Tuesday, June 25, 2019

இந்திரா காது கழுதைக் காதுதான்! சொல்வதில் தயக்கமென்ன?

நாடாளுமன்றத்தில் ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது திமுகவின் தயாநிதி மாறன் பேசியதைப் பார்த்த போது, மனிதர் ஒரு  ஆல் இன் ஆல் அழகுராஜாவாக வலம்   வருவதற்கு முயற்சிப்பது நன்றாகவே புலப்பட்டது. கட்சிக் கூட்டத்தில் பேசுகிறமாதிரியே நாடாளுமன்றத்திலும்! எல்லாப் பிரச்சினையையும் தானே பேசிப்பெயர் எடுத்துவிட வேண்டும் என்கிற மாதிரி! கொஞ்சம் வீடியோவைப் பாருங்கள்!  


இந்த வீடியோவுக்கு லோக்கல் சேனல் வைத்திருக்கிற தலைப்பு பாராளுமன்றத்தில் வெளுத்துவாங்கிய தயாநிதி!  ஆனாலும் இம்புட்டு நக்கலாகச் சொல்லியிருக்கக்கூடாது!😁😁 


தேர்தலில் தோற்ற பிறகும் கூட காங்கிரஸ் கட்சி படிப்பினை எதையும் கற்றுக்கொண்டதாகத் தெரியவில்லை. இனிமேலும்  கற்றுக் கொள்கிற அறிகுறி எதுவும் தெரியவில்லை.  லோக்சபா காங்கிரஸ் கட்சித்தலைவர் அதிர் ரஞ்சன் சௌதுரி கங்கையைப் போன்ற இந்திரா எங்கே சாக்கடை போன்ற பிரதமர் எங்கே என்று பேசிவிட்டு, எதிர்ப்புக் கிளம்பியதும் மன்னிப்புக் கேட்ட படலம் நேற்று. 
"they were provoking me and hence I told them that it was like comparing Ganga with a nali. This does not mean I said something to hurt the Prime Minister's feelings. If he is hurt I will apologise. I did not make personal attack at him. My Hindi is not good. Naali means channel, not sewer" என்கிறாரே 

गंदी नाली என்றால் என்ன அர்த்தமாம்?

அன்னை கங்கையைப் போன்ற இந்திரா எங்கே என்று சொன்னாரல்லவா அந்தக் கதையைக் கொஞ்சம் நினைவு படுத்திக் கொள்ளச் சரியான நாள் இன்று! ஜூன் 25 தான்!

இங்கே இந்தியாவில் 1975 களில் இந்திரா காந்தி தனக்கு வந்த சொந்த அரசியல் நெருக்கடியை, ஏதோ தேசத்துக்கே  வந்து விட்ட மாதிரி, அவசர நிலைப் பிரகடனம் செய்த கதை இதைப் படிக்கும் வாசகர்களில் பெரும்பாலானோருக்கு எங்கேயோ  கேள்விப் பட்ட மாதிரித் தான் தோன்றும். பச்சையாகச் சொல்லப் போனால், நெருக்கடி நிலை, அதன் கொடூரமான தன்மை, அதை உறுதியோடு எதிர்த்து ஜெய பிரகாஷ் நாராயணன் மாதிரி காந்தீயவாதிகள் நடத்திய போராட்டம் பற்றி இங்கே எவருக்குமே முழுதாய்த் தெரியாது. இரண்டாவது சுதந்திரப் போர் என்று சொல்லப் படுவதற்கு முழுத் தகுதியும் உள்ள  அந்த நாட்களில் நடந்த போராட்டங்களைப் பற்றி பேசுவாரைக் காணோம். அதை நினைத்துப் பார்த்து, மறுபடியும் அதே மாதிரி சூழ்நிலை உருவாகுமேயானால், அதை எதிர்கொள்ளத் தயார் செய்து கொள்ளும் பக்குவமும், முதிர்ச்சியும் இந்திய ஜன நாயகத்தில் இன்னமும் ஏற்படக் காணோம்!  

மிட்டாய் கொடுத்துக் குழந்தைகள் கழுத்தில், காதில் இருப்பதைத் திருடும் திருடர்களைப் போல, இலவசங்கள், சலுகைகள் என்று கவர்ச்சி மிட்டாய்களைக் கொடுத்து மொத்தத்தையுமே சுருட்டிக் கொண்டு போகிறவர்களாக இங்கே உள்ள அரசியல் வாதிகள், அதைக் கண்டும் காணாமல் ஏமாந்து நிற்கிறவர்களாக ஜனங்கள் என்று இங்கே ஜனநாயகக் கூத்து நடந்து கொண்டிருக்கிறது.

