Thursday, July 25, 2019

இன்றைக்கிருப்பது ராட்சசர்கள்! சொல்வது கர்நாடக சபாநாயகர்!

கர்நாடக சபாநாயகர் ரமேஷ்குமார் இந்தமாதம் முழுவதும் என்னுடைய கவனத்தைக் கவர்ந்தவராக இருந்தார் என்பதை நான் சொன்னால் நம்புவதற்கு கொஞ்சம் கஷ்டமாகத் தான் இருக்கும்! ஆனால், சமீபகாலத்தில் வேறெவரையும் நான் இவரளவுக்கு பேசுகிற விதம் உள்ளிட்டுப் பல்வேறு விஷயங்களைக் கூர்ந்து கவனித்ததில்லை. நிதானமாகப் பேசுகிறார். காங்கிரஸ்காரராக இருந்தாலும், கொஞ்சம் நடுநிலையாக இருப்பதாகக் காட்டிக் கொள்ளவாவது முயற்சி செய்தார் என்பதில் எல்லாம் இங்கே கழகங்களோடு ஒப்பிட்டுப் பார்க்காமல் இருக்க முடியவில்லை! 


எழுபது வயதாகும் ரமேஷ் குமாரைப் பற்றி நான் தனிப்பட்ட விமரிசனம் எதுவும் செய்யவிரும்பவில்லை. ஆனால் இந்த 5 நிமிடப் பேட்டியில் 10வது ஷெட்யூலை வைத்துத் தான் என்ன மாதிரி முடிவெடுக்க முடியும் என்பதை ஒரு  கோடி காட்டி இருப்பகாகவே நான் புரிந்து கொள்கிறேன். 1985 இல் கொண்டு வரப்பட்ட கட்சித்தாவல் தடைச்சட்டம் எந்த அளவுக்குப் பயனற்றுப் போயிருக்கிறது என்பதை மறுமதிப்பீடு செய்ய வேண்டிய தருணம் இது. உச்சநீதிமன்றமே நேற்றைய நாட்களில் இந்தச் சட்டத்தை மதிப்பீடு செய்து ஏற்றுக்கோண்டு விட்டது என்பதால் மட்டும், இப்போதும் அதே மாதிரி ஏற்றுக் கொள்ள வேண்டிய அவசியம் இல்லை. சட்டம் இயற்றுவதோடு சட்டமன்றம், நாடாளுமன்றத்தின் வேலை முடிந்து விடுகிறது என்பதை மறந்து சட்டமன்றத்தில் காங் JDS உறுப்பினர்கள் ஆவேசமாகப் பேசிய பேச்சுக்கள்நீதித்துறை  எல்லாம் நீதிமன்றத்தின் முன்னால் எடுபடுமா?


இந்த விவாதம் பகிரப்பட்டதுகூட பேசியவர்கள் எல்லாம் தெளிவாகப் பேசினார்கள் என்றல்ல! எதைப் பேசுவதற்குத் தவறினார்கள் என்பதை நீங்களே யோசித்துப் பார்க்க உதவியாக மட்டுமே!  

