பிற மாநில மக்களைத் துளியும் கலந்தாலோசிக்காமல் காஷ்மீருக்கு என்று சிறப்பு சலுகையை நேரு தன்னிச்சையாக வழங்கினார்.
இன்று அந்த சலுகை திரும்பப் பெறப்பட்டுவிட்டிருக்கிறது.
ஒரு தேசத்தின் ஓர் அங்கமான காஷ்மீரில் அதே தேசத்தின் பிற அங்கங்களான பிற மாநிலத்தினர் நிலம் வாங்கவோ தொழில் தொடங்கவோ முடியாது என்பது தொடங்கி காஷ்மீருக்கு என்று தனி சட்டசபை; தனி கொடி; பாகிஸ்தானியருக்கு காஷ்மீரில் இருக்கும் சில உரிமைகள் கூட இந்தியர்களுக்குக் கிடையாது எனப் பல சலுகைகள் காஷ்மீருக்குத் தரப்பட்டதற்கு என்ன காரணம்?
உண்மையில் காஷ்மீர் யாருக்கு சொந்தம்? இந்தியாவுக்கா... பாகிஸ்தானுக்கா... அல்லது அது தனி நாடாக இருக்கவேண்டுமா? என்ற இந்தப் பிரச்னையின் தொடக்கப்புள்ளியைப்பற்றி எ மிஷன் இன் காஷ்மீர் (தமிழில்: காஷ்மீர் முதல் யுத்தம்) என்ற நூலை ஆண்ட்ரூ வொயிட்ஹெட் எழுதியிருக்கிறார்.
பி.பி.சி.யின் செய்தித் தொடர்பாளரான அவர் வெகு எச்சரிக்கையாக பி.பி.சி.க்கும் இந்தப் புத்தகத்துக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்று முன்கூட்டியே சொல்லிவிட்டுத் தான் ஆரம்பிக்கிறார். ஒருவகையில் இந்தப் புத்தகம் எழுதும் வாய்ப்பு அவருக்கு மிகவும் எதேச்சையாகவே கிடைத்திருக்கிறது. சுய ஆர்வத்தின் பேரிலேயே இதை எழுதியிருக்கிறார்.
பிரிவினையின் போது நடந்த சம்பவங்களைத் தொகுக்க காஷ்மீருக்கு வந்தவர், தான் பேட்டி எடுக்க வேண்டிய நபர் கிடைக்காமல் போகவே சோர்வுடன் திரும்பிப் போகும் வழியில் ஒரு மடாலயத்தைப் பார்த்துவிட்டு மெதுவாக உள்ளே நுழைந்திருக்கிறார். ஒரு புதியதொரு உலகத்துக்குள் எடுத்து வைத்த முதல் காலடி அது என்பது அப்போது அவருக்குத் தெரிந்திருக்கவில்லை.
அந்த மடாலயத்தில்தான் காஷ்மீர் மீதான பாகிஸ்தானின் முதல் அத்துமீறலில் இருந்து அதிர்ஷ்டவசமாக உயிர் பிழைத்த ஒருவர், கிட்டத்தட்ட அந்த வ்ரலாற்றைச் சொல்லிவிட்டு இந்த உலகில் இருந்து விடைபெற வேண்டும் என்று நினைத்ததுபோல், 91 வயதில் மரணத்தின் விளிம்பில் உயிரைக் கையில் பிடித்தபடி இருந்து வந்திருக்கிறார்.
அவர் சொன்ன விஷயங்களே ஆண்ட்ரூ வொயிட் ஹெட்டை இந்தப் புத்தகத்தை எழுதத் தூண்டியிருக்கின்றன. 1947 காலகட்டத்து காஷ்மீரின் சித்திரத்தை நம் மனக் கண் முன் கொண்டுவருவதில் கடும் சிரமத்தை மேற்கொண்டு அதில் வெற்றியும் பெற்றிருக்கிறார்.
இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையில் எல்லைக்கோடு என்ற ஒன்றை பிரிட்டிஷார் வரைந்து கொடுத்தார்கள் என்றாலும் எந்த சம்ஸ்தானத்தையும் இந்தியாவுக்கு சொந்தம்... பாகிஸ்தானுக்கு சொந்தமென்று பிரித்துக் கொடுக்கவில்லை. ஒவ்வொரு சமஸ்தானமும் அதனுடைய விருப்பத்துக்கு ஏற்ப எந்த தேசத்தில் சேர வேண்டுமோ சேர்ந்து கொள்ளலாம். அல்லது சேராமல் தனித்தும் இருந்து கொள்ளலாம் என்றுதான் பிரிட்டிஷார் சொல்லியிருந்தார்கள்.
பிரிட்டிஷாரால் அடிமைப்படுத்தப்பட்டிருந்த இந்துஸ்தானானது பாகிஸ்தான், இந்தியா என்ற இரண்டு தேசங்களாகப் பிரிக்கப்பட்டதில் யாருடன் சேர்வது என்ற பிரச்னை படேலின் பொறுப்பில் விடப்பட்ட 500 சொச்சம் சமஸ்தானங்களில் சில மாதங்களிலேயே சுமுகமாக ஒரு முடிவுக்கு வந்துவிட்டது. ஒரே ஒரு சமஸ்தானத்தைத் தவிர. அது நேருவின் கையில் விடப்பட்ட காஷ்மீர்.
காஷ்மீர் பிரச்னை ஏன் இவ்வளவு சிக்கலாக இருக்கிறது... உண்மையில் என்னதான் நடந்தது என்பதை ஆண்ட்ரூ வொயிட் ஹெட் தகுந்த ஆதாரங்களுடன் வெளிப்படுத்தியிருக்கிறார்.
இந்திய ராணுவக் குறிப்புகளில் ஆரம்பித்து காஷ்மீர் மீதான பாகிஸ்தான் கூலிப்படைகளின் தாக்குதலில் படுகொலை செய்யப்பட்டவர்களின் உறவினர்களிடமிருந்து கிடைத்த கடிதங்கள் வரை அனைத்து அதிகாரபூர்வ, அதிகாரபூர்வமற்ற ஆவணங்களைக் கொண்டு காஷ்மீர் பிரச்னை குறித்த ஒரு விரிவான சித்திரத்தை முன்வைக்கிறார்.