இன்றைக்கும் கூட, அந்த இருபது மாத இருண்ட காலத்தின் நிகழ்வுகளைப் பற்றிய பதிவுகள், மூடி மறைக்கப்பட்ட ஒன்றாகவே இருக்கின்றன. அதைப் பற்றிய செய்திகளைத் தொகுத்தோ, அதைப் பற்றிய கருத்துக்களைத் தைரியமாக முன்வைத்தோ புத்தகங்களைத் தேடினால், ஏமாந்து தான் போவீர்கள்!

அவசர நிலை பிரகடனம் செய்யப்பட்ட காலத்தில் இந்திரா ஏதோ சாட்டையை சுழற்றி, அரசு மற்றும் தனியார் நிறுவனங்களைப் பொறுப்போடு செயல் படுத்த வைத்த மாதிரியும் ஒரு வித மாயை ஏற்படுத்தப்பட்டது. கரீபி ஹடோ (வறுமையே வெளியேறு) என்று  கோஷம் எழுப்பிப் போஸ்டர் அடித்து ஊரெங்கும் ஓட்டியதும், வறுமை பயந்து வெளியேறிவிட்ட மாதிரி ஒரு தோற்றம் உருவாக்கப் பட்டது. தேசத்துக்கு வந்த நெருக்கடியைத் தீர்ப்பதற்காக என்று சொல்லிக் கொண்டு, அரசியல் சாசனம் உறுதிப் படுத்திய அடிப்படை உரிமைகள் ரத்து செய்யப் பட்டது, கருத்து சுதந்திரம் முடக்கப்பட்டது.

கோயபல்சை மிஞ்சும் வகையில் காங்கிரஸ்காரர்கள் இன்று வரை பரப்பி வரும் பொய்களில் ஒன்று,ஒரு சாம்பிளுக்காக, காங்கிரஸ் ஒன்றினால் தான் நிலையான ஆட்சியைக் கொடுக்க முடியும் என்பது!

நெருக்கடி நிலை பற்றி  இன்னொரு சுவாரசியமான, அதிகம் வெளியில் தெரியாத தகவலும் உண்டு. இந்திரா காந்தி தன்னுடைய சொந்த அரசியல் ஆதாயத்துக்காகக் கொண்டு வந்த நெருக்கடி நிலை நிறையப்பேர் நினைப்பது போல முதலாவது அல்ல! இந்திரா காந்தி கொண்டு வந்த நெருக்கடி நிலை, இருபது மாதங்களே நீடித்தது! காந்தியவாதியும், வினோபா பாவேயின் சீடருமான ஜெயப் பிரகாஷ் நாராயணன், நெருக்கடி கால சர்வாதிகாரத்தை எதிர்த்த போராட்டத்தைத் தலைமை ஏற்று நடத்தினார்.
அதற்கும் முன்னால், இந்திய சீனப் போரின் போது 1962 ஆம் ஆண்டிலும் நெருக்கடி நிலை பிரகடனம் செய்யப் பட்டது. 1968 ஆம் ஆண்டு ரத்து செய்யப்படும் வரை, ஏறத்தாழ ஐந்தரை ஆண்டு காலம் அமலில் இருந்த இந்த நெருக்கடி நிலையின் பாதிப்பு, சாதாரண ஜனங்களை எந்த விதத்திலும் பாதிக்கவில்லை. சீனாவிடம் அசிங்கமாகத் தோற்ற நேருவின் கோழைத் தனம், வெறும் ஜம்பத்துக்கு மட்டுமே இருந்த ராஜ தந்திரம், போரில் ஏற்பட்ட பின்னடைவுகள், அவமானங்களைப் பற்றிய செய்திகள் மட்டுமே வெளியிடத் தடை இருந்தது. பத்திரிகைகளை முடக்கவில்லை, அடிப்படை உரிமைகள் நெருக்கடி நிலைப் பிரகடனத்தின் சமயம் ரத்து செய்யப் பட்டிருந்தாலும் கூட, அப்படி ரத்து செய்யப் பட்டதற்கான  எந்த அறிகுறியுமே இல்லாமல் சேதம் இல்லாமல் இருந்த ஐந்தரை ஆண்டுகள்! 

