Thursday, May 23, 2019

ஆரம்பிச்சுட்டாங்கைய்யா! உளறலும் கிறுத்திருவமும்!

தமிழிசை பேசாமல் இருந்தால் நன்றாக இருந்திருக்கும்! இப்படிப் பார்க்கிறவர்களைப் புலம்ப வைக்கிற அளவுக்கு டாக்டர் யக்கோவ் பேச்சு இருக்கிறது! #உளறல் 

ஆபத்தில்லாத  உளறலுக்கும் விஷம்கலந்து பேசுகிற பேச்சுக்கும் தமிழகத்தில் எவரும் மெனெக்கெட்டு வித்தியாசம் பார்ப்பதில்லை என்பதால் பீட்டர் அல்போன்ஸ் இஷ்டத்துக்கும் கலந்துகட்டி அடித்து விடுகிறார்.


காங்கிரஸ் திமுக கூட்டணியைத்   தவிர்த்து, தமிழ்நாட்டுக்கு வேறெங்கிருந்து ஆபத்து வரப்போகிறதாம்? பீட்டர் அல்போன்ஸ் அளந்துவிடுகிறார். காங்கிரஸ்  ஏழைகளின் கட்சியாகி விட்டதா என்ன? சோனியா குடும்பத்திடம் இல்லாத பணமா? சரிக்கு சமமாக அப்பச்சியிடம் இல்லாத பணமா?


உளறல்,  கிறுத்திருவம் தவிர இவைகளை ஊதி ஊதிப் பெரிதாக்குகிற ஊடகப்பொய் முகங்களை என்ன செய்வதாக இருக்கிறோம்?

என்ன சொல்கிறீர்கள் என்பதைத் தெரிந்துகொள்ள ஆவலாக இருக்கிறேன்.
       

14 comments:

  1. பொய் முக ஊடகங்களைப் புறக்கணிக்க வேண்டும்...

    ReplyDelete
    Replies
    1. வாருங்கள் துரைராஜு சார்! ஊடகப் பொய்களை இனம் கண்டு புறக்கணிப்பது எப்படி என்பதையும் சேர்த்தே சொல்லியிருக்கலாமே!

      Delete
  2. பாஜக தமிழகத் தலைமையை மாற்றவேண்டிய நேரம் வந்து விட்டது!!!!!!

    ReplyDelete
    Replies
    1. பாஜகவின் உறுப்பினர்களை ஒருங்கிணைத்துச் செயல்படுகிற தலைமை இல்லை என்பது தமிழிசை தேர்ந்தெடுக்கப்பட்டபோதே தெரிந்ததுதான்! பழைய தலைவர்களுக்கும் புதிதாகத் தேர்ந்தெடுக்கப் பட்டவர்களுக்கும் சரியான understanding இல்லாமலேயே ஓடிக் கொண்டிருந்ததும் கூட!

      ஆனால் கட்சிக்குச் சம்பந்தமில்லாத என்போன்றவர்களுக்கே புரிந்த பலவிஷயங்கள் கட்சியினருக்குத் தெரியாதா? ஒரு ஏழெட்டு வருடங்களுக்கு முன்னால் பிஜேபி இன்னொரு காங்கிரசாகி வருகிறது என்று சிலபோக்குகளைக் சுட்டிக் காட்டிப் பதிவுகளில் எழுதிக் கொண்டிருந்தேன்.

      Delete
  3. தமிழாய்ந்த தமிழறிஞராய் மேடைப் பேச்சு வல்லுனராய் அவர் இருந்தால் நல்லது. அவர் சிறுபான்மை சமூகத்தைச் சேர்ந்தவராய் இருந்தால் இன்னும் நல்லது.

    ReplyDelete
    Replies
    1. ஜீவி சார்! ஒரு கட்சியின் மாநிலக்கிளையைத் தலைமை தாங்கி வழிநடத்த தமிழாய வேண்டாம் மேடைப்பேச்சு முத்தண்ணாவாக இருக்க வேண்டாம் தலைமைதாங்குகிறவர் சிறுபான்மையா அல்லவா என்பதுகூட முக்கியமில்லை.