அக்கம் பக்கம்! என்ன சேதி!  தளம் உங்களுக்குப் பிடித்து இருந்தால் புக்மார்க் செய்து வைத்துக் கொண்டோ அல்லது மின்னஞ்சலில் பதிவுகளைப் பெறுகிற மாதிரியோ செய்து கொள்வதுடன் நண்பர்களுக்கும் பரிந்துரை செய்யுங்களேன்!

மீண்டும் சந்திப்போம்.
   

No comments:

Post a Comment

இப்போது பார்த்துக் கொண்டிருப்பது

#கொங்குநாடு முன்களப்பிணியாளர் செந்தில் கதறுகிறார்!

செய்தி எந்த அளவுக்கு நிஜம் என்று தெரியாத போதிலும் தினமலர் இன்று கொளுத்திப்போட்டது, News 18 சேனலில் இருந்து வெளியேற்றப்பட்ட செந்தில் முதல் நி...

முப்பது நாட்களில் அதிகம் பார்த்தது இதைத்தானாம்

இப்படியும் வகைப்படுத்தலாம் Labels

அரசியல் (327) அனுபவம் (253) நையாண்டி (113) 2019 தேர்தல் களம் (91) செய்திகளின் அரசியல் (88) எண்ணங்கள் (49) புத்தகங்கள் (46) மனித வளம் (30) செய்திகள் (28) எது எழுத்து (23) ரங்கராஜ் பாண்டே (23) சிறுகதை (21) தொடரும் விவாதம் (18) அரசியல் களம் (16) கமல் காசர் (15) விமரிசனம் (15) தேர்தல் சீர்திருத்தங்கள் (14) புத்தக விமரிசனம் (14) ஏன் திமுக கூட்டணி வேண்டாம் (13) Change Management (12) ஊடகப் பொய்கள் (12) திராவிட மாயை (12) பதிவர் வட்டம் (12) அக்கம் பக்கம் என்ன சேதி (11) ஊடகங்கள் (11) கூட்டணிப் பாவங்கள் (10) எண்டமூரி வீரேந்திரநாத் (9) காமெடி டைம் (9) புனைவு (9) ஸ்ரீ அரவிந்த அன்னை (9) ஆங்கிலப் புதினங்கள் (8) இடதுசாரிகள் (8) பானாசீனா (8) (சு)வாசிக்கப்போறேங்க (7) எங்கே போகிறோம் (7) ஏய்ப்பதில் கலைஞன் (7) கண்டு கொள்வோம் கழகங்களை (7) சுய முன்னேற்றம் (7) மீள்பதிவு (7) அன்னை எனும் அற்புதப் பேரொளி (6) ஏன் திமுக வேண்டாம் (6) சமூக நீதி (6) சாண்டில்யன் (6) திராவிடப் புரட்டு (6) தேர்தல் முடிவுகள் (6) படித்ததில் பிடித்தது (6) புத்தகம் (6) ராகுல் காண்டி (6) வாசிப்பு அனுபவம் (6) ஸ்ரீரங்கம் வி மோகனரங்கன் (6) இர்விங் வாலஸ் (5) உதிரிகளான இடதுகள் (5) காங்கிரஸ் (5) தரிசன நாள் (5) நா.