அன்றைக்கு, கம்யூனிஸ்ட் கட்சி இரண்டாக உடைந்து, அதில் ஒரு தரப்பு இன்னொரு தரப்பை சீன ஆதரவாளர்களாக முத்திரை குத்தி, அல்லது ஆள் காட்டியதில் சில கம்யூனிஸ்ட் கட்சித் தலைவர்கள் மட்டுமே கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப் பட்டார்கள் என்பதைத் தவிர வேறு கைதுகள், கோரங்கள் எதுவுமே இல்லை. 

ஐந்தரை வருடங்கள், நாட்டில் நெருக்கடி நிலை என்று ஒன்று இருந்ததோ, அது எதற்காக இருந்தது என்பதோ ஜனங்களுக்கு தெரியவே இல்லை. ஒரே வரியில் சொல்ல வேண்டுமானால், 1962இல் பிரகடனப்படுத்தப் பட்ட நெருக்கடி நிலைமை, நேரு ஒரு கோழை என்பதை வெளிப்படையாக ஜனங்கள் தெரிந்துகொள்ள முடியாமல், நேருவின் so called புனித பிம்பத்தைப் பாதுகாக்கும் முயற்சியாக மட்டுமே இருந்தது. அதிகாரிகளின் கூழைத் தன்மையை எடுத்துச் சொல்வதாக மட்டுமே இருந்தது. முழுக்க முழுக்க சர்வாதிகாரமாக மாறி விடவில்லை.  

ஆனால் இரண்டாவது தரம் பிரகடனப் படுத்தப்பட்ட நெருக்கடி நிலையோ பூனைக்குப் பிறந்த மகள், இந்திரா காந்தி தன்னைப் பாயும் புலியாகக் காட்டிக் கொள்ள நடத்திய வெறியாட்டமாகத் தான். அமலில் இருந்த அந்த இருபது மாதங்கள் இருந்தது. ஆர் டாகுமென்ட் புதினத்தை மறுவாசிப்பு செய்தது,  இதை மறுபடி நினைத்துப் பார்க்க ஒரு கருவியாக இருந்தது. இப்படி எழுதியது ஒரு புத்தக விமரிசனமாக 
இங்கே எழுதப்புகுந்த ஒரு பதிவில் தான்! 

Today is exactly 44 years since Indira Gandhi declared the Emergency on June 25, 1975. Yesterday, in the Rajya Sabha, Senior Congress leader Ghulam Nabi Azad made a passionate appeal to bring back the “Old India.”   


காங்கிரஸ் பன்றிகளுக்கு நாற்றம் துளைக்கும் சாக்கடையும் சேறும் சொர்க்கமாகத்தான் தெரியும்! அதிர் ரஞ்சன் சௌதுரியோ குலாம் நபி ஆசாதோ மட்டும் விதிவிலக்காக இருந்து விட முடியுமா என்ன?   

எமெர்ஜென்சியின் அந்த இருண்ட நாட்களை அவ்வளவு எளிதாக மறந்துவிடத்தான் முடியுமா?

  

.  

10 comments:

  1. எப்படி தயாநிதிக்கு வெட்கம் சூடு சுரணை எல்லாம் இல்லை. அவரே ஜாமீன்ல வெளில இருக்கற ஆளு. ஊழல் செய்ததிலும், அரசு நிறுவனத்தை சொந்த உபயோகத்துக்கு வைத்து அவர்களை நஷ்டப்படவைத்தவர். இவர் மற்றவர்களை ஊழல்வாதி என்று சொல்வதில் என்ன அர்த்தம் இருக்கு? அவருடைய உறவினர் மற்றும் சக எம்.பி. 6+ மாதங்கள் திகார் ஜெயிலில் இருந்தவர்கள். அப்புறமும் மற்றவர்கள் ஊழல் என்றால் யார்தான் நம்புவார்கள்?

    ReplyDelete
    Replies
    1. வாருங்கள் நெ.த,! அப்பன் மாறன் அரைப்பங்கு அரசியல்வாதி அரைப்பங்கு வியாபாரி என்றால் மகன்கள் KDbrothers முழுக்க முழுக்க வியாபாரிகள்! தயாநிதி ஓவராய் சவுண்டு விடுவதற்குப் பின்னால் என்னவோ உள்நோக்கம் இருக்கிறது!

      Delete
    2. >>> அவருடைய உறவினர் மற்றும் சக எம்.பி. 6+ மாதங்கள் திகார் ஜெயிலில் இருந்தவர்கள். அப்புறமும் மற்றவர்கள் ஊழல் என்றால் யார்தான் நம்புவார்கள்?.. <<<

      கோமாளிக் கூத்து தான்...