      கட்சித் தொண்டர்கள், ஆதரவாளர்கள் நம்பிக்கையைப் பெற்றவராக இருந்தாலே போதுமென்று நான் நினைக்கிறேன். பிஜேபியும் ஒரு cadre based party அதில் குறுகிய கால ஆதாயத்துக்காக வெளியாட்கள் நுழைக்கப்படும் போது தொண்டர்களுடைய ஆதரவு, நம்பிக்கையைப் பெறுவது மிகவும் கடினம்.

      Delete
    2. யரை நியமித்தாலும் கட்சித் தொண்டர், ஆதரவாளர்கள் என்ன பெரிசாய் சொல்லி விடப் போகிறார்கள்.

      தமிழ் மக்கள் ஏற்றுக் கொள்ளக்கூடிய (அல்லது அவர்களைக் கவரக் கூடிய) தலைமையைச் சொல்லியிருக்கிறேன். இதெல்லாம் நடக்கப் போவதில்லை என்பதைத் தெரிந்து தான் சொன்ன நேயர் விருப்பம் இது.

      Delete
  4. சார்.... இந்த பீட்டர் அல்போன்ஸ் யார்? என்ன தொழில் செய்து கல்லூரிகளுக்கு அதிபர் ஆனார்? 'மதம்' என்ற ஒன்றைக் காட்டியே பெரிய ஆளாக, பணம் சேர்த்தாரா இல்லையா? இவருக்கு 'மதச்சார்பு' பற்றிப் பேச என்ன யோக்கியதை இருக்கு? விகடனில் ஒரு முறை இவர் 'ரவுடித்தனம்' செய்தார் என்று வந்திருந்ததா இல்லையா?

    ReplyDelete
    Replies
    1. கிறுத்திருவம் என்ற வார்த்தைக்கே அதுதானே அர்த்தம் நெ.த !

      Delete
  5. பாஜகவின் வாக்கு வங்கி வளரவேணும் என்றால், அதன் தலைவர்களாக ப்ராமின்ஸ் இருக்கக்கூடாது. பாஜகவின் தொண்டர்களில் இந்துத்துவ எண்ணம் கொண்டவர்கள் கணிசம், அதிலும் நாடார் சமூகத்தவர் நிறைய உண்டு. இதுதான் தமிழிசை தலைவராக இருந்ததற்குக் காரணம். பாஜக தலைவராக இஸ்லாமிய சமூகத்தவர் அல்லது கிறிஸ்துவ சமூகத்தவர் வரவேண்டும் என்று நினைக்கிறேன். அத்தகைய தலைவர், தமிழகத்துக்கு எதிரானவற்றை மத்திய அரசு மேற்கொண்டால் சுட்டிக் காண்பிப்பவராக இருக்கணும், ஜால்ரா தட்டக்கூடாது. தமிழிசை வெறும் பேச்சுதான். செயலில் ஒன்றுமில்லை.

    ReplyDelete
  6. நெல்லை.. அப்படி வந்தாலே போதும்.. இங்கு வேறு மாதிரி அரசியல் பண்ணுவதற்கு வேலையே இருக்காது.

    எந்த அகில இந்திய கட்சிக்கும் தமிழ்நாட்டில் மக்கள் ஏற்றுக் கொள்கிற ஒரு தலைவர் இல்லாதது ஒரு குறை.
    அந்தக் குறைக்கான தீர்வு பல விஷயங்களுக்கு நிவாரணமாக இருக்கும். மக்கள் ஏற்றுக் கொள்கிற மாதிரி என்பது முக்கியம்.

    அதையாவது முன் கை எடுத்து இவர்கள் முதலில் செய்யட்டும்.

    இப்படி இன்னும் சில இருக்கின்றன. பூனைக்கு மணி கட்டுவார் இல்லை.

    ReplyDelete
    Replies
    1. நெல்லைத்தமிழன் சார்! பிஜேபி ஒரு cadre based party ஆக இருந்தது. இப்போதும் அப்படித்தானா என்பது புரியவில்லை. குறுகிய கால அரசியல் ஆதாயத்துக்காக எதிர்க்கட்சிகளில் அதிருப்தியாளர்களை வளைத்துப் போடுவது ஒரு எல்லைக்குமேல் ஜீரணிக்கமுடியாமல் போகும்.

