Saturday, May 18, 2019

புருடாவிலும் கொஞ்சம் செய்தி! கமல் காசர்! அடடே!மதி

புருடா செய்திகளில்  விகடன் புருடாவுக்குத் தனி இடம் கொடுத்தே ஆகவேண்டும் என்கிற அளவுக்கு அத்தனை  ஸ்பெஷல்! எந்த நேரத்தில் உண்மையில் கொஞ்சம் தாராளமாகப்    பொய் கலந்து எழுதுவார்கள், எந்த நேரம் வடிகட்டின பொய்யில் கொஞ்சம் உண்மை கலந்து எழுதுவார்கள் என்பதைக் கணிக்கவே முடியாது. இந்த வார ஜூவியில் சக்திவேல் என்பவர் எழுதியிருக்கிற கூட்டணி குருமா ....இந்தியாவுக்கு சரியாக வருமா என்ற தலைப்பில் (பசியோடு பரோட்டா பொட்டலத்தைப் பார்த்துக் கொண்டே எழுதினாரோ?)  எழுதியிருக்கிற செய்திக் கட்டுரை மூக்கில் விரலை வைத்த தருணம்!

    அட்டைப்படத்துக்கும் பதிவுக்கும் சம்பந்தமில்லை 

ழக்கமாக தோழர்கள்தான் மூன்றாவது அணிக்கு முதல் கோஷம் எழுப்புவார்கள். ஆனால், இழந்த செல்வாக்கை மீட்டெடுக்க வேண்டிய கட்டாயத்தில் இருப்பதால், மூன்றாம் அணிக்கு அவர்கள் முழுக்குப் போட்டுவிட்டார்கள். இப்போது அதில் மும்முரமாக இருக்கிறார், சந்திரசேகர ராவ். அன்னாருக்கு மாநில அரசியல் போரடித்துவிட்டதுபோல... என்று அட்டகாசமாக ஆரம்பிக்கிறார் சக்திவேல். இப்படி சந்தோஷத்துடன் மேலே வாசிக்க ஆரம்பித்தால் அடுத்து வரும் வரிகளிலேயே சறுக்குகிறார். பிஜேபியும் சரி காங்கிரசும் சரி தலா 150 இடங்களை ஒட்டித்தான் வரும், மாநிலக் கட்சிகளுடைய கை  ஓங்கும் என்று ஆரூடம் சொல்லும்போதே, அரசியல் ஞானம் அல்லது புருடாவிடுவதில் விகடன் training பளிச்சிடுகிறது. 

ஆரூடம் ஆக, சந்திரசேகர ராவ், சந்திரபாபு நாயுடு ஆகியோர் தெற்கிலிருந்தும் மம்தா கிழக்கிலிருந்தும், மாயாவதி வடக்கிலிருந்தும் பிரதமர் கனவில் மிதக்கி றார்கள். பெரும்பான்மை கிடைக்காத பட்சத்தில், மம்தாவை காங்கிரஸும் மாயாவதியை பி.ஜே.பி-யும் களமிறக்கும் என்கிறார்கள். மே 23 இரவில் இருந்தே, அரங்கேற்றவேளை ஆரம்பித்துவிடும். என்று றெக்கை கட்டிப் பறக்கிறது 

கொஞ்சம் மூன்றாவது அணி அமைந்து யாரோ ஒரு மாநிலக் கட்சி ஆசாமி பிரதமராக இருந்து கொஞ்ச நாளிலேயே கவிழ்க்கப்பட்ட பழைய கதையோடு சொல்கிற இந்த ஒரு பத்தி  தான் என்னை இந்தச் செய்திக் கட்டுரையைக் கொஞ்சம் திரும்பப் பார்க்க வைத்தது.தேசியக் கட்சிகளுக்கு மாநிலப் பார்வை வேண்டும் என்று சொல்லும் மாநிலக் கட்சித் தலைவர்கள், தங்களுக்குத் தேசியப் பார்வை இருக்கவேண்டியது அவசியம் என்பதை மறந்துவிடுகிறார்கள். ‘மத்தியில் ஆண்டு கொண்டிருக்கும் கட்சியை விமர்சிப்பது மட்டுமே தேசியப் பார்வை ஆகிவிடாது’ என்பதை மாநிலக் கட்சிகள் உணர வேண்டும்.  


கமல் ஒரு    இரண்டும்கெட்டான் என்று புறந்தள்ளிவிட்டுப் போகத்தான்ஆசை! மனிதர் விட மாட்டேன் என்று பிடிவாதமாக மேலும் மேலும் அபத்தமாகப் பேசிக்கொண்டே போகிறாரே! 

  
இப்படிக் காங்கிரசால் டில்லியில் 7 தொகுதிகளும் போச்சு என்று பேசிய அதே அரவிந்த் கேசரிவாலு, இன்று அதே நாறவாயால் பிஜேபி நினைத்தால் 2 நிமிடங்களில் தன் கதையை முடித்துவிடும்; தன்னுடைய பாதுகாப்பு அதிகாரியாலேயே கொல்லப் படலாம் என்று ஒப்பாரிவைத்திருப்பது காமெடிக் கொடுமை! 



#AKவாலு assaasinate செய்யப்படுகிற அளவுக்கு worth ஆ? காமெடிப்பீசு!

மீண்டும் சந்திப்போம்.        

No comments:

Post a Comment

இப்போது பார்த்துக் கொண்டிருப்பது

#கொங்குநாடு முன்களப்பிணியாளர் செந்தில் கதறுகிறார்!

செய்தி எந்த அளவுக்கு நிஜம் என்று தெரியாத போதிலும் தினமலர் இன்று கொளுத்திப்போட்டது, News 18 சேனலில் இருந்து வெளியேற்றப்பட்ட செந்தில் முதல் நி...

