Saturday, May 11, 2019

உளறுவாயர்களின் கூடாரம் காங்கிரஸ்!

நரேந்திர மோடியை நக்கல் செய்வது ஒருபுறம் இருந்தாலும் கார்டூனிஸ்ட் சதீஷ் ஆசார்யா என் மிகுந்த அபிமானத்துக்கு உரியவராக இருப்பது இதனால் தான்! 




1984 சீக்கியர் படுகொலையோடு போபால் விஷவாயு சம்பவமும் தான் ராஜீவ் காண்டி ஆள ஆரம்பித்ததன் அடையாளம் என்றால் காங்கிரஸ்காரனுக்கு எப்படியிருக்கும்? அம்புப்படுக்கையில் படுக்க காங்கிரசில் எவரும் பீஷ்மர் இல்லையே?!  காங்கிரஸ் கட்சி உளறுவாயர்களின் கட்சிதான் என்று டிக்கிசிங்  மணிசங்கர் அய்யர் என்று  ஆரம்பித்து, இன்று பப்பு, பப்பியோடு சாம் பிட்ரோடாவில் வந்து நிற்கிறது. ராகுலைத் தூக்கிப் பிடித்த சந்திரபாபு நாயுடு கூட மம்தா பானெர்ஜி பக்கம் சாய்ந்துவிட்டார் என்று செய்திகள் வருகின்றன.


சந்திரபாபு நாயுடுவின் இருப்பையே கேள்விக்குள்ளாக்குகிற விதத்தில் முன்னாள் நண்பரும்  பின்னாள் அரசியல் எதிரியுமான YS ராஜசேகர ரெட்டியின் மகன் YS ஜெகன் மோகன் ரெட்டியின் வளர்ச்சி பயமுறுத்திக் கொண்டிருக்கிறது. அகட விகடங்களை எல்லாம் செய்து பார்த்த பிறகும் கூட, நாயுடு இந்தத் தேர்தலில் தேறுவது கடினம் தான் போல! காங்கிரசுடன் கூட கூட்டு சேரத்தயார் பழசையெல்லாம் மன்னித்துவிட்டேன் என்று ஜெகன்மோகன் சமிக்ஞை காட்டியிருப்பதில், காங்கிரசுக்கு ஒரே ஒரு சங்கடம்தான்! தெலங்கானா முதல்வர் KCR உடன் ஜெகன்மோகன் நெருக்கமாக இருப்பது உறுத்துகிறதாம்! 


ஆனந்த விகடன் முதலான  பழைய ஊடகங்கள் மட்டும் தான் கப்சாக்களாக அள்ளி விட வேண்டுமோ? டிஜிடல் திண்ணை என்று  மின்னம்பலம் தளத்திலிருந்தும் இது மாதிரி 200+ வீடியோக்கள்! என்ன சொல்ல? நிச்சயமாக ரெண்டு முருகன் மீது அனுதாபம் வரவில்லை, அவ்வளவுதான்! 


எவ்வளவோ தாங்கிக்கொண்டோம், . இதைமட்டும் தாண்டிப் போக மாட்டோமா? காசுக்கு கூவுகிற ஊடகக்காரர்கள் ஒன்று கூடி இங்கே உத்தர பிரதேசத்தில் பிரியங்கா வாத்ரா impact என்ன என்று ஆராய்கிறார்களாம்! மே 23 அன்று இந்தக் கும்பலுக்கு விசேஷமாகப் பொங்கல் வைக்கலாமா அல்லது இப்போதே தகவல்களை சேகரித்து பொங்கல் வைத்து விடலாமா? 

காங்கிரஸ் கட்சி உளறுவாயர்களின் கட்சிதான் என்று டிக்கிசிங்  மணிசங்கர் அய்யர் என்று  ஆரம்பித்து, இன்று பப்பு, பப்பியோடு சாம் பிட்ரோடாவில் வந்து நிற்கிறது என்று ஆரம்பத்திலேயே முடித்தாயிற்று! திரும்பத் திரும்ப அதையே சொல்லிக் கொண்டே இருக்கவேண்டுமா?
                   

