Friday, July 5, 2019

செய்தி மூன்று! சுவையும் வேறு! புறநானூறு! வாரிசு! சிரிப்பைத் தொலைத்தவர்!

திருமதி நிர்மலா சீதாராமன் இன்றைக்கு தனது முதல் பட்ஜெட்டை நாடாளுமன்றத்தில் சமர்ப்பித்திருக்கிறார். அதில் புறநானூற்றில் இருந்து பாண்டியன் அறிவுடை நம்பிக்கு பிசிராந்தையார் சொன்ன அறிவுரையாக ஒரு பாடலை மிகப் பொருத்தமாக எடுத்துச் சொல்லி அசத்தியிருக்கிறார்! சொன்னதோடு நாணயமாக வரிசெலுத்துகிற மக்களுக்கு  நன்றியையும் சொன்னது இந்த பட்ஜெட்  அறிக்கையில் ஒரு சுவாரசியம்!


பட்ஜெட் முழு உரையை இனிமேல்தான் அச்சில் முழுதாகப் படிக்க வேண்டும்.  முந்தைய நாட்களில் மதுரை வர்த்தகர் சங்கத்தில் பட்ஜெட்டை எப்படிப் புரிந்து கொள்வது என்றமாதிரி கூட்டங்களில் தவறாமல் போய்க் கேட்டதுண்டு. இப்போது இணையத்திலேயே நிறைய அலசல்கள் காணக்  கிடைப்பதால், ஒவ்வொன்றாகத் தேடிப்பார்க்க வேண்டும். அதன்மீது   பதிவுகள் எழுதி உங்களில் எவரையும் பயமுறுத்தப் போவதில்லை! மகிழ்ச்சிதானே! நிர்மலா புறநானூறு பாடலைச் சொன்னபோது, தயாநிதி மாறன், ஆ!ராசா இருவர் முகத்திலும் அதிர்ச்சி  கலந்த சந்தோஷம்! நான் போட்டால் தெரியும் போடு! தமிழ்ப்பாட்டால் அடிப்பேன் ஓடு என்கிற திரைப்படப்பாடல் பின்னணியில் கேட்டிருக்குமோ?    

   
சிலநாட்களுக்கு முன்னால் ஒரு பிஜேபி தலைவரின் மகன் ஒரு அரசு அதிகாரியைக் கிரிக்கெட் மட்டையால் தாக்கிய சம்பவத்தில் பிரதமர் நரேந்திர மோடி இதுமாதிரிப் போக்கை சகித்துக் கொள்ள முடியாது என்று வெளிப்படையாகவே அறிவித்தார்.அதுமட்டுமல்லாமல் அந்த நபர் மீது கட்சிநடவடிக்கையும் எடுத்திருக்கிறது. நேர்மாறாக காங்கிரசில் என்ன நடக்கிறது? மகாராஷ்டிராவில் முன்னாள் காங்கிரஸ் முதலமைச்சராக இருந்த நாராயண்  ரானேவின் மகன் நிடேஷ் ரானே, இவரும் ஒரு MLA, அதனது ஆட்களுடன் சென்று ஒரு அரசு அதிகாரி மீது சேறு கலந்த நீரை மூன்று வாளிகள் கொட்டி மிரட்டிய காட்சிகள் டிவியில் தொடர்ந்து காட்டப்பட்டுக் கொண்டிருந்தன. போலீஸ்காரர்கள் சமாதானப் படுத்த முயன்றபோது அங்கேயும் ரானே மிரட்டல் தர்பார்! அப்பா நாராயண் ரானே தன்மகன் எந்த அடாவடியும் செய்யவில்லை கூடப்போனவர்கள் தான் செய்தார்கள் என்று கூசாமல் சொல்கிறார். டிவியில் சம்பவம் பிரபலமானதால் போலீஸ்காரர்கள் கைது செய்திருக்கிறார்களாம்! 


நஸ்ரத் ஜஹான்! 29 வயதே ஆன இந்த இளம் நடிகை , திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் எம்பி ஆன கையோடு தான் காதலித்த நிகில் ஜெயின் என்பவரை துருக்கியில் வைத்துத் திருமணமும் செய்து கொண்டார் இப்போது திருமண வரவேற்பு கொல்கத்தாவில், மம்தா பானெர்ஜியும் கலந்து கொண்டாராம்! கொஞ்சம் சிரித்தமுகமாய் இருக்கக் கூடாதோ? சமீபகாலங்களில் மம்தா பானெர்ஜியை சிரித்த முகத்தோடு எங்கேயும் பார்த்ததாய் நினைவுக்கு வரவில்லை.

இவருக்கு தேர்தல் உத்திகளை வகுத்துக்  கொடுக்கிற பிரசாந்த் கிஷோரை நினைத்தால் பாவமாக இருக்கிறது! இன்னும் என்னென்ன பாடெல்லாம் படப்போகிறாரோ?

மீண்டும் சந்திப்போம்.
           

No comments:

Post a Comment

இப்போது பார்த்துக் கொண்டிருப்பது

#கொங்குநாடு முன்களப்பிணியாளர் செந்தில் கதறுகிறார்!

செய்தி எந்த அளவுக்கு நிஜம் என்று தெரியாத போதிலும் தினமலர் இன்று கொளுத்திப்போட்டது, News 18 சேனலில் இருந்து வெளியேற்றப்பட்ட செந்தில் முதல் நி...