      Delete
    3. நாடாளுமன்றத்தில் இவர்கள் தான் வலியப்போய் மோடியுடன் கைகுலுக்கிப் போட்டோ எடுத்துக் கொண்டதும், மோடி கொடுத்த விருந்தில் திஹார் நாயகி மோடியுடன் ஒரே மேஜையில் அமர்ந்து கலந்து கொண்டதும் நடந்தது!

      Delete
  2. >>> தயாநிதி ஓவராய் சவுண்டு விடுவதற்குப் பின்னால் என்னவோ உள்நோக்கம் இருக்கிறது!...<<<

    நான் இதையெல்லாம் விரும்பிக் கேட்பதில்லை...

    ஆனால் என்னுடன் அறையில் இருப்பவன் 24 மணி நேரமும் மோடி ஒயிக.. என்று தொழுது கொண்டு இருப்பவன்..

    ஆனால் மோடி அரசின் இலவசங்களைப் பெறுவதில் தன் குடும்பத்தை முதலில் நிறுத்தி வைப்பவன்...

    எனக்குத் தொல்லை கொடுப்பதில் விருப்பமுள்ளவன்..
    நான் அவனுடன் தகராறு செய்வேன் என்று எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறான்..

    அந்த சத்தத்தை - யூடிபில் சத்தமாக வைத்துக் கேட்டுக் கொண்டிருந்த போது
    நானும் கேட்கும்படியாக ஆகிவிட்டது...

    இத்தனைக்கும் அவனுக்கு ஆங்கிலம் தெரியாது...
    மோடிக்கு முன்னால் கத்துகிறார்கள் அல்லவா!..
    அதுவே நோன்புக் கஞ்சி குடித்த மாதிரி..

    அப்போதே நினைத்தேன் ..இந்த சத்தம் தங்கள் பதிவிலும் ஒலிக்கும் என்று!..

    ReplyDelete
    Replies
    1. இதைத்தான் மோடி மீதான பயமே இவர்களை மோடி வெறுப்பு, மோடி எதிர்ப்பு என்று கொண்டுபோய் விட்டிருப்பதை இங்கே பலமுறை சொல்லியிருக்கிறேனே துரை செல்வராஜூ சார்!

      Delete
  3. >>> இந்த வீடியோவுக்கு லோக்கல் சேனல் வைத்திருக்கிற ...<<<

    லோக்கல் தானே!...

    ReplyDelete
    Replies
    1. பக்கா லோக்கல் தான் சார்! :))))

      Delete
  4. who voted these people to be their representative they need to be blamed !

    ReplyDelete
    Replies
    1. ஓட்டுப்போட்ட கணத்தோடு ஒருவிரல் புரட்சி புஸ்ஸாகிவிடுகிறது. ஜெயித்தவர்களைக் கட்டுப்படுத்துகிற அதிகாரம், சக்தி வாக்காளர்களுக்கு நம்மூர்த் தேர்தல் முறையில் இல்லை சரவணன்!

      Delete

இப்போது பார்த்துக் கொண்டிருப்பது

#கொங்குநாடு முன்களப்பிணியாளர் செந்தில் கதறுகிறார்!

செய்தி எந்த அளவுக்கு நிஜம் என்று தெரியாத போதிலும் தினமலர் இன்று கொளுத்திப்போட்டது, News 18 சேனலில் இருந்து வெளியேற்றப்பட்ட செந்தில் முதல் நி...