4 comments:

  1. மணி சங்கர் ஐயர் எங்கே இருக்கிறார்? ஒரு செய்தியும் இல்லையே...... வாட்சப் தகவல்கள் வேறு செய்தியைச் சொல்கின்றன

    ReplyDelete
    Replies
    1. பாண்டேவைக் கேளுங்கள் நிகழ்ச்சியில் ஒரு நேயர் கூட உங்களை போல மணிசங்கர் அய்யரைப் பற்றி ஆவலோடு விசாரித்தார் நெல்லை! பாண்டே சொன்னது இது: இங்கேதான் எங்கேயோ இருக்கிறார் பத்திரமாக இருக்கிறார்!

      ஊடகங்களிடம் முன்புபோல உளறாமல் பத்திரமாக இருக்கிறாரோ? :))

      Delete
  2. ப்ரணாய் ராய் சொல்வதில் அர்த்தம் இருப்பதாகத்தான் நான் நினைக்கிறேன். அவருடைய ரெபுடேஷன் இருக்கிறது. மே 23 பார்க்கலாம்.

    ReplyDelete
    Replies
    1. ப்ராணாய் ராய் உள்ளிட்டு இந்தவிவாதத்தில் பங்குகொண்டவர்களுடைய ஒரே தகுதி காங்கிரசிடம் விலைபோனவர்கள் என்பது மட்டும் தானே?!

      Delete

இப்போது பார்த்துக் கொண்டிருப்பது

#கொங்குநாடு முன்களப்பிணியாளர் செந்தில் கதறுகிறார்!

செய்தி எந்த அளவுக்கு நிஜம் என்று தெரியாத போதிலும் தினமலர் இன்று கொளுத்திப்போட்டது, News 18 சேனலில் இருந்து வெளியேற்றப்பட்ட செந்தில் முதல் நி...