      Delete
  7. தமிழ் நாட்டு அரசியலுக்கு பல விஷயங்கள் நடைமுறையில் நிஜமாகவே நடந்து தான் ஆகணும்ன்னு இல்லே.

    சும்மா ஷோ காட்டினா போதும். இங்கு வந்து 'வணக்கம்'ன்னு சொல்லி கைகூப்பினா போதும் ஜனங்க புளகாங்கிதம் அடைஞ்சுடுவாங்க.. பாவம், அந்தளவு மன உணர்வு கொண்டவர்கள். அப்படித் தான் இத்தனை காலமும் அ.இ.கட்சிக்காரங்க இங்கேயும் ஜனங்களைக் கவர்ந்திருக்காங்க. இதெல்லாம் கட்சிக்காரங்களுக்கு இன்னொருத்தர் சொல்லித் தான் தெரியணும்ன்னு இல்லே. இதெல்லாம் தெரிந்திருக்கவில்லை என்றால் அவங்க கட்சிக்காரங்களே இல்லை. இதான் இன்றைய அரசியல்.

    ReplyDelete
    Replies
    1. ஜீவி சார்! நீங்கள் சொல்கிற மாதிரி இங்கே தமிழ்நாட்டில் திராவிடப் பம்மாத்துகள் தான் இன்னமும் எடுபடுகின்றன என்பதால் அதை அப்படியே காப்பி பேஸ்ட் செய்து மாற்று அரசியல் வளர்க்க முடியாது.

      இந்தவிஷயத்தில் தொடர்ந்து பேசுவதற்கும் விவாதிப்பதற்கும் நிறைய இருக்கின்றன. நண்பர்கள் பங்கெடுத்தால் ஒரு விரிவான விவாதக்களமாகவே வளர்த்தெடுக்க முடியும்.

      Delete

இப்போது பார்த்துக் கொண்டிருப்பது

#கொங்குநாடு முன்களப்பிணியாளர் செந்தில் கதறுகிறார்!

செய்தி எந்த அளவுக்கு நிஜம் என்று தெரியாத போதிலும் தினமலர் இன்று கொளுத்திப்போட்டது, News 18 சேனலில் இருந்து வெளியேற்றப்பட்ட செந்தில் முதல் நி...

