Thursday, September 26, 2019

இது யாருடைய மண்? ஒரு அறிமுகத்தெளிவு! மடியில் கனம்!

நாமெல்லாம் இது நம்முடைய மண், நாம் எல்லோருமே இந்த மண்ணின் மைந்தர்கள் தான் என்று நினைத்துக் கொண்டு இருக்கையில் ஒரு சிலர் இது இவர் மண், இல்லை இல்லை அவர் மண் என்றெல்லாம் அவர்களாகவே பட்டா போட்டுக் கொடுத்துக் கொண்டிருக்கிறார்கள். அவர்கள் பாட்டுக்கு  சொல்லிக் கொண்டிருக்கட்டும், இளைஞர்கள் என்ன நினைக்கிறார்கள்? நம்மில் யாராவது தெரிந்துகொள்ள எப்போதாவது முயற்சித்திருக்கிறோமா ?



இந்த 39 நிமிட வீடியோவில் பல இளைஞர்கள் கூடி இது ஆன்மீக பூமியா,அல்லவா என்று விவாதிக்கிறார்கள். நெறியாளர் இடைமறித்து திருநள்ளாறுக்கு மேலே அமெரிக்க சாட்டிலைட் கொஞ்சம் தள்ளாடுகிற மாதிரி ஒரு தவறான கற்பிதத்தைப் பற்றிக் கேள்வி கேட்கிறார். (10வது நிமிடத்தில் இருந்து பாருங்கள்!)  இந்த மாதிரிக் கற்பிதங்களுக்கு முந்தைய பதிவில் அரவிந்தன் நீலகண்டன் தெளிவான பதிலைச் சொல்லியிருக்கிறார் என்பதை நினைவு படுத்தவேண்டியது என் கடமை. 


இங்கே விவாதம் மிக மேம்போக்காக நடப்பதைப் பார்த்தபிறகு தான் இந்த மாதிரி இளைஞர்களுக்காகவே நண்பர் எழுத்தாளர் ஸ்ரீரங்கம் வி மோகனரங்கன் ஹிந்துமதம்: ஒரு அறிமுகத் தெளிவு என்று (குழுமங்களிலும் பிறகு சந்தியா பதிப்பக வெளியீடாக ஒரு நூலாகவும்) ஏன் எழுதினார் என்பதே  கொஞ்சம் உறைக்கிறது. ஹிந்து மத நம்பிக்கை உள்ளவர்கள் பலருக்கே  தங்களுடைய நம்பிக்கைக்கு அடிப்படையாக இருப்பது என்னென்ன என்பது தெரிவதில்லை என்பது நான் உட்பட, ஒப்புக்கொள்ளவேண்டிய வெட்கக்கேடு! இந்தப் புத்தக அறிமுகமாக எழுதியது இங்கே 


சதீஷ் ஆசார்யா சரத் பவாரை விட அதிகமாகக் கவலைப்பட்டு கார்டூன் வரைந்திருப்பது ஏன் என்றுதான் எனக்குப் புரியவே மாட்டேன் என்கிறது. இந்தமாதிரி  தேர்தல் சமயங்களில் தான் முறைகேடாக சம்பாதித்த பணம் கொஞ்சம் வெளியே வரும் என்பது ஊரறிந்த ரகசியம்! சரத் பவாருடைய பணத்தொப்பையின் பின்னணி என்னெவென்று சொல்வது? தாவூத் இப்ராஹிமுடன் உள்ள தொடர்புகள், சிவசேனாவின் புலி பால் தாக்கரேவைக் கூட பூனையாக மாற்றி கிரிக்கெட் ஸ்டேடியத்துக்குள் சிம்மாசனம் போட்டு உட்கார்த்தி வைத்த சாமர்த்தியம் என்று எத்தனை  எத்தனை விஷயங்களைத் தான்  பட்டியலிடுவது? சொல்லுங்கள்!

மீண்டும் சந்திப்போம். 

