Wednesday, September 25, 2019

வலைதளங்கள் தூதர் வேலை கூடச் செய்யுமா?

சமூக வலைதளங்கள் வளர்வதில் கட்டுக்கு மீறிப் போய்க் கொண்டே இருப்பதில், கட்டுப்படுத்த வேண்டும், சகட்டு மேனிக்கு கருத்து கந்தசாமிகள் உருவாகாமல் முறைப் படுத்தவேண்டும் என்றெல்லாம் கூக்குரல்கள் வெவ்வேறு பக்கங்களில் இருந்து எழுவது நமக்குத் தெரியும்! வலைதள தூதர்கள் என்ற வார்த்தை இந்த நிகழ்ச்சியைப் பற்றித் தெரிந்துகொள்ள ஆவலைத் தூண்டியது என்றே சொல்ல வேண்டும்!



நிகழ்ச்சி நடப்பதோ சென்னையில். நானிருப்பதோ மதுரை. நிகழ்ச்சியைப் பற்றி, பங்கேற்பாளர்கள் என்ன பேசினார்கள் என்பதைப் பற்றியெல்லாம் எப்படித் தெரிந்து கொள்வது? இங்கே தான் இணையமும் யூட்யூப் தளமும் சேர்ந்து கை கொடுக்கிறது. இணையத்திலும் யூட்யூபிலும் நல்லதும் கெட்டதுமாகக் கலந்தே கிடைப்பதை புரிந்து கொண்டு எது வேண்டுமென்று தேர்ந்தெடுப்பது நம் கைகளில் தான் இருக்கிறது. இங்கே யூட்யூப் தளத்தில் பானு கோம்ஸ், ஹரன் பிரசன்னா, அரவிந்தன் நீலகண்டன் மூவர் பேசியதும் கிடைத்தது. வானதி சீனிவாசனுடன் பார்வையாளர்கள் நடத்திய கலந்துரையாடல் வலையேற்றப்படவில்லை. ஆக இந்த நிகழ்ச்சியில் பேசியவர்கள் அனைவருமே ஒருமித்த கருத்துடையவர்கள், பிஜேபி ஆதரவாளர்கள் என்று இங்கே தனியாகச் சொல்ல வேண்டிய அவசியம் இருக்கிறதா என்ன?         
   

முதலில் பானு கோம்ஸ்! சமூக வலைதளங்களின் பாசிடிவான விஷயங்கள், எப்படியெல்லாம் பயன்படுத்தமுடியும் என்பதை இந்த 18 நிமிட வீடியோவில் சொல்கிறார். சுருக்கமாகச் சொன்னாலும் ஒரு நல்ல அறிமுக உரை 


     
நமது பார்வைக்கு வரும் செய்திகளில் எத்தனை போலிகள். விஷமத்தனமானவை என்பதை அறிந்திருக்கிறோமா? Fake News உருவாகும் விதம், உள்நோக்கங்கள் இவைகளைக் குறித்து ஹரன் பிரசன்னா இந்த 36 நிமிட வீடியோவில் சொல்கிறார். Fake News பின்னணியில் உள்ள அரசியலைக் குறித்து கொஞ்சம் உபயோகமான தகவல்கள் சொல்கிறார்.



முன்னால் இருவர் பேசியதற்கு மேல்  அரவிந்தன் நீலகண்டன் பேச இந்த விஷயத்தில் என்ன மிச்சம் இருக்கிறது? Fake News என்று ஆரம்பமானதே நம்மூர்  பள்ளிப் பாடப்புத்தகங்களில் தான் என்று ஒரு புதிய கோணத்தில் இருந்து பேசுகிற இந்த 36 நிமிட வீடியோ, கவனத்தை ஈர்க்கிற மாதிரி இருந்தது உண்மை.

தமிழகம் ரிசர்ச் ஃபவுண்டேஷனுடைய முகநூல் பக்கம் இது. புதிய கல்விக்கொள்கை, ராஜராஜ சோழன் விவகாரம் பற்றியும் சில பகிர்வுகள் காணொளிகள் இருப்பதையும் பார்த்தேன்.   