முப்பது நாட்களில் அதிகம் பார்த்தது இதைத்தானாம்

இப்படியும் வகைப்படுத்தலாம் Labels

அரசியல் (327) அனுபவம் (253) நையாண்டி (113) 2019 தேர்தல் களம் (91) செய்திகளின் அரசியல் (88) எண்ணங்கள் (49) புத்தகங்கள் (46) மனித வளம் (30) செய்திகள் (28) எது எழுத்து (23) ரங்கராஜ் பாண்டே (23) சிறுகதை (21) தொடரும் விவாதம் (18) அரசியல் களம் (16) கமல் காசர் (15) விமரிசனம் (15) தேர்தல் சீர்திருத்தங்கள் (14) புத்தக விமரிசனம் (14) ஏன் திமுக கூட்டணி வேண்டாம் (13) Change Management (12) ஊடகப் பொய்கள் (12) திராவிட மாயை (12) பதிவர் வட்டம் (12) அக்கம் பக்கம் என்ன சேதி (11) ஊடகங்கள் (11) கூட்டணிப் பாவங்கள் (10) எண்டமூரி வீரேந்திரநாத் (9) காமெடி டைம் (9) புனைவு (9) ஸ்ரீ அரவிந்த அன்னை (9) ஆங்கிலப் புதினங்கள் (8) இடதுசாரிகள் (8) பானாசீனா (8) (சு)வாசிக்கப்போறேங்க (7) எங்கே போகிறோம் (7) ஏய்ப்பதில் கலைஞன் (7) கண்டு கொள்வோம் கழகங்களை (7) சுய முன்னேற்றம் (7) மீள்பதிவு (7) அன்னை எனும் அற்புதப் பேரொளி (6) ஏன் திமுக வேண்டாம் (6) சமூக நீதி (6) சாண்டில்யன் (6) திராவிடப் புரட்டு (6) தேர்தல் முடிவுகள் (6) படித்ததில் பிடித்தது (6) புத்தகம் (6) ராகுல் காண்டி (6) வாசிப்பு அனுபவம் (6) ஸ்ரீரங்கம் வி மோகனரங்கன் (6) இர்விங் வாலஸ் (5) உதிரிகளான இடதுகள் (5) காங்கிரஸ் (5) தரிசன நாள் (5) நா.பார்த்தசாரதி (5) மாற்றங்களுக்குத் தயாராவது (5) மோடி மீது பயம் (5) Tianxia (4) அஞ்சலி (4) ஏன் காங்கிரசும் வேண்டாம் (4) ஒளி பொருந்திய பாதை (4) கவிதை நேரம் (4) சீனா (4) சீனா எழுபது (4) ஜெயகாந்தன் (4) தி.ஜானகிராமன் (4) பேராசையின் எல்லை எது (4) மாற்று அரசியல் (4) ஸ்ரீ அரவிந்தர் (4) உதிரிக் கட்சிகள் (3) காஷ்மீர் பிரச்சினை (3) குறுக்குவழி (3) சண்டே போஸ்ட் (3) சம நீதி (3) சரித்திரக் கதைகள் (3) ஜாக்டோ ஜியோ (3) ஞானாலயா (3) தலைப்புச் செய்தி (3) பதிப்பகங்கள் (3) பாரதியார் (3) பொதுத்துறை (3) ராமச்சந்திர குகா (3) லயோலா (3) வாசிப்பும் யோசிப்பதும் (3) CONகிரஸ் (2) Defeat Congress (2) February 21 (2) The Sunlit Path (2) YSR (2) Yatra (2) அம்பலம் (2) கோமாளிகள் கையில் அரசியல் (2) சமுதாய வீதி (2) சிறுபான்மை அரசியல் (2) சுத்தானந்த பாரதியார் (2) செய்திக்கலவை (2) ஜெகசிற்பியன் (2) ஜெயமோகன் (2) தமிழ் வெப் சீரீஸ் (2) தலைமைப் பண்பு (2) தாலிபான் (2) திரைப்படங்கள் (2) நேரு (2) பழக்கங்களின் அடிமை (2) பிரியங்கா வாத்ரா (2) மம்மூட்டி (2) யாத்ரா (2) ராஜமுத்திரை (2) வரலாறும் படிப்பினையும் (2) வி.திவாகர் (2) CPIM (1) Darshan day message (1) EVM சர்ச்சை (1) The R Document (1) Three C's (1) accidental PM. (1) ma foi (1) ஆர்தர் ஹெய்லி (1) இன்ஸ்டன்ட் போராளிகள் (1) கணக்கன் கட்டுரைகள் (1) கந்துவட்டி ஏகாதிபத்தியம் (1) காந்தியா காண்டியா (1) காரடையான் நோன்பு (1) கிறித்தவம் (1) கொத்தமங்கலம் சுப்பு (1) சகலகலா வல்லி (1) சீனி விசுவநாதன் (1) சொன்னது சரிதானா (1) ஜமீன் (1) ஜெயிப்பதற்கு ஒரு எட்டு (1) ஜெயிப்பது நிஜம் (1) திருக்குவளைச் சோளர்கள் (1) ந.பிச்சமூர்த்தி (1) நித்திலவல்லி. நா.பார்த்தசாரதி (1) படித்தான் பரிந்துரை (1) பிரிவினைக் கும்பல்கள் (1) புதுமைப் பித்தன் (1) புத்தக்ங்கள் (1) புள்ளிராசா வங்கி (1) பொய்கள் (1) மான நஷ்டம் (1) மாற்றங்களை எதிர்கொள்வது (1) மு.வரதராசன் (1) ராபர்ட் லட்லம் (1) ஹிந்து காஷ்மீர் (1)