       
    

2 comments:

  1. இது போன்ற விசயங்களை நீங்க சொல்வது போல காட்சி படுத்துவது அவசியம். சரத்பவார் லாலு போல உள்ளே இருப்பார். வைக்க முடியும்? அவர் லாபியை (சரத்பவார் ஆட்சியில் இருந்தாலும் இல்லாவிட்டாலும் சர்க்கரை ஆலைகள், சர்க்கரை விலை விற்பனை மற்றும் விலை நிர்ணயித்தல், மகாராஷ்டிரா கிரிக்கெட் தொடர்பான முடிவுகள்) மோடி அரசு 50 சதவிகிதம் தான் அடக்க முடிந்துள்ளது. இன்னமும் உள்ளது. வட்டத்திற்குள் கொண்டு நிறுத்த முடியும் என்று நம்புகிறீர்களா?

    ReplyDelete
    Replies
    1. வாருங்கள் ஜோதிஜி!

      சரத் பவாரை ஒரு கட்டத்துக்குள் அடக்கி வைக்கவேண்டியது நாட்டின் பாதுகாப்பு உள்ளிட்ட விஷயங்களுக்கு மிகவும் நல்லது என்றுதான் நினைக்கிறேன். அரசியலில் எல்லோருடனும் ஒருமாதிரியான் நீக்குப்போக்குடன் நடந்துகொண்டு தன்னுடைய ஊழலை இதுவரை எவரும் கேள்வி கேட்காதபடி சமாளித்து வந்திருக்கிறார் என்பதில் அவரை முழுமையாக expose செய்ய முடியுமா செய்வார்களா என்ற கேள்விக்கு என்னிடம் பதில் இல்லை. ஆனாலும் ஒரு ஆரம்பம் என்று வந்துவிட்டபிறகு, எப்படிப் போகிறது என்பதைப் பொறுத்திருந்து தான் பார்க்கவேண்டும்!

      சதீஷ் ஆசார்யாவின் இந்தக் கார்டூனை எதற்காக இங்கே எடுத்துப் போட்டேன் என்று நினைக்கிறீர்கள்?

      Delete

இப்போது பார்த்துக் கொண்டிருப்பது

#கொங்குநாடு முன்களப்பிணியாளர் செந்தில் கதறுகிறார்!

செய்தி எந்த அளவுக்கு நிஜம் என்று தெரியாத போதிலும் தினமலர் இன்று கொளுத்திப்போட்டது, News 18 சேனலில் இருந்து வெளியேற்றப்பட்ட செந்தில் முதல் நி...