முப்பது நாட்களில் அதிகம் பார்த்தது இதைத்தானாம்

இப்படியும் வகைப்படுத்தலாம் Labels

அரசியல் (327) அனுபவம் (253) நையாண்டி (113) 2019 தேர்தல் களம் (91) செய்திகளின் அரசியல் (88) எண்ணங்கள் (49) புத்தகங்கள் (46) மனித வளம் (30) செய்திகள் (28) எது எழுத்து (23) ரங்கராஜ் பாண்டே (23) சிறுகதை (21) தொடரும் விவாதம் (18) அரசியல் களம் (16) கமல் காசர் (15) விமரிசனம் (15) தேர்தல் சீர்திருத்தங்கள் (14) புத்தக விமரிசனம் (14) ஏன் திமுக கூட்டணி வேண்டாம் (13) Change Management (12) ஊடகப் பொய்கள் (12) திராவிட மாயை (12) பதிவர் வட்டம் (12) அக்கம் பக்கம் என்ன சேதி (11) ஊடகங்கள் (11) கூட்டணிப் பாவங்கள் (10) எண்டமூரி வீரேந்திரநாத் (9) காமெடி டைம் (9) புனைவு (9) ஸ்ரீ அரவிந்த அன்னை (9) ஆங்கிலப் புதினங்கள் (8) இடதுசாரிகள் (8) பானாசீனா (8) (சு)வாசிக்கப்போறேங்க (7) எங்கே போகிறோம் (7) ஏய்ப்பதில் கலைஞன் (7) கண்டு கொள்வோம் கழகங்களை (7) சுய முன்னேற்றம் (7) மீள்பதிவு (7) அன்னை எனும் அற்புதப் பேரொளி (6) ஏன் திமுக வேண்டாம் (6) சமூக நீதி (6) சாண்டில்யன் (6) திராவிடப் புரட்டு (6) தேர்தல் முடிவுகள் (6) படித்ததில் பிடித்தது (6) புத்தகம் (6) ராகுல் காண்டி (6) வாசிப்பு அனுபவம் (6) ஸ்ரீரங்கம் வி மோகனரங்கன் (6) இர்விங் வாலஸ் (5) உதிரிகளான இடதுகள் (5) காங்கிரஸ் (5) தரிசன நாள் (5) நா.பார்த்தசாரதி (5) மாற்றங்களுக்குத் தயாராவது (5) மோடி மீது பயம் (5) Tianxia (4) அஞ்சலி (4) ஏன் காங்கிரசும் வேண்டாம் (4) ஒளி பொருந்திய பாதை (4) கவிதை நேரம் (4) சீனா (4) சீனா எழுபது (4) ஜெயகாந்தன் (4) தி.ஜானகிராமன் (4) பேராசையின் எல்லை எது (4) மாற்று அரசியல் (4) ஸ்ரீ அரவிந்தர் (4) உதிரிக் கட்சிகள் (3) காஷ்மீர் பிரச்சினை (3) குறுக்குவழி (3) சண்டே போஸ்ட் (3) சம நீதி (3) சரித்திரக் கதைகள் (3) ஜாக்டோ ஜியோ (3) ஞானாலயா (3) தலைப்புச் செய்தி (3) பதிப்பகங்கள் (3) பாரதியார் (3) பொதுத்துறை (3) ராமச்சந்திர குகா (3) லயோலா (3) வாசிப்பும் யோசிப்பதும் (3) CONகிரஸ் (2) Defeat Congress (2) February 21 (2) The Sunlit Path (2) YSR (2) Yatra (2) அம்பலம் (2) கோமாளிகள் கையில் அரசியல் (2) சமுதாய வீதி (2) சிறுபான்மை அரசியல் (2) சுத்தானந்த பாரதியார் (2) செய்திக்கலவை (2) ஜெகசிற்பியன் (2) ஜெயமோகன் (2) தமிழ் வெப் சீரீஸ் (2) தலைமைப் பண்பு (2) தாலிபான் (2) திரைப்படங்கள் (2) நேரு (2) பழக்கங்களின் அடிமை (2) பிரியங்கா வாத்ரா (2) மம்மூட்டி (2) யாத்ரா (2) ராஜமுத்திரை (2) வரலாறும் படிப்பினையும் (2) வி.திவாகர் (2) CPIM (1) Darshan day message (1) EVM சர்ச்சை (1) The R Document (1) Three C's (1) accidental PM. (1) ma foi (1) ஆர்தர் ஹெய்லி (1) இன்ஸ்டன்ட் போராளிகள் (1) கணக்கன் கட்டுரைகள் (1) கந்துவட்டி ஏகாதிபத்தியம் (1) காந்தியா காண்டியா (1) காரடையான் நோன்பு (1) கிறித்தவம் (1) கொத்தமங்கலம் சுப்பு (1) சகலகலா வல்லி (1) சீனி விசுவநாதன் (1) சொன்னது சரிதானா (1) ஜமீன் (1) ஜெயிப்பதற்கு ஒரு எட்டு (1) ஜெயிப்பது நிஜம் (1) திருக்குவளைச் சோளர்கள் (1) ந.பிச்சமூர்த்தி (1) நித்திலவல்லி. நா.பார்த்தசாரதி (1) படித்தான் பரிந்துரை (1) பிரிவினைக் கும்பல்கள் (1) புதுமைப் பித்தன் (1) புத்தக்ங்கள் (1) புள்ளிராசா வங்கி (1) பொய்கள் (1) மான நஷ்டம் (1) மாற்றங்களை எதிர்கொள்வது (1) மு.வரதராசன் (1) ராபர்ட் லட்லம் (1) ஹிந்து காஷ்மீர் (1)