Friday, August 16, 2019

ஆர்டிகிள் 370 abrogation : இன்றைய செய்திகள் சொல்வதென்ன?

இந்தப்பக்கங்களுக்கு வரும் நண்பர்களுக்கு முன்பே பலமுறை சொன்னமாதிரி, எந்த ஒரு அரசியல் செய்தியையும் இங்கே எடுத்துப் போடுவதற்கு முன்னால், அதை அரசை அல்லது பிஜேபியை ஆதரிக்காத தரப்பிலிருந்து என்ன சொல்கிறார்கள் என்பதைத் தான் சிந்திப்பதற்காக எடுத்துக் கொளகிறேன். என் கருத்தை உருவாக்கிக் கொள்வதற்கு, இரண்டுதரப்பையும் கவனித்து அதன் பிறகே முடிவு செய்கிறேன்.  



Another Pakistan's most loyal media channel after the wire and the quint. என்று இந்த வீடியோவைப்பற்றி ஒரேவரியில் முடித்துக் கொள்கிறார் ஆகாஷ் ஸ்ரீவத்சவா! நான் பார்த்தவரையிலும் பாகிஸ்தானுக்கு விசுவாசிகள் என்பதை விட , காசுக்குத்தான் விசுவாசம், காங்கிரசுக்கு அந்தநாட்களிலிருந்தே விசுவாசம் என்பது எனது கருத்தாக கிருந்தாலும், இந்த 9 நிமிட வீடியோ ஒரு முக்கியமான செய்தியை விவாதிக்கிறது. ஆர்டிகிள் 370 abrogate செய்யப்பட்டதை வைத்து காஷ்மீர் பிரச்சினையை சர்வதேசப்பிரச்சினையாக்க முயலும்  பாகிஸ்தான்  கோரிக்கையை  ஐநா பாதுகாப்புசபை  நிராகரித்துவிட்டாலும், P 5 நாடுகளில் ஒன்றான சீனா காஷ்மீர் விவகாரத்தைப் பாதுகாப்பு சபை விவாதத்துக்கு எடுத்துக் கொள்ள வேண்டும் என்றதை, பாதுகாப்புசபையின் நிரந்தர உறுப்பினர்களான இதர 4 நாடுகள் ஏற்றுக்கொள்ள சம்மதிக்காத நிலையில், நிரந்தர உறுப்பினர் நாடுகளின் ரகசியக்கூட்டத்தில் விவாதிக்கப்பட இருக்கிறது. ஐயையோ, இதைத்தானே உலக அரசியல் எல்லாம் தெரிந்த மேதை வைகோ அன்றைக்கே ராஜ்யசபாவில் எச்சரித்தார் என்று கொடியைத் தூக்கிக் கொண்டு வராதீர்கள்! P5 நாடுகளின் InCamera கூட்டத்தில் முடிவு செய்யப்பட இருப்பது, இதைப்  பொதுவெளியில் விவாதத்துக்கு எடுத்துக் கொள்ளலாமா வேண்டாமா என்பது மட்டும் தான்! அதுதொடர்பான செய்தியைத்தான் மேலே 9 நிமிட வீடியோவில் ஒரு கோடி காட்டுகிறார்கள், அவ்வளவுதான்!


இந்தியா அணு ஆயுதம் வைத்திருந்தாலும் அதை முதலில் உபயோகம் செய்யாது என்று முடிவெடுத்தது நாம் தான்! ஆனால் சூழ்நிலைகள்  மாறும்போது அதேதான் இப்போதும் எங்கள் நிலை என்றே இருக்க முடியுமா? இன்றைக்கு நமது பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் பொக்ரானில் அதைத்தான் தெளிவாகச் சொல்லியிருக்கிறார். பாகிஸ்தானுக்கு மட்டும் விடுக்கப்பட்ட  எச்சரிக்கை தானா இது? பாகிஸ்தானைத் தனது கருவியாகப் பயன்படுத்திக் கொள்ளும் சீனாவுக்கும் சேர்த்துத்  தான் என்று எடுத்துக் கொள்ள முடியாதா? இது 2019! 1962 அல்லது 1965 இல்லை என்று சொல்கிற மாதிரித்தான் எடுத்துக் கொள்ள முடியும். வாஜ்பாய் மறைந்து ஓராண்டாகிற இன்றைக்கு, அணு ஆயுதத்தை இந்தியா முதலில் பயன்படுத்தாது என்று சுயகட்டுப்பாடு விதித்துக் கொண்ட அவரது பெருந்தன்மை இப்போதும் பொருந்துமா என்று கொஞ்சம் யோசித்துப் பாருங்கள்!
      
