Tuesday, June 11, 2019

இன்றைக்கிருக்கும் காங்கிரஸ் ...! ஒருபார்வை!

தமிழிசை ஒரு குடும்ப அக்கப்போரில் சிக்கினார் என்ற செய்திக்காகவே முந்தைய பதிவைக் கொஞ்சம் அதிக மக்கள் பார்த்திருக்கிறார்கள் போல. ஆனால் அதில் சந்தோஷப் படுவதற்கென்ன இருக்கிறது? தமிழிசை மகன் பிஜேபி ஆதரவாளரோ, உறுப்பினரோ இல்லை  என்பதையும் சேர்த்துப் பார்த்தால் இங்கே ஊடகங்களின் உருட்டி விளையாடுகிற பொம்மையாகத்தான் தமிழிசை இன்னமும் இருக்கிறார். இதில் பெருமைப்பட்டுக் கொள்ள, யாருக்கு  என்ன தகுதி இருக்கிறது?


இந்த உப்புப்பெறாத விஷயத்தை ஊதிப்பெரிதாக்குகிற ஊடகங்கள் வயநாடு தொகுதியில் ராகுல் காண்டி முஸ்லிம் வாக்குகளில் மட்டும்தான் ஜெயித்தார் என்று அசாதுதீன் ஒவைசி உடைத்துச் சொல்லியிருப்பதைப் பேசுவார்களா என்று கேளுங்களேன்!

  
கொஞ்சம் சுவாரசியமான அக்கப்போர் என்பதற்கு மேல் இதில் புதிதாக, ஏற்கெனெவே தெரியாத விஷயம் ஏதுமில்லை.

இதைவிட  கொஞ்சம் அர்த்தமுள்ள, நடப்பு விவகாரங்களைத் தெரிந்து கொள்கிற மாதிரி ஒரு விவாதம் கரண் தாப்பருடன்!  


இங்கே காங்கிரஸ் சார்புடன் பேசுகிற சித்தார்த்  வரதராஜன் (The Wire) முதல் ஹிந்துஸ்தான் டைம்சின் வினோத் ஷர்மா, அப்புறம் கர்நாடக காங்கிரசின் வீரப்ப மொய்லி எல்லோருமாக அலசு அல்சென்று அலசி.......? என்ன முடிவுக்கு வந்தார்களாம்?  தானோ பிரியங்காவோ காங்கிரஸ் தலைவராக இருக்க மாட்டோம் என்று ராகுல் காண்டி சொல்வது எப்படியிருக்கிறதாம்? கரண் தாப்பர் சொல்கிற மாதிரி சோனியாG & வாரிசுகள் தான் பிரச்சினையே! சோனியாG & வாரிசுகள் தான் தீர்வே என்றா?

காலாவதியாகிப்போய்விட்ட காங்கிரஸ் பிராண்டை  எவர் வந்தாலும் தூக்கிச்சுமக்க முடியாது, புத்துயிர் தரவும் முடியாது என்பது ஏனோ விவாதம் செய்கிற எவருக்கும் உறைக்கவே மாட்டேன் என்கிறது!  

இந்திய நாட்டின் விடுதலைக்காகப் போராடிய ஒரிஜினல் காந்தி இருந்த காங்கிரஸ் இல்லை இன்றைக்கிருப்பது!

ஒரிஜினல் காந்தியால் பட்டத்து இளவரசர் போலவே நடத்தப பட்ட ஜவஹர்லால் நேரு, ஏதோ போனால்போகிறதென்று மாற்றுக் கருத்தையும் சகித்துக் கொண்டமாதிரி,பாமர ஜனங்களுக்கு அரசியலில் என்ன நடக்கிறதென்றே தெரிய விடாமல் வைத்திருந்த நேரு காலத்துக் காங்கிரஸ் கூட இல்லை இன்றைக்கிருப்பது!