முப்பது நாட்களில் அதிகம் பார்த்தது இதைத்தானாம்

இப்படியும் வகைப்படுத்தலாம் Labels

அரசியல் (327) அனுபவம் (253) நையாண்டி (113) 2019 தேர்தல் களம் (91) செய்திகளின் அரசியல் (88) எண்ணங்கள் (49) புத்தகங்கள் (46) மனித வளம் (30) செய்திகள் (28) எது எழுத்து (23) ரங்கராஜ் பாண்டே (23) சிறுகதை (21) தொடரும் விவாதம் (18) அரசியல் களம் (16) கமல் காசர் (15) விமரிசனம் (15) தேர்தல் சீர்திருத்தங்கள் (14) புத்தக விமரிசனம் (14) ஏன் திமுக கூட்டணி வேண்டாம் (13) Change Management (12) ஊடகப் பொய்கள் (12) திராவிட மாயை (12) பதிவர் வட்டம் (12) அக்கம் பக்கம் என்ன சேதி (11) ஊடகங்கள் (11) கூட்டணிப் பாவங்கள் (10) எண்டமூரி வீரேந்திரநாத் (9) காமெடி டைம் (9) புனைவு (9) ஸ்ரீ அரவிந்த அன்னை (9) ஆங்கிலப் புதினங்கள் (8) இடதுசாரிகள் (8) பானாசீனா (8) (சு)வாசிக்கப்போறேங்க (7) எங்கே போகிறோம் (7) ஏய்ப்பதில் கலைஞன் (7) கண்டு கொள்வோம் கழகங்களை (7) சுய முன்னேற்றம் (7) மீள்பதிவு (7) அன்னை எனும் அற்புதப் பேரொளி (6) ஏன் திமுக வேண்டாம் (6) சமூக நீதி (6) சாண்டில்யன் (6) திராவிடப் புரட்டு (6) தேர்தல் முடிவுகள் (6) படித்ததில் பிடித்தது (6) புத்தகம் (6) ராகுல் காண்டி (6) வாசிப்பு அனுபவம் (6) ஸ்ரீரங்கம் வி மோகனரங்கன் (6) இர்விங் வாலஸ் (5) உதிரிகளான இடதுகள் (5) காங்கிரஸ் (5) தரிசன நாள் (5) நா.பார்த்தசாரதி (5) மாற்றங்களுக்குத் தயாராவது (5) மோடி மீது பயம் (5) Tianxia (4) அஞ்சலி (4) ஏன் காங்கிரசும் வேண்டாம் (4) ஒளி பொருந்திய பாதை (4) கவிதை நேரம் (4) சீனா (4) சீனா எழுபது (4) ஜெயகாந்தன் (4) தி.ஜானகிராமன் (4) பேராசையின் எல்லை எது (4) மாற்று அரசியல் (4) ஸ்ரீ அரவிந்தர் (4) உதிரிக் கட்சிகள் (3) காஷ்மீர் பிரச்சினை (3) குறுக்குவழி (3) சண்டே போஸ்ட் (3) சம நீதி (3) சரித்திரக் கதைகள் (3) ஜாக்டோ ஜியோ (3) ஞானாலயா (3) தலைப்புச் செய்தி (3) பதிப்பகங்கள் (3) பாரதியார் (3) பொதுத்துறை (3) ராமச்சந்திர குகா (3) லயோலா (3) வாசிப்பும் யோசிப்பதும் (3) CONகிரஸ் (2) Defeat Congress (2) February 21 (2) The Sunlit Path (2) YSR (2) Yatra (2) அம்பலம் (2) கோமாளிகள் கையில் அரசியல் (2) சமுதாய வீதி (2) சிறுபான்மை அரசியல் (2) சுத்தானந்த பாரதியார் (2) செய்திக்கலவை (2) ஜெகசிற்பியன் (2) ஜெயமோகன் (2) தமிழ் வெப் சீரீஸ் (2) தலைமைப் பண்பு (2) தாலிபான் (2) திரைப்படங்கள் (2) நேரு (2) பழக்கங்களின் அடிமை (2) பிரியங்கா வாத்ரா (2) மம்மூட்டி (2) யாத்ரா (2) ராஜமுத்திரை (2) வரலாறும் படிப்பினையும் (2) வி.திவாகர் (2) CPIM (1) Darshan day message (1) EVM சர்ச்சை (1) The R Document (1) Three C's (1) accidental PM. (1) ma foi (1) ஆர்தர் ஹெய்லி (1) இன்ஸ்டன்ட் போராளிகள் (1) கணக்கன் கட்டுரைகள் (1) கந்துவட்டி ஏகாதிபத்தியம் (1) காந்தியா காண்டியா (1) காரடையான் நோன்பு (1) கிறித்தவம் (1) கொத்தமங்கலம் சுப்பு (1) சகலகலா வல்லி (1) சீனி விசுவநாதன் (1) சொன்னது சரிதானா (1) ஜமீன் (1) ஜெயிப்பதற்கு ஒரு எட்டு (1) ஜெயிப்பது நிஜம் (1) திருக்குவளைச் சோளர்கள் (1) ந.பிச்சமூர்த்தி (1) நித்திலவல்லி. நா.பார்த்தசாரதி (1) படித்தான் பரிந்துரை (1) பிரிவினைக் கும்பல்கள் (1) புதுமைப் பித்தன் (1) புத்தக்ங்கள் (1) புள்ளிராசா வங்கி (1) பொய்கள் (1) மான நஷ்டம் (1) மாற்றங்களை எதிர்கொள்வது (1) மு.வரதராசன் (1) ராபர்ட் லட்லம் (1) ஹிந்து காஷ்மீர் (1)