   
பொதுவாக குடியரசுத்தலைவராக இருப்பவர், இருந்தவர் எவரையும் பொதுவெளியில் சர்ச்சைக்குள்ளாகிற விதத்தில் பேசக்கூடாது எழுதக்கூடாது என்பது           நான் கடைப்பிடிக்கும் ஒரு மரபு. அதனால் பிரணாப் முகர்ஜி குடியரசுத்தலைவராகப் போட்டியிட்ட தருணத்தில் எழுதிய இந்தப் பதிவை ஒருதரம் வாசித்துவிடுங்கள்! சோனியா அந்த நாளிலிருந்து இன்றுவரை அவரை ஏன்நம்பியதே இல்லை என்பதற்கு இந்திராவைப்போலவே மருமகளுக்கும் இருந்த insecurities ஒரு காரணமாக இருக்கலாம்!  இந்திராவுக்கு மிக விசுவாசமாக இருந்த ஒருவருக்கும் சோனியா மற்றும் வாரிசுகளுக்கும் இடையிலான உறவு அந்த அவநம்பிக்கையினால் முற்றிலும் அறுந்துவிட்டது என்கிறது dailyO தளச் செய்தி.   The rumouredly cracked relationship between Pranab Mukherjee and the Gandhis, that was concealed under the paint of niceties, finally came to an end this week, in the dazzling hall of Rashtrapati Bhawan, when Pranab babu received the Bharat Ratna for his contribution to India, courtesy the Modi sarkar.

A relationship that was always apparently plagued with insecurities saw a trust deficit grow when Narendra Modi took over as the Prime Minister of India in May 2014.  கொஞ்சம் இணைப்பில் படித்துப் பார்க்க வேண்டிய செய்தியாக.

மீண்டும் சந்திப்போம்.
  

No comments:

Post a Comment

இப்போது பார்த்துக் கொண்டிருப்பது

#கொங்குநாடு முன்களப்பிணியாளர் செந்தில் கதறுகிறார்!

செய்தி எந்த அளவுக்கு நிஜம் என்று தெரியாத போதிலும் தினமலர் இன்று கொளுத்திப்போட்டது, News 18 சேனலில் இருந்து வெளியேற்றப்பட்ட செந்தில் முதல் நி...