பார்த்தசாரதி (5) மாற்றங்களுக்குத் தயாராவது (5) மோடி மீது பயம் (5) Tianxia (4) அஞ்சலி (4) ஏன் காங்கிரசும் வேண்டாம் (4) ஒளி பொருந்திய பாதை (4) கவிதை நேரம் (4) சீனா (4) சீனா எழுபது (4) ஜெயகாந்தன் (4) தி.ஜானகிராமன் (4) பேராசையின் எல்லை எது (4) மாற்று அரசியல் (4) ஸ்ரீ அரவிந்தர் (4) உதிரிக் கட்சிகள் (3) காஷ்மீர் பிரச்சினை (3) குறுக்குவழி (3) சண்டே போஸ்ட் (3) சம நீதி (3) சரித்திரக் கதைகள் (3) ஜாக்டோ ஜியோ (3) ஞானாலயா (3) தலைப்புச் செய்தி (3) பதிப்பகங்கள் (3) பாரதியார் (3) பொதுத்துறை (3) ராமச்சந்திர குகா (3) லயோலா (3) வாசிப்பும் யோசிப்பதும் (3) CONகிரஸ் (2) Defeat Congress (2) February 21 (2) The Sunlit Path (2) YSR (2) Yatra (2) அம்பலம் (2) கோமாளிகள் கையில் அரசியல் (2) சமுதாய வீதி (2) சிறுபான்மை அரசியல் (2) சுத்தானந்த பாரதியார் (2) செய்திக்கலவை (2) ஜெகசிற்பியன் (2) ஜெயமோகன் (2) தமிழ் வெப் சீரீஸ் (2) தலைமைப் பண்பு (2) தாலிபான் (2) திரைப்படங்கள் (2) நேரு (2) பழக்கங்களின் அடிமை (2) பிரியங்கா வாத்ரா (2) மம்மூட்டி (2) யாத்ரா (2) ராஜமுத்திரை (2) வரலாறும் படிப்பினையும் (2) வி.திவாகர் (2) CPIM (1) Darshan day message (1) EVM சர்ச்சை (1) The R Document (1) Three C's (1) accidental PM. (1) ma foi (1) ஆர்தர் ஹெய்லி (1) இன்ஸ்டன்ட் போராளிகள் (1) கணக்கன் கட்டுரைகள் (1) கந்துவட்டி ஏகாதிபத்தியம் (1) காந்தியா காண்டியா (1) காரடையான் நோன்பு (1) கிறித்தவம் (1) கொத்தமங்கலம் சுப்பு (1) சகலகலா வல்லி (1) சீனி விசுவநாதன் (1) சொன்னது சரிதானா (1) ஜமீன் (1) ஜெயிப்பதற்கு ஒரு எட்டு (1) ஜெயிப்பது நிஜம் (1) திருக்குவளைச் சோளர்கள் (1) ந.பிச்சமூர்த்தி (1) நித்திலவல்லி. நா.பார்த்தசாரதி (1) படித்தான் பரிந்துரை (1) பிரிவினைக் கும்பல்கள் (1) புதுமைப் பித்தன் (1) புத்தக்ங்கள் (1) புள்ளிராசா வங்கி (1) பொய்கள் (1) மான நஷ்டம் (1) மாற்றங்களை எதிர்கொள்வது (1) மு.வரதராசன் (1) ராபர்ட் லட்லம் (1) ஹிந்து காஷ்மீர் (1)