முப்பது நாட்களில் அதிகம் பார்த்தது இதைத்தானாம்

இப்படியும் வகைப்படுத்தலாம் Labels

அரசியல் (327) அனுபவம் (253) நையாண்டி (113) 2019 தேர்தல் களம் (91) செய்திகளின் அரசியல் (88) எண்ணங்கள் (49) புத்தகங்கள் (46) மனித வளம் (30) செய்திகள் (28) எது எழுத்து (23) ரங்கராஜ் பாண்டே (23) சிறுகதை (21) தொடரும் விவாதம் (18) அரசியல் களம் (16) கமல் காசர் (15) விமரிசனம் (15) தேர்தல் சீர்திருத்தங்கள் (14) புத்தக விமரிசனம் (14) ஏன் திமுக கூட்டணி வேண்டாம் (13) Change Management (12) ஊடகப் பொய்கள் (12) திராவிட மாயை (12) பதிவர் வட்டம் (12) அக்கம் பக்கம் என்ன சேதி (11) ஊடகங்கள் (11) கூட்டணிப் பாவங்கள் (10) எண்டமூரி வீரேந்திரநாத் (9) காமெடி டைம் (9) புனைவு (9) ஸ்ரீ அரவிந்த அன்னை (9) ஆங்கிலப் புதினங்கள் (8) இடதுசாரிகள் (8) பானாசீனா (8) (சு)வாசிக்கப்போறேங்க (7) எங்கே போகிறோம் (7) ஏய்ப்பதில் கலைஞன் (7) கண்டு கொள்வோம் கழகங்களை (7) சுய முன்னேற்றம் (7) மீள்பதிவு (7) அன்னை எனும் அற்புதப் பேரொளி (6) ஏன் திமுக வேண்டாம் (6) சமூக நீதி (6) சாண்டில்யன் (6) திராவிடப் புரட்டு (6) தேர்தல் முடிவுகள் (6) படித்ததில் பிடித்தது (6) புத்தகம் (6) ராகுல் காண்டி (6) வாசிப்பு அனுபவம் (6) ஸ்ரீரங்கம் வி மோகனரங்கன் (6) இர்விங் வாலஸ் (5) உதிரிகளான இடதுகள் (5) காங்கிரஸ் (5) தரிசன நாள் (5) நா.பார்த்தசாரதி (5) மாற்றங்களுக்குத் தயாராவது (5) மோடி மீது பயம் (5) Tianxia (4) அஞ்சலி (4) ஏன் காங்கிரசும் வேண்டாம் (4) ஒளி பொருந்திய பாதை (4) கவிதை நேரம் (4) சீனா (4) சீனா எழுபது (4) ஜெயகாந்தன் (4) தி.ஜானகிராமன் (4) பேராசையின் எல்லை எது (4) மாற்று அரசியல் (4) ஸ்ரீ அரவிந்தர் (4) உதிரிக் கட்சிகள் (3) காஷ்மீர் பிரச்சினை (3) குறுக்குவழி (3) சண்டே போஸ்ட் (3) சம நீதி (3) சரித்திரக் கதைகள் (3) ஜாக்டோ ஜியோ (3) ஞானாலயா (3) தலைப்புச் செய்தி (3) பதிப்பகங்கள் (3) பாரதியார் (3) பொதுத்துறை (3) ராமச்சந்திர குகா (3) லயோலா (3) வாசிப்பும் யோசிப்பதும் (3) CONகிரஸ் (2) Defeat Congress (2) February 21 (2) The Sunlit Path (2) YSR (2) Yatra (2) அம்பலம் (2) கோமாளிகள் கையில் அரசியல் (2) சமுதாய வீதி (2) சிறுபான்மை அரசியல் (2) சுத்தானந்த பாரதியார் (2) செய்திக்கலவை (2) ஜெகசிற்பியன் (2) ஜெயமோகன் (2) தமிழ் வெப் சீரீஸ் (2) தலைமைப் பண்பு (2) தாலிபான் (2) திரைப்படங்கள் (2) நேரு (2) பழக்கங்களின் அடிமை (2) பிரியங்கா வாத்ரா (2) மம்மூட்டி (2) யாத்ரா (2) ராஜமுத்திரை (2) வரலாறும் படிப்பினையும் (2) வி.திவாகர் (2) CPIM (1) Darshan day message (1) EVM சர்ச்சை (1) The R Document (1) Three C's (1) accidental PM. (1) ma foi (1) ஆர்தர் ஹெய்லி (1) இன்ஸ்டன்ட் போராளிகள் (1) கணக்கன் கட்டுரைகள் (1) கந்துவட்டி ஏகாதிபத்தியம் (1) காந்தியா காண்டியா (1) காரடையான் நோன்பு (1) கிறித்தவம் (1) கொத்தமங்கலம் சுப்பு (1) சகலகலா வல்லி (1) சீனி விசுவநாதன் (1) சொன்னது சரிதானா (1) ஜமீன் (1) ஜெயிப்பதற்கு ஒரு எட்டு (1) ஜெயிப்பது நிஜம் (1) திருக்குவளைச் சோளர்கள் (1) ந.பிச்சமூர்த்தி (1) நித்திலவல்லி. நா.பார்த்தசாரதி (1) படித்தான் பரிந்துரை (1) பிரிவினைக் கும்பல்கள் (1) புதுமைப் பித்தன் (1) புத்தக்ங்கள் (1) புள்ளிராசா வங்கி (1) பொய்கள் (1) மான நஷ்டம் (1) மாற்றங்களை எதிர்கொள்வது (1) மு.வரதராசன் (1) ராபர்ட் லட்லம் (1) ஹிந்து காஷ்மீர் (1)