எதிர்க்கருத்தா? குரல்வளையை நெறிப்பேனென்று மமதையோடு கட்சியை உடைத்து, துதிபாடிகளின் கும்பல் தான் இண்டிகேட் என்றும், தேர்தல் ஆணையத்தில் சில மாய்மாலங்களை செய்து தாங்களே இந்திய தேசிய காங்கிரஸ் என்று ஆக்கிக் கொண்ட இந்திரா காலத்துக் காங்கிரஸ் கூட இல்லை இன்றைக்கிருப்பது!

இந்திரா மரணத்துக்குப் பின்னால் அரியணை ஏற்றப்பட்டு பிரதமரானாலும், மனைவியும் அவரது உறவினர்களும் சேர்ந்து bofors ஊழல் என்று ஆரம்பித்ததைக் கண்டும்காணாமல் இருந்த ராஜீவ் காண்டி காலத்துக் காங்கிரஸ் கூட இல்லை இன்றைக்கிருப்பது!

நரசிம்மராவைத் துரத்த சீதாராம் கேசரியைப் பயன்படுத்திக் கொண்டு பின்னர் அவரையும் தூக்கியெறிந்துவிட்டுத் தானே காங்கிரஸ் தலைவராய் 18 வருடங்கள்  அமர்ந்து கொண்ட சோனியாG காங்கிரசின் எச்சம் தான் இன்றைக்கிருப்பது.  

மகனைத் தலைவராக்கி 2 வருடங்கள் தானாகிறது. அதற்குள் நாட்டின் பெரும்பாலான மாநிலங்களில் காங்கிரஸ் காணாமல் போய்விட்டது என்றால் இன்றைக்கிருக்கும் காங்கிரசின் இறுதிநாட்கள் நெருங்கிவிட்டன என்று சொல்லாமல் வேறென்ன சொல்வீர்களாம்?

மீண்டும் சந்திப்போம்.                   

No comments:

Post a Comment

இப்போது பார்த்துக் கொண்டிருப்பது

#கொங்குநாடு முன்களப்பிணியாளர் செந்தில் கதறுகிறார்!

செய்தி எந்த அளவுக்கு நிஜம் என்று தெரியாத போதிலும் தினமலர் இன்று கொளுத்திப்போட்டது, News 18 சேனலில் இருந்து வெளியேற்றப்பட்ட செந்தில் முதல் நி...