முப்பது நாட்களில் அதிகம் பார்த்தது இதைத்தானாம்

இப்படியும் வகைப்படுத்தலாம் Labels

அரசியல் (327) அனுபவம் (253) நையாண்டி (113) 2019 தேர்தல் களம் (91) செய்திகளின் அரசியல் (88) எண்ணங்கள் (49) புத்தகங்கள் (46) மனித வளம் (30) செய்திகள் (28) எது எழுத்து (23) ரங்கராஜ் பாண்டே (23) சிறுகதை (21) தொடரும் விவாதம் (18) அரசியல் களம் (16) கமல் காசர் (15) விமரிசனம் (15) தேர்தல் சீர்திருத்தங்கள் (14) புத்தக விமரிசனம் (14) ஏன் திமுக கூட்டணி வேண்டாம் (13) Change Management (12) ஊடகப் பொய்கள் (12) திராவிட மாயை (12) பதிவர் வட்டம் (12) அக்கம் பக்கம் என்ன சேதி (11) ஊடகங்கள் (11) கூட்டணிப் பாவங்கள் (10) எண்டமூரி வீரேந்திரநாத் (9) காமெடி டைம் (9) புனைவு (9) ஸ்ரீ அரவிந்த அன்னை (9) ஆங்கிலப் புதினங்கள் (8) இடதுசாரிகள் (8) பானாசீனா (8) (சு)வாசிக்கப்போறேங்க (7) எங்கே போகிறோம் (7) ஏய்ப்பதில் கலைஞன் (7) கண்டு கொள்வோம் கழகங்களை (7) சுய முன்னேற்றம் (7) மீள்பதிவு (7) அன்னை எனும் அற்புதப் பேரொளி (6) ஏன் திமுக வேண்டாம் (6) சமூக நீதி (6) சாண்டில்யன் (6) திராவிடப் புரட்டு (6) தேர்தல் முடிவுகள் (6) படித்ததில் பிடித்தது (6) புத்தகம் (6) ராகுல் காண்டி (6) வாசிப்பு அனுபவம் (6) ஸ்ரீரங்கம் வி மோகனரங்கன் (6) இர்விங் வாலஸ் (5) உதிரிகளான இடதுகள் (5) காங்கிரஸ் (5) தரிசன நாள் (5) நா.பார்த்தசாரதி (5) மாற்றங்களுக்குத் தயாராவது (5) மோடி மீது பயம் (5) Tianxia (4) அஞ்சலி (4) ஏன் காங்கிரசும் வேண்டாம் (4) ஒளி பொருந்திய பாதை (4) கவிதை நேரம் (4) சீனா (4) சீனா எழுபது (4) ஜெயகாந்தன் (4) தி.ஜானகிராமன் (4) பேராசையின் எல்லை எது (4) மாற்று அரசியல் (4) ஸ்ரீ அரவிந்தர் (4) உதிரிக் கட்சிகள் (3) காஷ்மீர் பிரச்சினை (3) குறுக்குவழி (3) சண்டே போஸ்ட் (3) சம நீதி (3) சரித்திரக் கதைகள் (3) ஜாக்டோ ஜியோ (3) ஞானாலயா (3) தலைப்புச் செய்தி (3) பதிப்பகங்கள் (3) பாரதியார் (3) பொதுத்துறை (3) ராமச்சந்திர குகா (3) லயோலா (3) வாசிப்பும் யோசிப்பதும் (3) CONகிரஸ் (2) Defeat Congress (2) February 21 (2) The Sunlit Path (2) YSR (2) Yatra (2) அம்பலம் (2) கோமாளிகள் கையில் அரசியல் (2) சமுதாய வீதி (2) சிறுபான்மை அரசியல் (2) சுத்தானந்த பாரதியார் (2) செய்திக்கலவை (2) ஜெகசிற்பியன் (2) ஜெயமோகன் (2) தமிழ் வெப் சீரீஸ் (2) தலைமைப் பண்பு (2) தாலிபான் (2) திரைப்படங்கள் (2) நேரு (2) பழக்கங்களின் அடிமை (2) பிரியங்கா வாத்ரா (2) மம்மூட்டி (2) யாத்ரா (2) ராஜமுத்திரை (2) வரலாறும் படிப்பினையும் (2) வி.திவாகர் (2) CPIM (1) Darshan day message (1) EVM சர்ச்சை (1) The R Document (1) Three C's (1) accidental PM. (1) ma foi (1) ஆர்தர் ஹெய்லி (1) இன்ஸ்டன்ட் போராளிகள் (1) கணக்கன் கட்டுரைகள் (1) கந்துவட்டி ஏகாதிபத்தியம் (1) காந்தியா காண்டியா (1) காரடையான் நோன்பு (1) கிறித்தவம் (1) கொத்தமங்கலம் சுப்பு (1) சகலகலா வல்லி (1) சீனி விசுவநாதன் (1) சொன்னது சரிதானா (1) ஜமீன் (1) ஜெயிப்பதற்கு ஒரு எட்டு (1) ஜெயிப்பது நிஜம் (1) திருக்குவளைச் சோளர்கள் (1) ந.பிச்சமூர்த்தி (1) நித்திலவல்லி. நா.பார்த்தசாரதி (1) படித்தான் பரிந்துரை (1) பிரிவினைக் கும்பல்கள் (1) புதுமைப் பித்தன் (1) புத்தக்ங்கள் (1) புள்ளிராசா வங்கி (1) பொய்கள் (1) மான நஷ்டம் (1) மாற்றங்களை எதிர்கொள்வது (1) மு.வரதராசன் (1) ராபர்ட் லட்லம் (1) ஹிந்து காஷ்மீர் (1)