இங்கே நம்முடைய அரசியலில் மிகப்பெரிய பரிதாபமே, ஒத்து இயங்கவேண்டிய சட்டம் இயற்றுகிற அதிகாரம் படைத்த சட்டமன்றம், நாடாளுமன்றம், சட்டப்படி செயல்பட வேண்டிய நிர்வாகம் /அதிகாரிகள், சட்டத்தைப் புரிந்துகொண்ட விதம் சரிதானா என்பதைச் சொல்ல வேண்டிய நீதித்துறை     இவைகளில் அங்கம் வகிக்கும் எவருக்குமே தங்களுடைய பொறுப்பு, கடமை,அதிகாரவரம்பு  என்ன என்பதே தெரிவதில்லை என்பதுதான்! வானளாவிய அதிகாரம் என்று குதித்த ஒரு சபாநாயகரை நீதிமன்றம் தலையில் குட்டி அடக்கிவைத்த கதை தமிழகத்திலேயே  நடந்தது. நீதிமன்றத் தலையீடு இல்லாமல் தங்களுடைய பொறுப்பை உணர்ந்து செயல்படுகிற தன்மை அரசியல்வாதிகளுக்கும் அதிகார வர்க்கத்துக்கும் அறவே இல்லை என்பதை இப்படிப் பிரச்சினைகள் வெடித்துக் கிளம்புகிற நேரங்களிலாவது கவனிக்கிறோமா? அரசியல் சட்டத்தை அறிமுகம் செய்து அரசியல் சாசன நிர்ணயசபையில்  அம்பேத்கர் பேசும்போது, நாடாளுமன்றம், அரசுநிர்வாகம், நீதித்துறை இவை மூன்றில் எது பிரதானமானது, அதிகாரம் மிக்கது என்பதைக் குறிப்பிட்டுச் சொல்லாமல் விட்டதற்கு, ஏதோ இரண்டு தவறு செய்தால், மூன்றாவது தலையிட்டுச் சரிசெய்யும் என்கிற நம்பிக்கை, எதிர்பார்ப்புடன் மட்டுமே என்றார். ஆனால் இந்திரா காலத்தில் அம்பேத்கருடைய அந்த நம்பிக்கை தவிடு பொடியாக்கப்பட்டதை இங்கே மறந்துவிடுகிறோம். தவறான ஆசாமிகளை சட்டம் இயற்றுகிற அதிகாரம் உள்ள இடத்துக்கு தேர்ந்தெடுத்து அனுப்புகிற தவறை வாக்காளர்களாகிய நாமும் தொடர்ந்து செய்து கொண்டிருப்பதில், சட்டம் இயற்றுவது எப்படியென்றே தெரியாத தற்குறிகள் நீதிமன்றங்களோடு வானளாவிய அதிகாரம் படைத்தது  நீயா நானா என்று வெட்டிவீராப்பு பேசுவதை இன்னும் எத்தனை நாளைக்கு வேடிக்கை மட்டும் பார்த்துக் கொண்டிருக்கப் போகிறோம்?  

கொஞ்சம் யோசித்துச் சொல்லுங்களேன்!

மீண்டும் சந்திப்போம்.    

         

No comments:

Post a Comment

இப்போது பார்த்துக் கொண்டிருப்பது

#கொங்குநாடு முன்களப்பிணியாளர் செந்தில் கதறுகிறார்!

செய்தி எந்த அளவுக்கு நிஜம் என்று தெரியாத போதிலும் தினமலர் இன்று கொளுத்திப்போட்டது, News 18 சேனலில் இருந்து வெளியேற்றப்பட்ட செந்தில் முதல் நி...