முப்பது நாட்களில் அதிகம் பார்த்தது இதைத்தானாம்

இப்படியும் வகைப்படுத்தலாம் Labels

அரசியல் (327) அனுபவம் (253) நையாண்டி (113) 2019 தேர்தல் களம் (91) செய்திகளின் அரசியல் (88) எண்ணங்கள் (49) புத்தகங்கள் (46) மனித வளம் (30) செய்திகள் (28) எது எழுத்து (23) ரங்கராஜ் பாண்டே (23) சிறுகதை (21) தொடரும் விவாதம் (18) அரசியல் களம் (16) கமல் காசர் (15) விமரிசனம் (15) தேர்தல் சீர்திருத்தங்கள் (14) புத்தக விமரிசனம் (14) ஏன் திமுக கூட்டணி வேண்டாம் (13) Change Management (12) ஊடகப் பொய்கள் (12) திராவிட மாயை (12) பதிவர் வட்டம் (12) அக்கம் பக்கம் என்ன சேதி (11) ஊடகங்கள் (11) கூட்டணிப் பாவங்கள் (10) எண்டமூரி வீரேந்திரநாத் (9) காமெடி டைம் (9) புனைவு (9) ஸ்ரீ அரவிந்த அன்னை (9) ஆங்கிலப் புதினங்கள் (8) இடதுசாரிகள் (8) பானாசீனா (8) (சு)வாசிக்கப்போறேங்க (7) எங்கே போகிறோம் (7) ஏய்ப்பதில் கலைஞன் (7) கண்டு கொள்வோம் கழகங்களை (7) சுய முன்னேற்றம் (7) மீள்பதிவு (7) அன்னை எனும் அற்புதப் பேரொளி (6) ஏன் திமுக வேண்டாம் (6) சமூக நீதி (6) சாண்டில்யன் (6) திராவிடப் புரட்டு (6) தேர்தல் முடிவுகள் (6) படித்ததில் பிடித்தது (6) புத்தகம் (6) ராகுல் காண்டி (6) வாசிப்பு அனுபவம் (6) ஸ்ரீரங்கம் வி மோகனரங்கன் (6) இர்விங் வாலஸ் (5) உதிரிகளான இடதுகள் (5) காங்கிரஸ் (5) தரிசன நாள் (5) நா.பார்த்தசாரதி (5) மாற்றங்களுக்குத் தயாராவது (5) மோடி மீது பயம் (5) Tianxia (4) அஞ்சலி (4) ஏன் காங்கிரசும் வேண்டாம் (4) ஒளி பொருந்திய பாதை (4) கவிதை நேரம் (4) சீனா (4) சீனா எழுபது (4) ஜெயகாந்தன் (4) தி.ஜானகிராமன் (4) பேராசையின் எல்லை எது (4) மாற்று அரசியல் (4) ஸ்ரீ அரவிந்தர் (4) உதிரிக் கட்சிகள் (3) காஷ்மீர் பிரச்சினை (3) குறுக்குவழி (3) சண்டே போஸ்ட் (3) சம நீதி (3) சரித்திரக் கதைகள் (3) ஜாக்டோ ஜியோ (3) ஞானாலயா (3) தலைப்புச் செய்தி (3) பதிப்பகங்கள் (3) பாரதியார் (3) பொதுத்துறை (3) ராமச்சந்திர குகா (3) லயோலா (3) வாசிப்பும் யோசிப்பதும் (3) CONகிரஸ் (2) Defeat Congress (2) February 21 (2) The Sunlit Path (2) YSR (2) Yatra (2) அம்பலம் (2) கோமாளிகள் கையில் அரசியல் (2) சமுதாய வீதி (2) சிறுபான்மை அரசியல் (2) சுத்தானந்த பாரதியார் (2) செய்திக்கலவை (2) ஜெகசிற்பியன் (2) ஜெயமோகன் (2) தமிழ் வெப் சீரீஸ் (2) தலைமைப் பண்பு (2) தாலிபான் (2) திரைப்படங்கள் (2) நேரு (2) பழக்கங்களின் அடிமை (2) பிரியங்கா வாத்ரா (2) மம்மூட்டி (2) யாத்ரா (2) ராஜமுத்திரை (2) வரலாறும் படிப்பினையும் (2) வி.திவாகர் (2) CPIM (1) Darshan day message (1) EVM சர்ச்சை (1) The R Document (1) Three C's (1) accidental PM. (1) ma foi (1) ஆர்தர் ஹெய்லி (1) இன்ஸ்டன்ட் போராளிகள் (1) கணக்கன் கட்டுரைகள் (1) கந்துவட்டி ஏகாதிபத்தியம் (1) காந்தியா காண்டியா (1) காரடையான் நோன்பு (1) கிறித்தவம் (1) கொத்தமங்கலம் சுப்பு (1) சகலகலா வல்லி (1) சீனி விசுவநாதன் (1) சொன்னது சரிதானா (1) ஜமீன் (1) ஜெயிப்பதற்கு ஒரு எட்டு (1) ஜெயிப்பது நிஜம் (1) திருக்குவளைச் சோளர்கள் (1) ந.பிச்சமூர்த்தி (1) நித்திலவல்லி. நா.பார்த்தசாரதி (1) படித்தான் பரிந்துரை (1) பிரிவினைக் கும்பல்கள் (1) புதுமைப் பித்தன் (1) புத்தக்ங்கள் (1) புள்ளிராசா வங்கி (1) பொய்கள் (1) மான நஷ்டம் (1) மாற்றங்களை எதிர்கொள்வது (1) மு.வரதராசன் (1) ராபர்ட் லட்லம் (1) ஹிந்து காஷ்மீர் (1)