இன்றைக்கு என்ன பிஜேபி RSS ஆதரவுப் பதிவா என்று கொஞ்சம் நக்கலாகக் கேட்கிற நண்பர்களுக்கு நான் சொல்லக் கூடிய ஒரே பதில்! செய்திகள், செய்திகளின் அரசியலைப் புரிந்து கொள்ள 360 டிகிரியிலிருந்தும் பார்க்கும் ஒருவனை அவ்வளவு எளிதாக எடைபோடவோ, முத்திரை குத்தவோ காட்டுகிற ஆர்வத்தில் ஒரு பகுதியையாவது சொல்லப் பட்ட விஷயத்தில் காட்டினால் நன்றாக இருக்குமே என்பது மட்டும் தான்!

செய்திகள் உருவாக்கப் படுவதிலும் கூட ஒருவித அரசியல் கலந்து தான் இருக்கிறது என்பது நான் கற்றுக் கொண்ட பாடம்!

மீண்டும் சந்திப்போம்.           

2 comments:

  1. அருமையான பதிவு. நண்பர் கலந்து கொண்டு இந்த விழா குறித்து தெரிவித்தார். நன்றி.

    ReplyDelete
    Replies
    1. வாருங்கள் ஜோதிஜி!

      எனக்கு இந்த மாதிரி தகவல் சொல்கிற நண்பர்கள் யாருமே இல்லாமல், நானாகவே செய்திகளைத் தேடி அலைந்து அவைகளில் ஒருசிலவற்றை இங்கே பதிவுகளாக எழுதிக் கொண்டிருக்கிற ஆசாமி! சிறுவயதில் ஒரு பத்திரிகையாளனாக வேண்டும் பத்திரிகை நடத்தவேண்டும் என்கிற ஆசையை இங்கே பதிவுகளாக எழுதித் தீர்த்துக் கொண்டுவருகிறேன்! அவ்வளவுதான்!

      Delete

இப்போது பார்த்துக் கொண்டிருப்பது

#கொங்குநாடு முன்களப்பிணியாளர் செந்தில் கதறுகிறார்!

செய்தி எந்த அளவுக்கு நிஜம் என்று தெரியாத போதிலும் தினமலர் இன்று கொளுத்திப்போட்டது, News 18 சேனலில் இருந்து வெளியேற்றப்பட்ட செந்தில் முதல் நி...