முப்பது நாட்களில் அதிகம் பார்த்தது இதைத்தானாம்

இப்படியும் வகைப்படுத்தலாம் Labels

அரசியல் (327) அனுபவம் (253) நையாண்டி (113) 2019 தேர்தல் களம் (91) செய்திகளின் அரசியல் (88) எண்ணங்கள் (49) புத்தகங்கள் (46) மனித வளம் (30) செய்திகள் (28) எது எழுத்து (23) ரங்கராஜ் பாண்டே (23) சிறுகதை (21) தொடரும் விவாதம் (18) அரசியல் களம் (16) கமல் காசர் (15) விமரிசனம் (15) தேர்தல் சீர்திருத்தங்கள் (14) புத்தக விமரிசனம் (14) ஏன் திமுக கூட்டணி வேண்டாம் (13) Change Management (12) ஊடகப் பொய்கள் (12) திராவிட மாயை (12) பதிவர் வட்டம் (12) அக்கம் பக்கம் என்ன சேதி (11) ஊடகங்கள் (11) கூட்டணிப் பாவங்கள் (10) எண்டமூரி வீரேந்திரநாத் (9) காமெடி டைம் (9) புனைவு (9) ஸ்ரீ அரவிந்த அன்னை (9) ஆங்கிலப் புதினங்கள் (8) இடதுசாரிகள் (8) பானாசீனா (8) (சு)வாசிக்கப்போறேங்க (7) எங்கே போகிறோம் (7) ஏய்ப்பதில் கலைஞன் (7) கண்டு கொள்வோம் கழகங்களை (7) சுய முன்னேற்றம் (7) மீள்பதிவு (7) அன்னை எனும் அற்புதப் பேரொளி (6) ஏன் திமுக வேண்டாம் (6) சமூக நீதி (6) சாண்டில்யன் (6) திராவிடப் புரட்டு (6) தேர்தல் முடிவுகள் (6) படித்ததில் பிடித்தது (6) புத்தகம் (6) ராகுல் காண்டி (6) வாசிப்பு அனுபவம் (6) ஸ்ரீரங்கம் வி மோகனரங்கன் (6) இர்விங் வாலஸ் (5) உதிரிகளான இடதுகள் (5) காங்கிரஸ் (5) தரிசன நாள் (5) நா.பார்த்தசாரதி (5) மாற்றங்களுக்குத் தயாராவது (5) மோடி மீது பயம் (5) Tianxia (4) அஞ்சலி (4) ஏன் காங்கிரசும் வேண்டாம் (4) ஒளி பொருந்திய பாதை (4) கவிதை நேரம் (4) சீனா (4) சீனா எழுபது (4) ஜெயகாந்தன் (4) தி.ஜானகிராமன் (4) பேராசையின் எல்லை எது (4) மாற்று அரசியல் (4) ஸ்ரீ அரவிந்தர் (4) உதிரிக் கட்சிகள் (3) காஷ்மீர் பிரச்சினை (3) குறுக்குவழி (3) சண்டே போஸ்ட் (3) சம நீதி (3) சரித்திரக் கதைகள் (3) ஜாக்டோ ஜியோ (3) ஞானாலயா (3) தலைப்புச் செய்தி (3) பதிப்பகங்கள் (3) பாரதியார் (3) பொதுத்துறை (3) ராமச்சந்திர குகா (3) லயோலா (3) வாசிப்பும் யோசிப்பதும் (3) CONகிரஸ் (2) Defeat Congress (2) February 21 (2) The Sunlit Path (2) YSR (2) Yatra (2) அம்பலம் (2) கோமாளிகள் கையில் அரசியல் (2) சமுதாய வீதி (2) சிறுபான்மை அரசியல் (2) சுத்தானந்த பாரதியார் (2) செய்திக்கலவை (2) ஜெகசிற்பியன் (2) ஜெயமோகன் (2) தமிழ் வெப் சீரீஸ் (2) தலைமைப் பண்பு (2) தாலிபான் (2) திரைப்படங்கள் (2) நேரு (2) பழக்கங்களின் அடிமை (2) பிரியங்கா வாத்ரா (2) மம்மூட்டி (2) யாத்ரா (2) ராஜமுத்திரை (2) வரலாறும் படிப்பினையும் (2) வி.திவாகர் (2) CPIM (1) Darshan day message (1) EVM சர்ச்சை (1) The R Document (1) Three C's (1) accidental PM. (1) ma foi (1) ஆர்தர் ஹெய்லி (1) இன்ஸ்டன்ட் போராளிகள் (1) கணக்கன் கட்டுரைகள் (1) கந்துவட்டி ஏகாதிபத்தியம் (1) காந்தியா காண்டியா (1) காரடையான் நோன்பு (1) கிறித்தவம் (1) கொத்தமங்கலம் சுப்பு (1) சகலகலா வல்லி (1) சீனி விசுவநாதன் (1) சொன்னது சரிதானா (1) ஜமீன் (1) ஜெயிப்பதற்கு ஒரு எட்டு (1) ஜெயிப்பது நிஜம் (1) திருக்குவளைச் சோளர்கள் (1) ந.பிச்சமூர்த்தி (1) நித்திலவல்லி. நா.பார்த்தசாரதி (1) படித்தான் பரிந்துரை (1) பிரிவினைக் கும்பல்கள் (1) புதுமைப் பித்தன் (1) புத்தக்ங்கள் (1) புள்ளிராசா வங்கி (1) பொய்கள் (1) மான நஷ்டம் (1) மாற்றங்களை எதிர்கொள்வது (1) மு.வரதராசன் (1) ராபர்ட் லட்லம் (1) ஹிந்து காஷ்மீர் (1)