முப்பது நாட்களில் அதிகம் பார்த்தது இதைத்தானாம்

இப்படியும் வகைப்படுத்தலாம் Labels

அரசியல் (327) அனுபவம் (253) நையாண்டி (113) 2019 தேர்தல் களம் (91) செய்திகளின் அரசியல் (88) எண்ணங்கள் (49) புத்தகங்கள் (46) மனித வளம் (30) செய்திகள் (28) எது எழுத்து (23) ரங்கராஜ் பாண்டே (23) சிறுகதை (21) தொடரும் விவாதம் (18) அரசியல் களம் (16) கமல் காசர் (15) விமரிசனம் (15) தேர்தல் சீர்திருத்தங்கள் (14) புத்தக விமரிசனம் (14) ஏன் திமுக கூட்டணி வேண்டாம் (13) Change Management (12) ஊடகப் பொய்கள் (12) திராவிட மாயை (12) பதிவர் வட்டம் (12) அக்கம் பக்கம் என்ன சேதி (11) ஊடகங்கள் (11) கூட்டணிப் பாவங்கள் (10) எண்டமூரி வீரேந்திரநாத் (9) காமெடி டைம் (9) புனைவு (9) ஸ்ரீ அரவிந்த அன்னை (9) ஆங்கிலப் புதினங்கள் (8) இடதுசாரிகள் (8) பானாசீனா (8) (சு)வாசிக்கப்போறேங்க (7) எங்கே போகிறோம் (7) ஏய்ப்பதில் கலைஞன் (7) கண்டு கொள்வோம் கழகங்களை (7) சுய முன்னேற்றம் (7) மீள்பதிவு (7) அன்னை எனும் அற்புதப் பேரொளி (6) ஏன் திமுக வேண்டாம் (6) சமூக நீதி (6) சாண்டில்யன் (6) திராவிடப் புரட்டு (6) தேர்தல் முடிவுகள் (6) படித்ததில் பிடித்தது (6) புத்தகம் (6) ராகுல் காண்டி (6) வாசிப்பு அனுபவம் (6) ஸ்ரீரங்கம் வி மோகனரங்கன் (6) இர்விங் வாலஸ் (5) உதிரிகளான இடதுகள் (5) காங்கிரஸ் (5) தரிசன நாள் (5) நா.பார்த்தசாரதி (5) மாற்றங்களுக்குத் தயாராவது (5) மோடி மீது பயம் (5) Tianxia (4) அஞ்சலி (4) ஏன் காங்கிரசும் வேண்டாம் (4) ஒளி பொருந்திய பாதை (4) கவிதை நேரம் (4) சீனா (4) சீனா எழுபது (4) ஜெயகாந்தன் (4) தி.ஜானகிராமன் (4) பேராசையின் எல்லை எது (4) மாற்று அரசியல் (4) ஸ்ரீ அரவிந்தர் (4) உதிரிக் கட்சிகள் (3) காஷ்மீர் பிரச்சினை (3) குறுக்குவழி (3) சண்டே போஸ்ட் (3) சம நீதி (3) சரித்திரக் கதைகள் (3) ஜாக்டோ ஜியோ (3) ஞானாலயா (3) தலைப்புச் செய்தி (3) பதிப்பகங்கள் (3) பாரதியார் (3) பொதுத்துறை (3) ராமச்சந்திர குகா (3) லயோலா (3) வாசிப்பும் யோசிப்பதும் (3) CONகிரஸ் (2) Defeat Congress (2) February 21 (2) The Sunlit Path (2) YSR (2) Yatra (2) அம்பலம் (2) கோமாளிகள் கையில் அரசியல் (2) சமுதாய வீதி (2) சிறுபான்மை அரசியல் (2) சுத்தானந்த பாரதியார் (2) செய்திக்கலவை (2) ஜெகசிற்பியன் (2) ஜெயமோகன் (2) தமிழ் வெப் சீரீஸ் (2) தலைமைப் பண்பு (2) தாலிபான் (2) திரைப்படங்கள் (2) நேரு (2) பழக்கங்களின் அடிமை (2) பிரியங்கா வாத்ரா (2) மம்மூட்டி (2) யாத்ரா (2) ராஜமுத்திரை (2) வரலாறும் படிப்பினையும் (2) வி.திவாகர் (2) CPIM (1) Darshan day message (1) EVM சர்ச்சை (1) The R Document (1) Three C's (1) accidental PM. (1) ma foi (1) ஆர்தர் ஹெய்லி (1) இன்ஸ்டன்ட் போராளிகள் (1) கணக்கன் கட்டுரைகள் (1) கந்துவட்டி ஏகாதிபத்தியம் (1) காந்தியா காண்டியா (1) காரடையான் நோன்பு (1) கிறித்தவம் (1) கொத்தமங்கலம் சுப்பு (1) சகலகலா வல்லி (1) சீனி விசுவநாதன் (1) சொன்னது சரிதானா (1) ஜமீன் (1) ஜெயிப்பதற்கு ஒரு எட்டு (1) ஜெயிப்பது நிஜம் (1) திருக்குவளைச் சோளர்கள் (1) ந.பிச்சமூர்த்தி (1) நித்திலவல்லி. நா.பார்த்தசாரதி (1) படித்தான் பரிந்துரை (1) பிரிவினைக் கும்பல்கள் (1) புதுமைப் பித்தன் (1) புத்தக்ங்கள் (1) புள்ளிராசா வங்கி (1) பொய்கள் (1) மான நஷ்டம் (1) மாற்றங்களை எதிர்கொள்வது (1) மு.வரதராசன் (1) ராபர்ட் லட்லம் (1) ஹிந்து காஷ்மீர் (1)