முப்பது நாட்களில் அதிகம் பார்த்தது இதைத்தானாம்

இப்படியும் வகைப்படுத்தலாம் Labels

அரசியல் (327) அனுபவம் (253) நையாண்டி (113) 2019 தேர்தல் களம் (91) செய்திகளின் அரசியல் (88) எண்ணங்கள் (49) புத்தகங்கள் (46) மனித வளம் (30) செய்திகள் (28) எது எழுத்து (23) ரங்கராஜ் பாண்டே (23) சிறுகதை (21) தொடரும் விவாதம் (18) அரசியல் களம் (16) கமல் காசர் (15) விமரிசனம் (15) தேர்தல் சீர்திருத்தங்கள் (14) புத்தக விமரிசனம் (14) ஏன் திமுக கூட்டணி வேண்டாம் (13) Change Management (12) ஊடகப் பொய்கள் (12) திராவிட மாயை (12) பதிவர் வட்டம் (12) அக்கம் பக்கம் என்ன சேதி (11) ஊடகங்கள் (11) கூட்டணிப் பாவங்கள் (10) எண்டமூரி வீரேந்திரநாத் (9) காமெடி டைம் (9) புனைவு (9) ஸ்ரீ அரவிந்த அன்னை (9) ஆங்கிலப் புதினங்கள் (8) இடதுசாரிகள் (8) பானாசீனா (8) (சு)வாசிக்கப்போறேங்க (7) எங்கே போகிறோம் (7) ஏய்ப்பதில் கலைஞன் (7) கண்டு கொள்வோம் கழகங்களை (7) சுய முன்னேற்றம் (7) மீள்பதிவு (7) அன்னை எனும் அற்புதப் பேரொளி (6) ஏன் திமுக வேண்டாம் (6) சமூக நீதி (6) சாண்டில்யன் (6) திராவிடப் புரட்டு (6) தேர்தல் முடிவுகள் (6) படித்ததில் பிடித்தது (6) புத்தகம் (6) ராகுல் காண்டி (6) வாசிப்பு அனுபவம் (6) ஸ்ரீரங்கம் வி மோகனரங்கன் (6) இர்விங் வாலஸ் (5) உதிரிகளான இடதுகள் (5) காங்கிரஸ் (5) தரிசன நாள் (5) நா.பார்த்தசாரதி (5) மாற்றங்களுக்குத் தயாராவது (5) மோடி மீது பயம் (5) Tianxia (4) அஞ்சலி (4) ஏன் காங்கிரசும் வேண்டாம் (4) ஒளி பொருந்திய பாதை (4) கவிதை நேரம் (4) சீனா (4) சீனா எழுபது (4) ஜெயகாந்தன் (4) தி.ஜானகிராமன் (4) பேராசையின் எல்லை எது (4) மாற்று அரசியல் (4) ஸ்ரீ அரவிந்தர் (4) உதிரிக் கட்சிகள் (3) காஷ்மீர் பிரச்சினை (3) குறுக்குவழி (3) சண்டே போஸ்ட் (3) சம நீதி (3) சரித்திரக் கதைகள் (3) ஜாக்டோ ஜியோ (3) ஞானாலயா (3) தலைப்புச் செய்தி (3) பதிப்பகங்கள் (3) பாரதியார் (3) பொதுத்துறை (3) ராமச்சந்திர குகா (3) லயோலா (3) வாசிப்பும் யோசிப்பதும் (3) CONகிரஸ் (2) Defeat Congress (2) February 21 (2) The Sunlit Path (2) YSR (2) Yatra (2) அம்பலம் (2) கோமாளிகள் கையில் அரசியல் (2) சமுதாய வீதி (2) சிறுபான்மை அரசியல் (2) சுத்தானந்த பாரதியார் (2) செய்திக்கலவை (2) ஜெகசிற்பியன் (2) ஜெயமோகன் (2) தமிழ் வெப் சீரீஸ் (2) தலைமைப் பண்பு (2) தாலிபான் (2) திரைப்படங்கள் (2) நேரு (2) பழக்கங்களின் அடிமை (2) பிரியங்கா வாத்ரா (2) மம்மூட்டி (2) யாத்ரா (2) ராஜமுத்திரை (2) வரலாறும் படிப்பினையும் (2) வி.திவாகர் (2) CPIM (1) Darshan day message (1) EVM சர்ச்சை (1) The R Document (1) Three C's (1) accidental PM. (1) ma foi (1) ஆர்தர் ஹெய்லி (1) இன்ஸ்டன்ட் போராளிகள் (1) கணக்கன் கட்டுரைகள் (1) கந்துவட்டி ஏகாதிபத்தியம் (1) காந்தியா காண்டியா (1) காரடையான் நோன்பு (1) கிறித்தவம் (1) கொத்தமங்கலம் சுப்பு (1) சகலகலா வல்லி (1) சீனி விசுவநாதன் (1) சொன்னது சரிதானா (1) ஜமீன் (1) ஜெயிப்பதற்கு ஒரு எட்டு (1) ஜெயிப்பது நிஜம் (1) திருக்குவளைச் சோளர்கள் (1) ந.பிச்சமூர்த்தி (1) நித்திலவல்லி. நா.பார்த்தசாரதி (1) படித்தான் பரிந்துரை (1) பிரிவினைக் கும்பல்கள் (1) புதுமைப் பித்தன் (1) புத்தக்ங்கள் (1) புள்ளிராசா வங்கி (1) பொய்கள் (1) மான நஷ்டம் (1) மாற்றங்களை எதிர்கொள்வது (1) மு.வரதராசன் (1) ராபர்ட் லட்லம் (1) ஹிந்து காஷ்மீர் (1)