முப்பது நாட்களில் அதிகம் பார்த்தது இதைத்தானாம்

இப்படியும் வகைப்படுத்தலாம் Labels

அரசியல் (327) அனுபவம் (253) நையாண்டி (113) 2019 தேர்தல் களம் (91) செய்திகளின் அரசியல் (88) எண்ணங்கள் (49) புத்தகங்கள் (46) மனித வளம் (30) செய்திகள் (28) எது எழுத்து (23) ரங்கராஜ் பாண்டே (23) சிறுகதை (21) தொடரும் விவாதம் (18) அரசியல் களம் (16) கமல் காசர் (15) விமரிசனம் (15) தேர்தல் சீர்திருத்தங்கள் (14) புத்தக விமரிசனம் (14) ஏன் திமுக கூட்டணி வேண்டாம் (13) Change Management (12) ஊடகப் பொய்கள் (12) திராவிட மாயை (12) பதிவர் வட்டம் (12) அக்கம் பக்கம் என்ன சேதி (11) ஊடகங்கள் (11) கூட்டணிப் பாவங்கள் (10) எண்டமூரி வீரேந்திரநாத் (9) காமெடி டைம் (9) புனைவு (9) ஸ்ரீ அரவிந்த அன்னை (9) ஆங்கிலப் புதினங்கள் (8) இடதுசாரிகள் (8) பானாசீனா (8) (சு)வாசிக்கப்போறேங்க (7) எங்கே போகிறோம் (7) ஏய்ப்பதில் கலைஞன் (7) கண்டு கொள்வோம் கழகங்களை (7) சுய முன்னேற்றம் (7) மீள்பதிவு (7) அன்னை எனும் அற்புதப் பேரொளி (6) ஏன் திமுக வேண்டாம் (6) சமூக நீதி (6) சாண்டில்யன் (6) திராவிடப் புரட்டு (6) தேர்தல் முடிவுகள் (6) படித்ததில் பிடித்தது (6) புத்தகம் (6) ராகுல் காண்டி (6) வாசிப்பு அனுபவம் (6) ஸ்ரீரங்கம் வி மோகனரங்கன் (6) இர்விங் வாலஸ் (5) உதிரிகளான இடதுகள் (5) காங்கிரஸ் (5) தரிசன நாள் (5) நா.பார்த்தசாரதி (5) மாற்றங்களுக்குத் தயாராவது (5) மோடி மீது பயம் (5) Tianxia (4) அஞ்சலி (4) ஏன் காங்கிரசும் வேண்டாம் (4) ஒளி பொருந்திய பாதை (4) கவிதை நேரம் (4) சீனா (4) சீனா எழுபது (4) ஜெயகாந்தன் (4) தி.ஜானகிராமன் (4) பேராசையின் எல்லை எது (4) மாற்று அரசியல் (4) ஸ்ரீ அரவிந்தர் (4) உதிரிக் கட்சிகள் (3) காஷ்மீர் பிரச்சினை (3) குறுக்குவழி (3) சண்டே போஸ்ட் (3) சம நீதி (3) சரித்திரக் கதைகள் (3) ஜாக்டோ ஜியோ (3) ஞானாலயா (3) தலைப்புச் செய்தி (3) பதிப்பகங்கள் (3) பாரதியார் (3) பொதுத்துறை (3) ராமச்சந்திர குகா (3) லயோலா (3) வாசிப்பும் யோசிப்பதும் (3) CONகிரஸ் (2) Defeat Congress (2) February 21 (2) The Sunlit Path (2) YSR (2) Yatra (2) அம்பலம் (2) கோமாளிகள் கையில் அரசியல் (2) சமுதாய வீதி (2) சிறுபான்மை அரசியல் (2) சுத்தானந்த பாரதியார் (2) செய்திக்கலவை (2) ஜெகசிற்பியன் (2) ஜெயமோகன் (2) தமிழ் வெப் சீரீஸ் (2) தலைமைப் பண்பு (2) தாலிபான் (2) திரைப்படங்கள் (2) நேரு (2) பழக்கங்களின் அடிமை (2) பிரியங்கா வாத்ரா (2) மம்மூட்டி (2) யாத்ரா (2) ராஜமுத்திரை (2) வரலாறும் படிப்பினையும் (2) வி.திவாகர் (2) CPIM (1) Darshan day message (1) EVM சர்ச்சை (1) The R Document (1) Three C's (1) accidental PM. (1) ma foi (1) ஆர்தர் ஹெய்லி (1) இன்ஸ்டன்ட் போராளிகள் (1) கணக்கன் கட்டுரைகள் (1) கந்துவட்டி ஏகாதிபத்தியம் (1) காந்தியா காண்டியா (1) காரடையான் நோன்பு (1) கிறித்தவம் (1) கொத்தமங்கலம் சுப்பு (1) சகலகலா வல்லி (1) சீனி விசுவநாதன் (1) சொன்னது சரிதானா (1) ஜமீன் (1) ஜெயிப்பதற்கு ஒரு எட்டு (1) ஜெயிப்பது நிஜம் (1) திருக்குவளைச் சோளர்கள் (1) ந.பிச்சமூர்த்தி (1) நித்திலவல்லி. நா.பார்த்தசாரதி (1) படித்தான் பரிந்துரை (1) பிரிவினைக் கும்பல்கள் (1) புதுமைப் பித்தன் (1) புத்தக்ங்கள் (1) புள்ளிராசா வங்கி (1) பொய்கள் (1) மான நஷ்டம் (1) மாற்றங்களை எதிர்கொள்வது (1) மு.வரதராசன் (1) ராபர்ட் லட்லம் (1) ஹிந்து காஷ்மீர் (1)